பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 8, 2014

உண்மைக்கு என்றும் மதிப்புண்டு ! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்


உண்மைக்  கென்றும்

மதிப்புண்டு,  நல்ல

உழைப்புக்  கென்றும்

விளைவுண்டு!

திண்மைக்  கென்றும்

துணிவுண்டு,  மனத்

தெளிவுக்  கன்பின்

கனிவுண்டு !


பொறுமைக்  கென்றும்

வழியுண்டு,  உளப்

பொறாமைக்  கென்றும்

நலிவுண்டு !

வெறுமைக்  கென்றும்

இழிவுண்டு ! ,  நல்ல  

விளைவுக்  கென்றும்

புகழுண்டு ! 

----------------------------------------------------
என்றும்  தமிழாய்  வாழும்

பாவலரேறு  பெருஞ்சித்திரனார்

கனிச்சாறு  - தொகுதி - 5

தென்மொழி  பதிப்பகம்

மேடவாக்கம்  கூட்டுச்சாலை

மேடவாக்கம்,  சென்னை  -  600 100
-------------------------------------------------------
94444  40449



Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment