உண்மைக் கென்றும்
மதிப்புண்டு, நல்ல
உழைப்புக் கென்றும்
விளைவுண்டு!
திண்மைக் கென்றும்
துணிவுண்டு, மனத்
தெளிவுக் கன்பின்
கனிவுண்டு !
பொறுமைக் கென்றும்
வழியுண்டு, உளப்
பொறாமைக் கென்றும்
நலிவுண்டு !
வெறுமைக் கென்றும்
இழிவுண்டு ! , நல்ல
விளைவுக் கென்றும்
புகழுண்டு !
----------------------------------------------------
என்றும் தமிழாய் வாழும்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கனிச்சாறு - தொகுதி - 5
தென்மொழி பதிப்பகம்
மேடவாக்கம் கூட்டுச்சாலை
மேடவாக்கம், சென்னை - 600 100
-------------------------------------------------------
94444 40449
0 comments:
Post a Comment