காந்தி ஜயந்தியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளும் ஆக்.2-ஆம் தேதி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 1989-23-ஆது விதியின்படி காந்தி ஜயந்தி தினத்தன்று மதுபான விற்பனை இல்லாத தினமக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி காந்தியடிகளின் பிறந்தநாளான வரும் 2-ஆம் மதுபான விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுவதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் உணவகங்கள் அனைத்தும் ஒருநாள் மூடப்படும். இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment