ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை, உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை,
எற்றைக்கும், எந்நிலத்தும், எந்த நிலையிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்; மணியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம்; பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று !
நன்றி :-
கனிச்சாறு - தொகுதி -3
தென்மொழி பதிப்பகம்
மேடவாக்கம் கூட்டுச்சாலை,
சென்னை - 600 100
---------------------------
94444 40449
0 comments:
Post a Comment