பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 7, 2014

என்ன பயன், என எண்ணிப் பார்க்கிலேன் ! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

 

எழுதி  எழுதிச்  செல்கின்  றேன்,  நான் !
என்ன  பயன்,  என  எண்ணிப்  பார்க்கிலேன்!
உழுது  விதைத்தவை  ஒருநாள்  விளையுமோ?
ஊமை  விதைகளாய்ச்  சாவியாய்  ஒழியுமோ?
புழுதியுள்  மறையுமோ?  பூக்களாய்  மறையுமோ?
அழுகியும்  உலுத்தும்  அமுங்கிப்  போகுமோ?
பழுதென்  றுரைத்து,  அவை  பழித்திடப்  படுமோ?
தொழுதொ  போற்றுமோர்  காலந்  தோன்றுமோ?
துயரச்  சுமைக்கொரு  தூண்என  நிற்குமோ?

பசித்த  அறிவினால்  புசித்திடு  வார்களோ?
பரபரப்  புணர்வொடு  கொறித்திடு  வார்களோ?
விசித்து  விசித்து,  நான்  அழுத  அழுகையும்
விடிய  விடிய,  நான்  வடித்த  கண்ணீரும்,
மக்கள்  இனத்தின்  கடைசி  மாந்தனின்
ஒக்க  அழுகையோ  டொன்றாய்  இணையுமோ?
ஒழுகுகண்  ணீரோ(டு)  ஓடிக்  கலக்குமோ?
என்ன  பயன்,  என  எண்ணிப்  பார்க்கிலேன் !    

நன்றி :-

கனிச்சாறு  - தொகுதி 7

தென்மொழிப் பதிப்பகம்

மேடவாக்கம் கூட்டுச்சாலை

சென்னை- 600 100
---------------------------
94444 40449

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment