அத்திமா முகவன் செய்ய வடியினைக் கமலம் போற்றிச்
சித்தரா ரூடம் தன்னில் செப்பிய பொருளா ராய்ந்து
சுத்தமா யெவர்க்கும் தோன்றச் சுருக்கமாய் நொண்டிச்சிந்தாய்
வித்தகர் அருளினாலே தமிழினால் விளம்பல் உற்றேன்
சித்தராரூடம் - சித்தர் எழுதிய ஆருடம் என்னும் நூல் (விஷவாகடம்)
அத்திமாமுகவன் - யானைமுகனாம் விநாயகர்
வித்தகர் - ஞானமுடையோர்
குமார நாயகன் துணை
தெட்சிணாமூர்த்தி கடாட்சம் முன்னிற்க வேணும்
கடாட்சம் - கடைக்கண் நோக்கு
திருமருதூர் வளரும் நாகலிங்கர் மருவுசித்த ராரூடப் பொருளிதனை புண்டரீகத் திலுறை வோன்படைத்ததிற் விண்டுரைக்கக் கேளுமினி நல்ல பாம்பு சாணார மூர்க்கன் புடையன் மண்டலி | 5 |
1 - 5. திருமருதூர் - ஆசிரியரின் ஊராகலாம் மகிதலம் - உலகம்; புண்டரீகம் - தாமரை விண்டு - விளக்கமாக;விரியன், வழலை, கொம்பேறி மூக்கன், சாணார மூர்க்கன், புடையன், மண்டலி, மண்ணுளி, சாரை - பாம்பு வகைகள் | |
வாணாளை வாட்டும் செய்யான் இருதலை தேள்புள்ளி வண்டு பூரம் பச்சோந்தி வாள்பல்லுப் பூனை புலிபிங்கவங்கம் அரணை நட்டுவக் காலி முதலியவை உரகத்தின் போநிறமும் சாதியும் | 10 |
6 - 10. புள்ளி - பல்லி; பூரம் - பூரான்; அரனை - பாம்பரனை எனப்படும் நட்டுவக்காலி - ஒரு நச்சுயிர் - நண்டு வாய்க்காலி என்ப சீவசெந்து - வாழும் விஷ உயிர்கள்; உரகம் - பாம்பு | |
படமெடுத்தாடும் குறியும், முட்டை யிட்டுப் விடமுறு தங்கக் குறியும் கடித்திடும் கால்கடி அடக்ககுறி வேகக் குறி சீலமுள்ள மணி மந்திரத்தால் கருடதியானத்தால் குருமலரடி வணங்கி வகை யாய்க் | 15 |
11-15. பரிசு - விதம்; தந்தம் - பல் குரு - நூலாசிரியரின் ஆசிரியராகிய சித்தர் குவலயம் - உலகம் | |
மருமலர்ப் பொருட்டுறைவோன் பயன்றருள் காசிபன் மனைவிய ரில்மிக்கான கத்துரு பேசிடில் பேரனந்தன் வாசுகி பிலத்த மகாபற்பன் சங்கு பாலன் குளிகன் இம் பாம்பின் சாதி தேசுகட் செவி அனந்தன் குளிகனும் செகத்தில் வேதியனென்று வகுத்தனரே | 20 |
16 - 20 மருமலர்ப் பொருட்டுறைவோன் - பிரமன் கத்துரு - காசிப முனிவரின் மனைவி. நாகங்களின் தாய். 104 பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் பெற்றவள். கட்செவி - பாம்பு அனந்தன், வாசுகி, தக்ஷன், கார்க்கோடன், பத்மன், மகாபற்பன், சங்குபாலன், குளிகன் - கத்துரு பெற்ற எட்டுப் பாம்புகள் நாகர் - பாம்புச் சாதியினர்; வேதியன் - அந்தணன் | |
வாசுகி சங்குபாலன் இதுரெண்டு மன்னவனாகு தேசுறு தற்கன் மகாபற்பன் ............ சூத்திரன் கார்க்கோடன் கனபற்பன் என்று மூத்திடும் ஆணாகும் பின்னாக மொழிந்த பாம்பின் உணவு,இரை எடுக்கும் நாள் ஆதித்த வாரம் அனந்தன் வாசுகி அடுத்த திங்கட்கிழமைக்கு இரை எடுக்கும் | 25 |
21 - 25 ஆதித்தவாரம் - ஞாயிற்றுக்கிழமை; இரை - உணவு | |
போதித்த செவ்வாய் தக்கன் கார்கோடன் விடங்கொண்ட துளையெயிற்றுப் பற்பன் படர்ந்துசென்று இரை எடுக்கும் தேடிமகா கூறுசனிக் கிழமை பகல் சங்குபாலன் பூநில மறிந்த பாப்பான் வாயுவும் | 30 |
26 - 30 போதித்த - கூறப்பெற்ற பொசித்திருக்கும் - உண்டிருக்கும் | |
அரசன் அருகங் கிழங்கு வண்டும் எடுத்தருந்த சூத்திரன் மீன்தவளை தண்ணீர்த் இருக்குமிடம் ஆடும் குறி சாத்திரம் சொன்னபடியே நாலு வகைச் வேதியன் கோவிலிலே மரத்தினில் வேந்தன் நீதியாய் வாழ்ந்திருக்கும் நால்வரும் | 35 |
31 - 35 அருகங்கிழங்கு - அருகம்புல்லின் கிழங்கு சாத்திரம் - பாம்பு சாஸ்திரம் நாலுவகைச்சாதி - அநதணர், அரசர், வணிகர்,சூத்திரர் நின்றாடும் குறி - பாம்பு ஆடும் திறம் | |
அண்ணாந்து பார்த்தாடும் வேதியன் அரசன் கண்ணாலே தெற்கும் வடக்கும் திசை வெள்ளாளன் பூமி தன்னையே பார்த்தாடும் படத்தின் குறி, நிறம், மணம் முள்ளாகும் பாம்பின்படம் தனில் வைத்த முத்திரையைச் சொல்லுகின்றேன் சித்திரமாக பார்ப்பான் படத்தில் சங்கு மன்னவன் படத்தினில் சக்கரம் பதித்திருக்கும் | 40 |
36 - 40 செவ்வே பார்த்தாடி - நேராகப் பார்த்தாடும் கண்ணாலே ... செட்டிப்பாம்பு - வணிகப் பாம்பு தன் கண்களை தெற்கும் வடக்கும் நோக்கியபடி ஆடும் வெள்ளாளன் - சூத்திரன்; சங்கு - சங்கு போன்ற குறி | |
காப்பான வில்லு வணிகன் படத்தினில் *(பூசுரன் ரெத்த நிறமாம் புரவலன் மாசில்லாச் சூத்திரநிறந் தீட்டிய அந்தணன் நாவிமணம் யிறையவர்க்கு வந்திடும் வைசியன் மணம் பாதிரி பூமணம் | 45 |
41 - 45 வில்லு - வில் போன்ற குறி; காராளன் - வேளாளர் புள்ளடி - பறவையின் அடிபோன்ற குறி *இவை பாண்டிச்சேரி ஏட்டுப் பிரதியில் கண்டவை பூசுரன் - அந்தணன்; ரெத்த - இரத்தத்தின் சிகப்பு நிறம் புரவலன் - அரசன்; செட்டி - வணிகன் மைநிறம் - கருப்பு நிறம்; நாவி - புனுகு மணம் வைசிகன் - வணிகன் | |
முட்டையிட்டுப் பொரித்திடல் சாதியிந்த வகைநாலும் ஆணும் பெண்ணும் நீதியாய் முட்டையிட்டுப் பொரித்திடும் காற்றுறு ஆடிமாதம் ஆணும் பெண்ணும் தோற்றிய கார்த்திகையினில் கருமுற்றிச் இருநூற்று நாற்பத் தெட்டுமுட்டை யிட்டும் | 50 |
46 - 50 பிணைந்து - கூடி; காற்றுறும் - காற்று மிகுந்த கார்த்திகை - கார்த்திகை மாதம்; உளைந்து - வருந்தி தொட்டேளு நாள் - தொட்டு ஏழு நாள் | |
பருகிடும் நாலுமுட்டை சாமுட்டை ஒருமித்திருபத் தேழாம் நாளில் விஷமேறும் குறி நாலாறு காலும் உண்டாய்த் தோன்றிய மேலேறு மாதித்தனைப் பார்த்தாடும் கொடுவிடம் வந்துதிக்கும் பால் சுரக்கும் | 55 |
51 - 55 சாமுட்டை - கெட்டுபோன முட்டை உச்சிதமாய் - தகுதியாய்; ஆதித்தன் - சூரியன் பால்சுரக்கும் கூறு - பால்சுரக்கும் மடிபோல் | |
கடுவிடம் நாலெயிற்றுக்கும் பேர் காளி மேல்வாய் அலகு தன்னில் அரவுக்கு நாலுபல்லுக்குந் துளையிருக்கும் கடியுறில் கடிவாயினிறங்கித் தொண்ணூற் றெட்டு அந்தமுள்ள படத்துரகம் தோன்றினால் | 60 |
56 - 60 காளி,காளத்திரி, யமன், யமன்தூதன் - பற்களின் பெயர்கள் வாயலகு - மேல்வாய் தொண்ணூற்றெட்டு மாத்திரை - 98 நொடி படத்துரகம் - பாம்புப் படம் | |
குதித்திடும் விடமெயிற்றி லிதுரெண்டும் கொண்டவா ளரவுக்குக் கண்டமென்பரால் கடிவாயின் குறி குதித்திடு மெயிற்றரவம் பல்லுத் தைக்கும் காளியென்னும் பல்லுத் தைத்தால் புள்ளடிபோல் மீளாத காளாத்ரி தைத்த வாயில் கோதாய் நமன்தோட்டிப் பல்லுத் தைத்தால் | 65 |
61 - 65 வடிவாகும் - வடியும்; பொசியும் - வடியும் தோட்டிப்பல் - கோடரி போன்ற பல் | |
தூதனென்ற பல்லுத் தைத்தால் வில்போன்ற பசியினில் பயத்தில் நொந்தால் கோபத்தால் இசையுறு தேவர் முனிவர் காலனிவர் செய்தநன்றி குன்றின பேரைப் பூருவ பையரவம் வந்து கடிக்கும் இதிலொரு | 70 |
66 - 70 வட்டெடுக்கும் - வடியும்; நொந்தால் - பாம்பு வருந்தினால் மெல்ல மிதித்தால் - மனிதர் மிதித்தால் வினை தாவலினால் - வினை வயத்தால் பூர்வசென்மம் - முற்பிறப்பு; வன்மம் - வைராக்கியம் பையரவம் - நச்சுப்பையினை உடைய பாம்பு | |
பல்லுரெண்டும் பட்டால் விசமாங் கிசத்தை வல்யெலும்பைப் பற்றியேறும் நாலு பல்லால் கால்கடி யொருபல்பட்டால் இரண்டு பல்லாய்க் மேல்பல்லு மூன்றும் பட்டால் கடிபட்ட முளைத்தபல் நாலும்பட்டால் அந்தக்கடி | 75 |
71 - 75 மாங்கிசம் - மாமிசம், சதை; வகிர்ந்தால் - பல்லால் கீறினால் | |
துளைப்பல்லில் ஒருபல் பட்டால் அந்தக்கடி இரண்டுபல்பட் டவிடத்தை மணிபதித் தேற்கு முரண்டுமூன்று பல்பட்டால் அந்தக் கடிகை அரவின்பல்நாலும் பட்டால் மணிமந்திர இரவினில் பாம்பு கடித்தால் அந்தக்கடி | 80 |
76 - 80 துசங்கட்டி - துவசங்கட்டி, கொடிகட்டி (உறுதியாக நின்று என்பதும் பொருள்) கைமூலிகை - மூலிகை மருந்து கலிக்கம் - கண்ணுக்கிடு மருந்து நசியம் - மூக்கில் இடும் மருந்து அவுஷதம் - அவுடதம், மருந்து வகை | |
உள்ளங்கால் உள்ளங்கை நெற்றி மார்பு தெள்ளுநாசிச் சந்தும் குதிக்கால் செவிபுறத் புன்னைபுளி மூங்கிலரசில் நாணலில் பின்னமுள்ள பரன்கோவில் பாழ் நந்தவனம் புத்துமடத்தில் ஏரிக்கரை | 85 |
81 - 85 நாசிச் சந்து - மூக்குத்துவாரம் புன்னை, புளி, மூங்கில், அரசு - மரவகைகள் பிணமிடு நிலம் - சுடுகாடு; புத்துமடம் - புற்றுள்ள இடம் | |
அந்திசந்தி முச்சந்தியில் உறக்கத்தில் மாயவரில் பாம்பு கடித்தால் தீராத ஆயிலியம் திருவோணம் மூலம் கார்த்திகை சென்ம நாள்அனு சென்மநாள் திரிசென்ம கன்மமும் நவமி சஷ்டி குளிகனில் | 90 |
86 - 90 மாயவரில் - திருமால் கோட்டம் பரணி, மகம், ஆயில்யம், திருவோணம், மூலம், கார்த்திகை, ஆதிரை, சுளகு, சித்திரை - நட்சத்திரங்கள சுளகு - விசாகநட்சத்திரம்; சோதி - நட்சத்திரம் குளிகன் - குளிகை நேரம் | |
தானோடிக் கிடந்திடனும் அந்தக் கடி கடித்தவாய் தடிக்கில் கொல்லும்-வீங்கியே குடித்த மருந்தெடுக்கில் கொல்லும்-கடித்தவாய் விடங்குதித் தொழுகில் கொல்லும்-நாவரண்டு படம்கொண்ட பொறியரவம் நாவெயிறும் | 95 |
91- 95 தடிக்கில் - வீங்கினால்; கண்டம் - கழுத்து குடித்த மருந்தெடுத்தல் - வாந்தி எடுத்தல் குமுறினும் - வெந்தால்; மெய்நடிக்கினும் - மெய் நடுங்குதல் எயிறு - பல்; உகிர் - நகம் | |
கறுத்திடில் கொல்லும் உரகம் சீறியே விறைத்திடில் கைகால்விரல் நிமர்ந்திரு விஷத்தின் குணம் நச்சரவில் ஆண் கடித்தால் மேல்நோக்கும் அச்சமில்லாமல் அடக்கில் வேர்வை மிகும் சூலாகி வயிறுளையும் முட்டையிட்ட | 100 |
96 - 100 நயனம் - கண் அலிப்பாம்பு - ஆண், பெண் இரண்டுமல்லாத பாம்பு கலித்தல் - மிகுதல் | |
மேலெயிற்றுக் காளி கடித்தால் வலதுகண் கடித்தவாய் வீக்கம் காணும் வேகமாயிளங் துடித்திடும் குட்டிப் பாம்பு கடித்திடில் கருநாகம் கடித்ததென்றால் உடனிரு ஒருநாகத் தடைவிதுவே பலவிடத்து | 105 |
101 - 105 காளி - பல்லின் பெயர் | |
முரட்டுப் பல்பொறி விரியன் சூல் கொண்டு கரட்டோணான் தேள்பூரம் நட்டுவாக் செய்யானுடன் பொறிவண்டு முதற்பல மெய்யான பெருவிரியன் கடித்திடில் வடிந்திடும் கடிவாயில் கண்ணுறங்கும் | 110 |
106 - 110 பொறிவண்டு - புள்ளியுடைய வண்டு கடுத்தெரிவு - கடுத்தலும், எரிச்சலும் இயக்கிடும் - இயங்குதல் | |
கடித்திடுமே ரத்தவெறியன் பல்லுபடக் கற்றளி விரியன் கடித்திடில் வயிற்றினில் மற்றுமுள்ள மூவிரியனும் கடித்திடில் வழலைக்கு வாய் வெளுத்தும் - கடிவாயில் அழலென மேனிவெதும்பி வேர்வை மிகுந்து | 115 |
111 - 115 காய்ந்தும் - வெந்தும் வழலை - பாம்பு அழலென - தீயென ஐந்திரண்டும் - பத்து விரல்களும் | |
மார்பினை அடைத்துக் கொல்லும் செவ்விரத்த தாரைவிட் டோடும் குருதி சீதளம் ஒழுகிடும் வேர்வைநீர் மூர்க்கனுக்குத் தான் பழகிய வாயும் கழுத்தும் திருகியே சுற்றுமயக் காராகில் இரு கண்ணும் | 120 |
116 - 120 இரத்தமண்டலி - பாம்பு சீதளம் - குளிர்ச்சி கடிதடம் - மறைவிடம் மதி மயக்கிடும் - அறிவு மயங்கிடும் 5 | |
பற்றுமுறுக் காராகில் உடல் முற்றும் நின்றூதும் உகிர் கருக்கும் தேளுக்கு என்றார் நட்டுவாக் காலி கடிக்கில் செய்யானேல் பற்பட்ட கடிவாய் வீங்கியே பொய்யாஞ் சோர்அரவுக்குக் காயத்தில் | 125 |
121 - 125 பூரம் - பூரான்; உகிர் - நகம் கடுத்தெரிக்கும் - கடுத்து எரியும் குமுறிடும் - வெந்திடும்; சதம் - நூறு பொய்யாஞ் சோர்அரவு - பொய்யான் என்னும் விஷப்பாம்பு | |
கறுத்திடும் சோர்வுக்குத் தேக முற்றும் ஒறுத்திடும் சிலந்தியெனில் கடிவாயில் வண்டுகடிக்(கு) உடல்முழுதும் சில நாளில் தண்டிய செவ் வட்டைகடித்தால் கடித்தவாய் இன்னமொரு கோடியுண்டாம் அவையெல்லாம் | 130 |
126 - 130 ஒறுத்திடும் - வதைக்கும்; மதர்த்திருக்கும் - உணர்வற்றிருக்கும் | |
பாம்பின் வயது பன்னகங்கள் வயதினையும் செயித்திடும் பாப்பானுக் காயிரத்தெட்டுப் பாராளும் வாய்ப்பான பதியார்க் கைந்நூறாம் என்று இருதலை மயிணன் செந்நாய் மயக்கோடி கருமயில் கரடிபன்றி செம்போத்துக் | 135 |
131 - 135 பன்னகம் - பாம்பு; பகருகிறேன் - கூறுகிறேன் பதியார் - வணிகர் இருதலை மணியன் - மணி பொருந்திய இரண்டு தலைகளை உடையதென்று சொல்லப்பெறும் பாம்பு செம்பொத்து - ஒரு வகைப் பறவை; கூகை - கோட்டான் | |
செயலுள்ள மான்குளம்பு வேழ முதல் வயதுநூற் றிருபத்துக்கும் சாகாமல் மண்மீது நூற்றிருபது பருவம் வாழ்ந்து ஒன்றான படம் சிறியதாய்ப் பறக்கும்போ தோற்றிய நாகமெட்டும் புவி விட்டுத் | 140 |
136 - 140 வேழம் - யானை; சத்துரு - பகை உயிர்கள் நூற்றிருபது பருவம் - நூற்றிருபது ஆண்டு சிகை - தலை உச்சி; மணி - நாகரெத்தினம் விண்ணாடர் வெற்பு - தேவருலகம் | |
போற்றிய பனிகோடிக் காவினுள் மானாகமென்னும் பேரரவங் கெருடற்கு தானாலு பல்லில் விடமும் இருகண்ணில் பாம்பின் ராசாளி என்றும் புகலுவர் தான்பெற்ற வயது குறையும் இருந்து பின் | 145 |
141 - 145 பனிகோடிக்கா - பாம்பு வாழும் காடு; கெருடற்கு - கருடனுக்கு சாலோகபதம் - இறைவன் உலகில் வாழும் பேறு | |
தூதன் வரும் குறிப்பு தூதன் வந்துநிற்கும் வடிவும் ஆருடம் நீதியுடன் சொல்லுகிறேன் ராகுவின் செய்யபூச் சூடிவரினும் கருந்துகில் கையில்தடி யூன்றிவரினும் கெடையா கண்ணில் நீர்வார்ந்து நிற்கினும் வாய்குழறி | 150 |
146 - 150 தூதன் - செய்தி கொணர்பவன்; ராகு - பாம்பு செய்ய - செம்மை; கயிறு - பாசக்கயிறு | |
விண்ணோக்கிப் பார்த்து நிற்கினும்-தூணினும் மண்ணினைக் கால்கொண்டு கீறினும் தரையில்கை எண்ணெய் இட்டுவரினும் பாரில் விழுந்து பாம்பின்பேர் முன்பு சொல்லினும் பாம்பின்பல் சோம்புடன் கொட்டாவி விடினும் மார்புசந்தில் | 155 |
151-155 விறகு-மரம்; எண்ணெய் இட்டு-எண்ணெய் தேய்த்து தூற்றி-உதறி | |
வந்தவன் உயர்ந்து நிற்கினும் நோயாளன் அந்தகன் கைகால் தரிபட்டோன் மூக்குக் இங்கிவர்கள் வந்து சொல்லினும் பூனைக்கண் பாங்குடன் முன்வந்த தூதன் ஆருடம் அருக்கினில் நல்லபாம்பு தேள்வழலை | 160 |
156 - 160 மயிர்களைந்தோன் - நாவிதன்; அந்தகன் - குருடன் தறிபட்டோன் - வெட்டுப்பட்டோன்; அருக்கு - அருகம்புல் | |
இருக்குநற் சாரைப்பாம்பு மாநாகம் பூரம்விரியன் சிலந்தி யிந்தப்படி ஆருடமிதுவாகும் தூதன் நிலை முன்னே வந்துநின்ற தூதன் மூக்கையும் பண்ணும் களம்தனைத் தொட்டிடில் வழலையாம் | 165 |
161 - 165 மாநாகம் - தலைநாகம்; செந்து - ஜெந்து, விஷ உயிர் களம் - கழுத்து; உரத்தை - மார்பை | |
சந்தாகில் மண்டலியாம் இரண்டுமுழந் தாளில் வந்தோன் இந்திரன் முதலாய் நாலுதிக்கும் ஈசன்அங்கு நிருதி திசைதனில் சொல்லில் வாசியுள்ள காற்றுத் திசையியம் பிடில் கீழ்த்திசை வரும் தூதன் அகரமுன் | 170 |
166 - 170 சந்து - மார்புப் பகுதி; அரணை - பாம்பரணை நிருதி - தென்மேற்குத் திசை; ஏந்திழையர் - பெண்கள் காற்றுத்திசை - வடமேல் திசை; யமன்திசை - தெற்கு | |
வாட்டமிலா மேற்றிசையில் மூன்றுபல் தென்திசை வரும் தூதன் இகரமுன் குன்றான வடதிசையில் மூன்றுபல் மேற்றிசை வரும்தூதன் உகரமுன் தோற்றுமிந்திரன் மூன்று தென்திசையில் | 175 |
171-175 குணதிசை-கிழக்கு | |
சோமனிலே வருதூதன் எகரமுன் பூமியிலிய மன்றிசையில் மூன்றுபல் எண்டிசை வருதூதன் ஒகரமுன் பண்டை வெள்ளை யாடைபுனைந்து வந்தொருவன் தூதன்சொன்ன சொல்லதனை யெழுத் தெண்ணித் | 180 |
176 - 180 சோமன் - சந்திரன் | |
ஓதுமொன்று சாவுதிண்ணம் ரெண்டினுக் சரிவாய் யீய்ந்ததென்றால் விஷமில்லை சொரிஒரு பூரணத்தில் வந்தொருவன் பல்பட்டான் பட்டானென்பாம் சூனியத்தில் முற்பட்டான் எனில்விடத்தில் மெய்மயங்கி | 185 |
181 - 185 திண்ணம் - உறுதி; சொரி - சுழல்தல் பூரணம் - முழுநிலவு; சூனியம் - ஆகாயம் | |
இடக்காந்தும் காரத்தைக் கண்ணினால் எழுதிப் வடிபொன்னிற மாகில் ரெண்டுபல் கறுத்திடில் நாலுபல்லாம் முகர்ந்திடில் மதித்தது நல்ல பாம்பு பாதிரிப்பூ மல்லிகைப்பூ மண்டலியர் மிளகு சுக்கு | 190 |
186 - 190 தந்தம் - பல் | |
சொல்லிய முற்பழைய கையை அரவொன்றும் முற்பக்கத் திருளாகில் ஆணினைச் சர்ப்பம் பொற்புறு மடவியரை யரவிடப் நற்பகலில் ஆணையிடத்தில் கடித்திடும் விற்பகத் திருளாணை இடத்தினில் பெண்ணினை | 195 |
191 - 195 மடவியர் - பெண்கள்; நாரியர் - பெண்கள் விற்பக்கம் - ஒளிப்பக்கம்; நண்ணுதல் - பொருந்துதல் | |
கடித்திடும் ஆணை வலத்தில் பெண்ணினைக் பிடித்திடும் வேகக் குறிதனைச் சொல்வேன் வாயுவின் வேகமெட்டுக் குளிர் தரும் தேயுவின் வேகம் பத்து மாத்திரை தரும் காற்றினுக் கைம்பதாகும் தேயுவுக்குக் | 200 |
196 - 200 மடிப்பாக - வேகமாக வேகம் மூன்று - வாயு,தேயு,வருணன் கணித்திடும் - கணக்கிடும் | |
சாற்றிய வாயு வேக முதல் வேகம் இரண்டுக்கு வெதுப்ப முண்டாம் மூன்றில் திரண்டஞ்சிலக் கோழை யடைக்கும் ஆறுக்குச் எட்டாகில் உயிர் போக்கும் வருணனில் நெட்டுடல் முட்டச் சிவப்பாம் இரண்டு | 205 |
201 - 205 தானவரில் - தான் + அவரில்; வெதுப்பம் - வெப்பம் சோத்தியம் - புலன்கள் செயலற்ற நிலை கோழை - சளி; நெட்டுடல் - நெடிய உடல் | |
வெதும்பிடு மூணுவேக முன் விளைக்கும் ததும்பிடும் கபம் கக்கும் அஞ்சினில் ஆறாகில் கண்ணை விழித்து மேல் பார்க்கும் கூறான இருநான்கில் அடக்கமாய்க் பத்தாகில் மரணமென்பாம் அழல் வேகம் | 210 |
206 - 210 கபம் - சளி; விறைக்கும் - மரத்து விடும் சுக்கிலம் - இந்திரியம்; அழல் வேகம் - தேயுவேகம் | |
சத்தான முகம் கருகி ரெண்டினில் முகம்வேர்த்து உடல் முழுதும் ரோமங்கள் செகமதில் மூவேகம் வாய் குளறிச் நாலினில் குடலிறைந்து சோரஞ் செய்து மேலெழும் ஐந்தனுக்கும் உடல் முற்றும் | 215 |
211 - 215 ஜெகம் - உலகம்; குடலிறைந்து - குடல் கெட்டு சோரம் - வஞ்சனை; நாசி - மூக்கு | |
பல்லொடுபல் கடிக்கும் விறைத்துடல் சொல்லுரை கெடுமேழில் எட்டில் ஓன்பதில் ஒடுங்குமுயிர் பத்தினில் அடக்ககுறி என்புள்ள தாபரத்தில் அடக்கமாய் அடக்க முற்றிடும் பொழுதில் இருவிழி | 220 |
216 - 220 பல்லொடுபல் கடிக்கும் - பல் கிட்டித்தல் அடக்ககுறி - உயிர் அடங்கியிருக்கும் நிலை என்பு - எலும்பு; தாபரம் - தாவரம், உடம்பு | |
மடக்கியவிழி கீழாய் விழித்திடில் பக்கத்தில் விழியொதுங்கில் சீவனும் சத்தெதிர் விழித்திருக்கில் சீவனும் ஒடுங்கு முன்னே பாதத்தைப் பிரம்புகொண்டு சடந்தணல் என வெதும்பில் மெய்சிவக்கில் | 225 |
221 - 225 சீவன் - உயிர்; சடம் - உயிரற்ற உடம்பு; பாதம் - கால் | |
குடத்துநீர் மேல்சொரியில் உடல் முற்றும் பிடித்துகை விரலில் நெட்டி பறித்திடில் ஊன்றிடும் குடோரியிடில் செவ்விரத்தம் தோன்றிடும் ஆவியுள்ளே அடக்கமாய்ச் | 229 |
விருத்தம் (அடக்கம் எழுப்பவகை) அடக்கமென் றறிந்த போதே அவர்தலை உச்சி கீறிக் குடத்துவா யோட ழுத்திக் கொடும்புரை யடைத்துப் பின்னர் விடுத்திடும் வேளைச் சாத்தை விட்டுமேல் ஒட்டை வைத்துக் கடுக்கினில் எரிக்க மீண்டு கடிவிஷம் கடிவாய் காணும் சிந்து சிரசில் குடோரியிட்டுப் - பள்ளுஞ் | 230 |
226 - 230 பிலத்தழுத்திட - பாதாளத்தில் அழுத்துவது போல் அழுத்திட குடோரி - கீறி மருந்திடும் முறை; குடத்துவாய் - தலையின் ஓடு வேளை - மருந்துச் செடி; கடுக்கினில் - விரைவில் | |
விரிவாயோர் ஓட்டை வைத்து ஓட்டு அடங்கிக் கிடந்த உயிர் காய்த்த காலன்தனை எழுப்பத் தந்திரம் மேலான தந்திரத்தை யானும் கேளாய்நீ ஆடவர்க்கு ஞாளம் | 235 |
231 - 235 சூதம் - ரசம்; களஞ்சி - சூதபாடானாம் வேத்தியம் - முறை; தத்தையர் - கிளியனையர் ஞாளம் - தண்டு | |
தாளாத மங்கையர்க்கு ஞாளம் செம்பில் தகட்டி லடித்துவளர் நம்பும் சிறுவிரல்போல் ஒன்று ஊமத்தம் பூப்போல மேலாய் நேமித்துத் தண்டினிலே செல்ல | 240 |
236 - 240 சென்னெல் - செந்நெல்; நேமித்து - வட்டமாக | |
செலுத்திக் குளத்தலையில் ஒரு நிலத்தில் அரைக் கழஞ்சி விட்டு கால்கடி கடித்தே யுயிர்க்கை மாலாய்க் கிடந்திடினும் சீவன் பெண்ணாட்கும் இப்படியே செய்யப் | 245 |
241 - 245 கழஞ்சு - பன்னிரண்டு பண எடை மாலாய் - மயக்கமாய் சீவன் - உயிர் அளப்பிதுவே - கூறமுடியாது 0 | |
பண்ணும் தைலமொன்று செய்து செய்யும் வகைகேளாய் வளர் துய்ய பருப்பெடுத்துக் கொண்டு எருக்கன் இலைச்சாறும் வீழி பருப்பை அதில்போட்டு வைத்துப் | 250 |
246 - 250 செங்குன்றி - குண்டுமணி; வீழி - ஒரு வகை மருந்துச்செடி | |
கடிதாய் இரண்டும்ஒன்றாய்க் கட்டிக் வெயில்முகத் திருக்க வைத்து பைய நிறுத்திக்கொண்டே அதில் பொடித்தே உடன்சேர்த்து சேர்த்த துடித்தாடும் சூதமொன்று நாற்றம் | 255 |
251 - 255 கடிதாய் - வேகமாய்; கஞ்சக்கலம் - வெண்கலம் வால் உளுவை - ஒரு மருந்து (பெருஞ்சீரகமாகவும் இருக்கலாம்) கெந்திவிருகன் - கந்தகம் | |
கூட்டி உத்தாமணியின் பஞ்சில் நாட்டில் அடக்கமுற்ற பேர்க்கு இருப்புச் சிலாகையொன்று ஞாளம் உடனே எழுந்திருந்து பேசும் உண்மை சுடர்நாறும் கந்தகமும் காயம் | 260 |
அரைத்து வழித்தெடுத்து வெள்ளை திரித்தே அனல்கொளுத்தித் தண்டில் அடக்கம் எழுப்புமென்று சொல்லிப் விருத்தம் நச்சர வான தெல்லாம் நாட்டில்மா னிடரைத் தீண்டிக் குச்சித விடங்கள் மிஞ்சிக் கொடுவிடம் தலைமேல் கொண்டால் வெச்ச மந்திர தந்திரத்தால் மருந்தினால் தீரா விட்டால் உச்சித மாகத் தீர்க்கும் கெருடனை உரைக்கல் உற்றேன் சிந்து வேதியர் குலத்தின்கண் காசிபர்க்கு சாதியில் பட்சிராசன் அருணனுக்குத் | 265 |
261 - 265 ஆருடன் சோதித்தவர் - முதல் நூல் ஆசிரியர் நச்சரவு - நஞ்சினையுடைய பாம்பு குச்சித - அசுத்தமான; உச்சிதம் - அருமை வினதை - இவள் தட்சன் குமாரி; காசிபர் தேவி; கருடன், அருணன், சடாயு, சம்பாதி,சேநன் முதலியவர்களைப் பெற்றவள். கனயோகன் - கருடனின் பட்டப் பெயர் | |
அட்டமா நாகங்களைப் பாதாளம் துட்டனெனும் இந்திர ஜித்து தொட்ட நாகக் பலத்தினில் சவுரியத்தில் ஒப்பில்லாப் குலத்தினில் பிரமகுலன் கீழ்க்கடல் நொடியினில் சுற்றிவருவோன் பாற்கடல் | 270 |
266 - 270 துட்டனெனும்...பெரியோன் - இந்திரஜித்தின் நாகபாசத்தால் கட்டுண்ட இலக்குவனைக் காப்பாற்றி நாகபாசத்தைப் போக்கி இராமனின் அருளைப் பெற்ற கதை கூறப் பெறுகிறது. சௌரியம் - வீரம்; நாரணர் - திருமால் | |
கொடிவாகன மானோன் தீவில்ஒரு கதியினில் நிலத்தின் காணும்நிலவும் தாவில்நெடு மூக்கினாலும் சிறகாலும் மலைத்தவர் வெருண்டோட வென்றுசெய் தலத்தினில் சிறுதாயாம் கத்துருமுன் | 275 |
271 - 275 நிசாசரர் - இரவில் சஞ்சரிப்பவர்,அரக்கர் (பாம்பும் எனலாம்) கனலி - ஞாயிறு கருடன் தன் சிறிய தாயான கத்துரு என்பாள் முன் அமிர்தத்தைக் கொண்டுவந்து வைத்து தன் தாயான வினதையின் இடுக்கண் தீர்த்த வரலாறு கூறப்பெறுகிறது. வினதையின் இடுக்கண்: இந்திரன் குதிரைவால் வெள்ளையா யிருப்பது என்றும், அன்றாயின் நினக்கு அடிமையாவேன் என்றும் வினதை கத்துருவினோடு பந்தயம் வைக்க, அவள் அதனை வஞ்சனையால் கரிய தாக்க அஃதறியாது அவளுக்கு அடிமையாகி வருந்துதல். அதனைக் களைதல்: இந்திரன் அமராவதிக்கண் கொண்டு வைத்த அமிர்தம்தரின் அவள் அடிமை நிலை ஒழியுமென்று கத்துரு சொல்ல அவளுக்குக் கருடன் அதைக் கொண்டு வந்து கொடுத்துத் தாயை அடிமைத் தளையிலிருந்து மீட்டது. (பரிபாடல் - உ.வே.சா பதிப்பு பக் 20) ஓகை - உவகை - மகிழ்ச்சி 0 | |
சாபத்தை அறத்தீர்த்த சுத்த வீரன் சிவதவநியமம் பெற்றோன் கெருட தியானம் விளர்சிவப்பாக மேனி முற்றிலும் (கண்டம்) அளவிடல் போலும் நிமிர்ந்த உருவமுமாக திதிதரும் அசுரர்களும் அதிதி தரும் | 280 |
276 - 280 நியமம் - நெறி திதி - அசுரர்களின் தாய் அதிதி - தேவர்களின் தாய் | |
கடைந்திட மேருவரையை வேரோடும் மடந்தைக் கத்துருவெனும் தாய்சொல் சபத பறந்து விண்ணுலகில் சென்று தெய்வேந்திரன் திறந்துகொண்டு உள்புகுந்து காத்திருந்த பொற்குடம் நிறைந்திருக்கும் அமிர்தத்தைப் | 285 |
281 - 285 தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்தபோது மேருமலையை மத்தாகக் கொண்டு வந்து நிறுத்தியவன் கருடன்; தாயின் துன்பத்தைத் தீர்த்தவன். தெய்வேந்திரன் - தேவேந்திரன் | |
மாற்கெதிர் பொருளை அயிராபதம் தேவர் கின்னர முனிவர் கந்திருவர் பேறாக மணிகோடி செபம் செய்த பொன்னாடை ரெத்தினமகுடம் நுதலிலும் மாலோனைப் புயத்தில் வைத்துக் கருணைநீர் | 290 |
286 - 290 மாற்கெதிர் - போர்செய்வதற்கு எதிர்ந்த கின்னரர் - பதினெண் கணத்துள் ஒருவர் சித்தியர் - தெய்வமங்கையர் நுதல் - நெற்றி; சென்னி - தலை; மாலோன் - திருமால் | |
மேலான விண்ணிற்பறந்து திசையெட்டும் வருபவராக நினைந்து கருடனை பருதியைக் கண்ட பனிபோல் தட்டுக்கெட்டுப் மருந்துப் புடலம் விருத்தம் துதித்திடும் பணிகள் நான்கின் தோற்றமும் ஒடுக்கம் தானும் விதித்திடும் வெவ்வே றான சாயின விதங்கள் தானும் பயிற்றிடும் எயிற்றால் உற்ற குணங்களூம் வகுத்தேன் இப்பால் கதித்திடும் விஷத்துக் கெல்லாம் மருந்தினைக் கழற லுற்றேன் சிந்து அத்தர்தென் மருதூர் காரண மத்தொடு கடுக்கை தும்பை கங்கைபிற | 295 |
291 - 295 பருதி - சூரியன்; பணி - பாம்பு எயிறு - பல்; கதித்தல் - மிகுதல் புரம் - திரிபுரம்; மத்து - ஊமத்தை கடுக்கை - பாம்பு; சடிலர் - சடையினை உடையவர் | |
கடுவமர்காள கண்டர் மான்மழுக் நடுவனை உரத்து தைத்தோர் தேடிமுன் சேடனுக்காக வந்நாள் சுயம்புதிரு வேடனுக் கருள் புரிந்தோர் நாகய்யன் தரித்திரந் தீரமதி மால் தனக்குமுன் | 300 |
296 - 300 கடுவமர் - நஞ்சினையுடைய காளகண்டர் - கரிய கண்டத்தை உடையவர் புலிச்சரம் - புலித்தோல்; நடுவன் - யமன் மார்க்கண்டேய வரலாறு இவ்வரியில் கூறப்பெறுகிறது. சேடன் - ஆதிசேடன்; வேடன் - கண்ணப்பன் நாகய்யன் - திருமரூதூர் இறைவன் பெயர் திகிரி - சக்கரம் | |
கிரித்தளப் படையுடையோர் பணிமொழி மலர்மகள் கலைமகளும் அருந்ததி தவமுறு நெடுமாலும் கௌதமன் பாணபத்திரன் கபில ெனெட்டு சேணிலத் தமரர்களும் முனிவரும் | 305 |
301 - 305 கிரித்தளப்படை - முத்தலைவேல் கிரியரசன் - இமயத்தரசன் கௌதமன் - முனிவன் சதுர்முகன் - நான்முகன்; பருதி-சூரியன் பாணபத்திரன் - மதுரையிலிருந்த பாடகன் | |
மெய்யென நம்பும் அடியார் தங்களுடை பொய்யெனச் சொல்வர்பால் ஒருநாளும் கலியுக வரதரென விளங்கிய மலைமகள் அழகிய நாயகிதனை பத்தர்கள் பரிபாலர் நாகலிங்கர் | 310 |
306-310 மலைமகள் - மலையத்துவசன் மகள், பார்வதி பரிபாலர் - காப்பாற்றுபவர் | |
சித்தர்கள் அதிசயிக்கும் நாகமுதல் தீர்ந்திட நசியங்களும் ஒற்றிடச் செய்யும் மாந்திடற்குள் மருந்து மாத்திரையும் சோற்றினில் பாகில் கொடுக்கு மூலிகை மாற்றிடு...கா...ம் அஞ்சனமும் | 315 |
311 - 315 நசியம் - மூக்கில் இடும் மருந்து மாந்துதல் - குடித்தல்; பாகில் - தேனில் கடிவாயில் - பாம்பு கடித்த இடத்தில் | |
சோதனை பார்க்க வேளை வேர்தின்னத் போதவே இனித்ததென்றால் நல்லபாம்பு செருக்கிடில் மயக்கர் வரள்உப்பு நருக்குறு மிளகுரைக்கில் மண்டலியாம் இப்படி அறிந்திடுநீ சோதனை | 320 |
316-320 வேளை - ஒரு வகை மருந்துச்செடி செருக்கிடில் - இருமிடில்; வரள்உப்பு - படிகாரம் மிளகு - உணவுக்குரிய மிளகு 305 | |
செப்பவும் கேளணங்கே வெற்றிலை கண்செவி மூக்கில் பிழியஉடல் விட்டுவிண் பண்ணேர் மொழியினமே முருக்கிலை பிழிந்திடில் நாசிதனில் உடல்விட்டுக் குளிர்ந்திடும் துளசியிலை தும்பையிலை | 325 |
321 - 325 அணங்கு - பெண் பண்ணேர் மொழியினம் - இசையினை ஒத்த மொழியினை உடைய பெண் இனம் எருக்கு - எருக்கஞ்செடி; கறியுப்பு - உணவுப்பு | |
நாசியில் பிழிந்திடவே உயிர்விட்டுப் வீசிய முதல்வேகம் கண்சிவக்கில் பீநாறிப்பட்டை சிறுநீர் மூக்கினில் ஆனாவிரண்டு மூன்று வேகத்துக் காற்றும் சாரணை வெற்றிலையின் சாற்றினில் | 330 |
326 - 330 பிரேதம் - உயிரற்ற உடல் வெள்ளுள்ளி - வெள்ளைப்பூண்டு பெருமரப்பட்டை - பெருங்கள்ளிப்பட்டை (தலைச்சுருளிஎன்றும் கூறுவர்) பீநாறிப்பட்டை - மருந்துப் பட்டை | |
காரணமாக வேகம் நாலைந்து புகன்றிடும் இலுப்பைக் கட்டி நறுக்கியே அகன்றிடும் அந்தவேகம் அப்பாலெட் கெந்தகமுள்ளி வசம்பு மிளகுடன் தந்திடு முலைப்பாலும் நாசியில் தறுகாமல் பிழிந்திட மறுமறுகிடுமே | 335 |
331 - 335 இலுப்பைக்கட்டி - இலுப்பைப் புண்ணாக்கு சாரணை - ஒரு வகைப் பூண்டு கெந்தகம் - கந்தகம்; உள்ளி - வெங்காயம் மறுமறுகிடும் - விஷம் நீங்கிடும் | |
சீலையில் எருக்கலாம்பால் தைவேளை வேலை வைத்துத் தீயிடு சிறுநீர்தனில் கொடிக்கள்ளிப் பால்கறந்து சீலையில் அடித்திடும் பச்சைப் பாம்பு மிளகுகாயம் திரித்திடு துணியில்வைத்துத் திரிதனதை | 340 |
336 - 340 சீலை - மருத்துவத்திற்குப் பயன்படும் காரச்சீலை எருக்கலாம்பால் - எருக்கஞ்செடியின் பால் தைவேளை - தைவளைச் செடி கொடிக்கள்ளி - காரமுள்ள கள்ளி அம்பு - திப்பிலி; சமன் - சமமாக | |
மரித்திடும் மரணமெனினும் சீக்கிரம் ஒற்றடம் துவாலை ஒற்றிடும் வேலிப்பருத்தி தைவேளை மற்றுள்ள வேர்குருந்தும் பொன்னிறமாய் கீழ்வாய் நெல்லி துளசி முருக்கிலை தாழாமல் இடித்தெடுத்துப் பிழிந்திடும் | 345 |
341 - 345 மரித்திடும் - இறந்திடும் வேலிப்பருத்தி, தைவேளை - மருந்துச் செடிகள் பூனைவணங்கி - குப்பைமேனி; வடக்கி - வதக்கி சடலம் - உயிரற்ற உடம்பு | |
பேய்ச்சுரை பேய்க்குமட்டி .... ளிசிலை தேய்த்திடு சடமுழுது விடத்தினால் முறுக்கி ஆணைவணங்கி சமூலம் கொடுவந்து உள்ளுக்குத் தூள்மருந்து கொல்லன் கோவைக் கிழங்கு தெள்ளிய சுலை சுருளி வேரிவை | 350 |
346 - 350 பேய்ச்சுரை,பேய்க்கும்மட்டி,பேய்ப்பீர்க்கு - மருந்துச் செடிகள் ஆனைவணங்கி - தேள்கொடுக்குப் பூண்டு சமூலம் - வேர்முதல்; உள்ளுக்கு - உடம்பினுள் கொல்லன் கோவை - ஒரு செடி | |
அள்ளியே எடுத்து வெந்நீர்தனில் கொள்ளக் பேயருசும் சமனாகக் கொண்டு வந்து காய்பிஞ்சுறு காராட்டின் நீர்விட்டு பகலினில் நிழலுலர்த்தித் தூள் பண்ணிப் சுகமுள்ள வெந்நீரில் கலக்கியே பயந் | 355 |
351 - 355 கொள்ளைவிடங்கள் - மிகுதியான நஞ்சு குடி - விலகி; குந்தாணி - பெரிய உரல் |
சித்தராரூட நொண்டிச் சிந்து
முற்றும்
நன்றி :- http://library.senthamil.org/097.htm
0 comments:
Post a Comment