ஆனந்தக் களிப்பு
சீர்பெருகு சந்தவரை மேவும் பழனிச் சேவற் கொடியோன்மேல் சிந்துபோல் பாடக் 1. சந்தவரை - அழகு பொருந்திய மலை | 1 |
கார்பெருகு தந்திமுகத் தையன் - செந்தில் கடற்கரை ஆண்டிமேல் தமிழை நான் பாட 2. கார்பெருகு - கருணை மதம் பெருகு தந்திமுகம் - அத்திமுகம் - ஆனைமுகம் செந்தில் கடற்கரை - திருச்செந்தூர் | 2 |
தார்பெருகும் அபிராமி சொல்வாள் - அருமைச் சந்தக் களிப்பை யான் தத்திமொழி குளற 3. தார் - மாலை | 3 |
ஏர்பெருகும் ஆறுமுகத் தையன் - நாளும் என்னாவில் அனுதினமும் ஆனந்த மயமாய் 4. ஏர் - அழகு | 4 |
அத்திமுக (வேல)வனை நித்தம் தொழுவேன் - நான்முகன் நாவுடைய மாதே மனமேவி இப்போது 5. நான்முகன் நாவுடைய மாது - நாமகள் | 5 |
புத்திவித்தை சவுபாக்கியம் தருவாள் - நாமும் பூலோக நாயகன் குமரன்மேல் பாட 6. புத்தி - அறிவு; வித்தை - கல்வி; சவுபாக்கியம் - மிகுந்த செல்வம் | 6 |
சத்திஉயர் அருள் பெற்ற வேலா - என்னைத் தயங்காமல் காக்கிறது நின்கட னய்யா | 7 |
வெற்றி மயில் ஏறி விளையாடும் - அய்யன் வேலவ னய்ங்கரன் பாதமலர் துணையே 8. அய்ங்கரன் - விநாயகன் | 8 |
குற்றங்குறை தெரியாது எனத் தமிழைக் குமரன்என் நாவில்வந் தொழுங்காகச் சொல்வாயே | 9 |
பத்தனைக் காக்கும் குறவள்ளி - ஏழையேன் பாடுதற் கருள்தல் நின்கடன் தாயே | 10 |
ஆறுகுற்றம் நூறுபிழை செய்யும் - அடிமை யறியாக் குழந்தைமேல் அன்புசெய் தருள்வாய் | 11 |
தேறுவேன் அபிராமி செயலால் - ஒரு சிங்கார மாலைபோல் ஆனந்தக் களிப்பை* 12. தேறுவேன் - தௌிவேன் *ஆனந்தக் களிப்பை - ஆனந்தக் களிப்பாய் எனவும்படும் | 12 |
கூறுவேன் உனதுடைய நாமம் - எனக்குக் குறையொன்று வாராமல் குமரநீ காப்பாய் | 13 |
ஏறுமயில் மீதேறி மாலைக் கிப்போ யிதுவேளை காப்பது நின்கட னய்யா | 14 |
சூராதி சூரனை வெறுத்த - சிவ சுப்பிரமணியர் அருள்பெற்று நான்தொழுவேன் | 15 |
ஆராத கானங் கடந்தய்யன்* - ஞான ஆறுமுகத் தையன்உன் தரிசனம் பெறவே 16. ஆராத கானம் கடந்து - அரிய வழி கடந்து `ஆறாறு காதம் கடந்து' எனவும் பொருந்தும் * ஆறாத நாமம் கடந்தய்யன் என்பது மூல வடிவம் | 16 |
உபாங்கமுடன் காவடி எடுத்து அன்பர் போற்றியே வேலருட* பாதமே துதித்து 17. உபாங்கம் - துணை (பக்க வாத்தியம்) * வேலருடைய என்பதன் சிதைந்த வடிவம் | 17 |
கைவேலு வட்டமிட் டாடச் - செந்தூர்க் காவடிகள் இருகோடி சூழ்ந்து விளையாட | 18 |
குயில்கூவ மயிலும் கூத்தாட - சாமி குமரகுரு பரமுருக அரகர என்றாட | 19 |
ஆண்டிமக னாண்டிகும ராண்டி - எங்கள் ஆறுமுக வேலரென வந்த குமராண்டி 20. ஆண்டிமகன் - பிட்சாடனப் பெருமானாகிய சிவன்மகன் குமராண்டி - ஆண்டிக் கோலம் கொண்ட முருகன் | 20 |
தாண்டி மயி லேறிவரு வாண்டி - கிழவன் தானாவே உருவெடுத்து வருவாண்டி | 21 |
வேண்டிய கானவர்கள் வரவே - குமரன் வேங்கைமர மாகவே நின்றவடி வாண்டி 22. கானவர்கள் - குறவர் | 22 |
பாண்டிக் குறவருட மகளை - நித்தம் பட்சமுட னிச்சித்து வந்தகும ராண்டி 23. பாண்டிக்குறவர் - பாண்டிய நாட்டுக் குறவர் பட்சம் - அன்பு; இச்சித்து - விரும்பி | 23 |
கைதனில்வே லாயுத மெடுத்து - நல்ல கனகமணி ரத்தினத் தேரின்மே லேறி | 24 |
எய்ததொரு சூரனையும் குத்தி - அவனை இருபிளவு செய்துமே வாகனம தாக்கி | 25 |
செய்ததவ முனிவோர்கள் தேவர் - தம்மைச் சிறைவிடுத் தேதெய்வ லோகமீ தேற்றி 26. செய்ததவ முனிவோர்கள் - தவம் செய்த முனிவர்கள் | 26 |
அய்வர் சகாயன் மருகன் - அனங்கர்* ஆறுமுக வேலவரை வந்து தொழு தேத்தி 27. அய்வர் சகாயன் மருகன் - மால் மருகன் அனங்கர் - கடவுள் * அணங்கார் எனவும் பாடம் ஆயின் 'விழா அயரும்', 'வெறியாடுகின்ற' என்பது பொருளாகக் கொள்ளலாம் | 27 |
பாருங்கோ பூலோகம் வாழும் - இந்தப் பார்புகழும் வேந்தரே செந்தூர் நகரில் | 28 |
வாருங்கோ ஒருமனது கொண்டு எங்கள் வடிவேலர் பாதமதை வாழ்த்துங்கோ நின்று 29. ஒரு மனது - அலையாத ஒரு முகமான நினைவு | 29 |
கலகலென வருதண்டைக் காலா - உக்கிர காளிதிரி சூலிகவு மாரிபெறு பாலா 30. கலகலென - தண்டையின் ஒலிக் குறிப்பு உக்கிரகாளி - கோபமிகுந்த காளி திரிசூலி - சூலப்படையுடையாள்; கவுமாரி - பார்வதி | 30 |
பலபல யோசனைசெய் யாமல் - எந்தன் பவ வினையைத் தீர்ப்பதுவும் பழனிமலை யானே | 31 |
ஆங்கார ஓங்கார சக்தியம்மாள் - தேவி அம்மையுமை பங்கில்வளர் சிவனுடைய சத்தி 32. ஆங்கார ஒங்கார சத்தி - வெற்றிப் பெருமிதம் உடைய ஒங்கார வடிவினளான சத்தி | 32 |
வாங்காத காவடிகள் கட்டி - நல் வையாபுரி சுற்றி வாரா னிடும்பன் 33. வாங்காத - வளையாத வையாபுரி - பழனி | 33 |
மருவும் மருக்கொழுந்தும் - வகையாய் மாலை புனைந்து மரகதரூப மயி லேறியே 34. மரு, மருக்கொழுந்து - நறுமணப்பூண்டு மரகத ரூப மயில் - பச்சை வண்ணம் உடைய மயில் | 34 |
பயின்றரக்கன் சூரர் பகை தீரவே திருவும் நிறைந்த தலம் திருப்பரங் குன்றில் மாடத் தெருவில் பவனி வார தாரய்யா | 35 |
அறுமுகன் பன்னிருகை அயில் கொண்டு அசுரரைமுன் சமர்செயும் குமரரிவர் தானடி | 36 |
சோலைகளும் கன ஆலயமும் திகழ் சோபித சம்பிரமம் மீறிய செந்தினில் வேலன்மேல்* 37. சோபித சம்பிரமம் மீறிய - அழகும் களிப்பும் மிகுந்த * இத்தொடர் அமைப்பு பொருள் விளங்கவில்லை | 37 |
வாலிபர் அன்பொடு பாடிய சிந்தையில் ஆசைகள் சிந்துகளவே மனதின்புற நானுமே | 38 |
உத்தள வெண்ணீறணிந்து எத்திசை எங்கும் விளங்க வித்தார பவனி வந்த தாரய்யா 39. உத்தள வெண்ணீறு - நீரில் குழையாது உத்தூளனமாகப் பூசப்பட்ட வெண்ணீறு வித்தாரப்பவனி - வித்தாரம் - விரிவு - பெரும்பவனி | 39 |
சத்திவே லெடுத்துரண சுத்தவீரரைச் செயித்த சண்முக முத்தையர் இவர் தாண்டி | 40 |
சுத்தி விளையாட வென்றே இத்திசை தனிலே வந்து அத்திதட மத்தகமீ தேறியே 41. அத்தி - யானை | 41 |
சித்து விளையாட என்றே இத்திசை தனிலே வந்த சேவகப் பெருமாள் இவர் தாண்டி 42. சேவகப் பெருமாள் - வீரனாகிய குமரன் விசாகன் - குமரன் (திவாகரம் 1- 4) | 42 |
சூரர்முகங் கிரியூடுருவும் படி வேல்விடு செங்கை விசாகன் அலங் காரத் தோகை யிலங்கு மயூர துரங்கை வேலனே 43. மயூரதுரங்கன் - மயிலூர்தி (துரங்கம் - குதிரை - இது ஆகுபெயராய் ஊர்தியைக் குறித்தது) | 43 |
பதக்கஞ் சரப்பணியோன் பணிகள் பருதிஒளி போல வாரதிவ ராரய்யா | 44 |
கதிக்குங் கதலிகன்னல் நிறுத்தி மலர்தூக்கி கனகரதம் ஏறியவர் தாண்டி | 45 |
தாளந் தவில்முரசு தம்பட்ட மேளமொடு சங்கீத ராகமுடன் வாரதிவ ராரய்யா 46. தாளம், தவில், முரசு, தம்பட்டம் - இசைக்கருவிகள் | 46 |
வேழஞ் சரவணைகள் கண்டு பயின்றதொரு வேலேறும் பவனி இவர் தானடி 47. வேழஞ் சரவணை - நானல் சூழ்ந்த சரவணப் பொய்கை வேழஞ் சருளணைகள் - என்பது மூல வடிவம் | 47 |
வள்ளிக் குறமக ளுள்ளபடி தினை தெள்ளிச் சிறுதேனை வெல்லப் பொடிதனை வாங்கியுண்ட காங்கையன் விசாகனே கள்ளத் தனமுட னுள்ளத் தினில்மிகு 48. காங்கேயன் - முருகன் (கங்கை...கொண்டு சென்று சரவணத்திடுதலால் பெற்ற பெயர். கந்த-திரு-16) விசாகன் - குமரன் (கந்த-திருவிளை-60) | 48 |
வள்ளிப் பெண்தனை மெள்ளத் திருடின காங்கையன் சுப்பிரமணியர் தானடி | 49 |
உத்த(ர) சிவகிரியில் நித்தம் குழந்தை வடி வுகந்து குடியிருப்ப தாரய்யா 50. உத்தசிவகிரி - புகழுரை மிகுந்த சிவகிரி உத்தரசிவகிரி - வடக்கில் உள்ள சிவகிரி எனலுமாம் | 50 |
சுத்தி உலகமெங்கும் வெற்றிமயி லேறிவரும் சுப்பிர மணிய வேலரிவர் தானடி | 51 |
சென்னியில் கிரீடமின்ன செங்கையில் வேலிலங்க திட்டமுடன் வார துரை ஆரய்யா 52. சென்னி - திருமுடி | 52 |
சொன்னவடி வேலெடுத்து சூரனைச் சங்காரம் செய்யும் சுப்பிர மணிய வேலரிவர் தாண்டி - எங்கள் 53. சொன்ன - சொர்ண - பொன் | 53 |
திங்கள் துலங்கு முகத்தில் சேர்ந்த கத்தூரித் திலகம் தீட்டிமிக வாரதுரை ஆரய்யா | 54 |
மையல்கொண்டு வேலர்குற மாதைத் தேடியே - கந்தன் மானிடர் வடிவு கொண்டு பாதை கூடியே - தெய்வ 55. மையல் - மயக்கம் | 55 |
நாரதனே கூடச்சேர்ந்து வாவென்றே - கந்தன் சீக்கிரம் குறப்பென்னாளைப் பார்க்கவே சென்று | 56 |
வில்லெடுத்து அம்புதொட்டு வேடர் போலவே - கந்த வேலவர் வனத்தைத் தேடி மிஞ்சி ஏலவே 57. மிஞ்சி - மிக, கடந்து; ஏல - பொருந்த | 57 |
செல்லவழி கேட்டுத் திசை நாடியே - கந்தன் சீக்கிரம் குறப்பெண்ணாளைப் பார்க்கவே - சென்று | 58 |
கண்களுக் கெட்டாத தினைக் காடு தூரமோ - மெய்யா கந்தன் வள்ளியைக் காண்ப தெந்த நேரமோ | 59 |
தன்தினைப் புனமும் வள்ளித் தலமு மெதுவோ - வள்ளி தன்னைக் காண்ப தெக்காலமோ சமயம் என்றைக்கோ | 60 |
தூரவோ கிட்டவோ லக்குச் சொல்லு மெனக்கே - அந்தத் தோகைதன்னைக் காண்பித்தால் சுகிர்த முண்டுனக்கு நாரதா 61. லக்கு - திசை, நெல்லை வட்டார வழக்கு தோகை - மயில் போன்றவர்; சுகிர்தம் - நன்மை | 61 |
வாவென்றே வேலா நண்ணி நடந்தார் - அந்த நாகமலைக் கப்புறத்தில் நண்ணி நடந்தார் | 62 |
வெள்ளிமலை தங்கமலை விந்தைமலை உண்டு - அங்கே விரைகமழும் சந்தனச்சோலை வேலரது கண்டு 63. விரை - நறுமணம் | 63 |
கிள்ளையும் குயிலன்னமும் கிளைபெருக்கவே - வேலர் கேள்வியால் வள்ளிஎன்றதைக் கேட்டுக் கூவவே | 64 |
தோகை வள்ளி கவணோசை தொடர்ந்துள்ளங் குளிர்ந்தார்-வேலர் சோலைப் பெண்ணா ளோல மென்றது தோணிச்சே | 65 |
வியாயந்தார் வாசாயத் தினைப்புனமும் வளமும் காண்கின்றார்-வேலர் வள்ளியின் வடிவு கண்டு வந்தெதிர் நின்றார் | 66 |
எந்தஊர் காணீர் எந்தத் தேசம் இப்பம்* எனக் கறிய வகை வகையாய் விள்ளுவீரே நேசம் 67. விள்ளுவீர் - சொல்லுவீர் *இப்பம் - இப்பவும் என்பதன் குமரி மாவட்டப் பேச்சு வழக்கு | 67 |
தென்கழுகு மாமலை எந்த னூரு - யானும் சிவலிங்கச் செட்டி மகன் கந்தனெனப் பேரு | 68 |
சொந்தமுடன் இந்தவழி வந்து யானும் தோகைமயில் கொண்டு இந்தப் பூமியில் வந்தேன் | 69 |
வந்தவகை எந்தனுடன் சொல்லும் - நீரும் வம்பு தும்பு பேசாமல் மரத்தடியில் நில்லும் 70. வம்பு - வம்புத்தனம், நேரின்மை, வஞ்சனை தும்பு - அநாகரிக வார்த்தை | 70 |
கண்டு கொண்டார் வேலவரும் - வள்ளி கட்டழகி தன்னழகி செண்டுமுகில் மாதரசே வள்ளி 71. செண்டு - பூச்செண்டு | 71 |
எந்தவூரு தேசமெதோ நாமறியோம் - இவள் எவருபெற்ற பெண்மயிலோ நாமறியோம் | 72 |
அந்தரமாய் வனந்தனிலே ஒரு ஆளுமில்லாக் கானகத்தின் சுந்தரியோ லட்சுமியோ தோகையிள மாமயிலோ மந்திரஞ்சேர் கயிலைமலை யிவள் வாழும் பரமீசுவரியோ 73. பரமீசுவரி - பரமேஸ்வரி | 73 |
தெள்ளுபுகழ் மானவடிவு கண்டுசிந்தை மிகவே மயங்கி வள்ளியரைத் தானெடுக்க என்ன வடிவெடுப்போம் வேலவரும் | 74 |
குறவேஷமொடு வருவோம் வள்ளி தையலரைத் தானெடுக்க பரதேசி வேடங் கொண்டு வள்ளிப் பாவையரை நாமெடுப்போம் | 75 |
வளவிச்செட்டி வேடங்கொண்டு வள்ளிமாதரைக் கைப்பிடிப்போம் இளகிமனம் வாடியதால் சுப்பிரமணியர் என்னவேடம் போடுவோம் 76. வளவி - வளையல் (பேச்சு வழக்கு) | 76 |
வேடர்வேடம் போடுறதைக் கண்டு மெல்லி நல்லா ளேது சொல்லுவாள் 77. மெல்லி - பெண் | 77 |
வேறு அன்னமே மாங்குயிலே - சின்ன அஞ்சுகமே தேன்மொழியே 78. அஞ்சுகம் - கிளி | 78 |
உன்னையல்லோ நானினைந்து - (இப்)பம் உருகிமனம் வாடுகிறேன் | 79 |
கன்னல் மொழி மின்னரசே - உந்தன் கமலமுகம் காண்பதற்கு | 80 |
என்னேனெஞ் சுருகு திப்போ - வள்ளி ஏந்திழையே வாராயோ 81. ஏந்திழை - பெண் (அழகிய அணிகலன் அணிந்தவள்) | 81 |
பட்டுடையும் தானிலங்கப் பணிகள் மிகத் தான் துலங்க | 82 |
இட்டமுடன் வந்துநின்று - இப்பம் என் மயக்கம் தீராயோ 83. இட்டம் - அன்பு | 83 |
காதழகும் மார்பழகும் - அளக* முகத்தழகும் முத்தழகும் *வசை முகத்தழகு என்றும் அமையும் | 84 |
பாதச் சிலம்ப மேவு பண்பென்ன பைங்கொடியே வந்திடாயோ | 85 |
வனக் குறத்தி ஆசையினால் - வேலர் மய்யல் கொண்டு தான் மயங்கி | 86 |
எனக்கொருவர் தூது சொல்லி இணங்கவரக் காணே னென்றார் | 87 |
உன்னை மணம் செய்யுவேன் - உனைவிட் டொருபக்கமும் போகேன் - என்னை | 88 |
அன்னிதமென்று நினைந்துகொண்டால் - எனக் காதரவார் பெண்ணே 89. அன்னிதம் - அந்நியம் என்பதன் பேச்சு வழக்கு ஆதரவு - உதவி | 89 |
ஆதரவென்று சொன்னால் - எனக்கு அடுத்த கிளை நீயோ 90. கிளை - சுற்றம் | 90 |
மித்திர பேதகம் பண்ணாதே நான் சகியேன் - இனிப் பேசாமல் ஓடிப் போவீரே 91. மித்திரபேதகம் - நட்புப் பிரித்தல் | 91 |
ஓடிப்போ என்று சொன்னால் - எனக்கு உயிர்நிலை இங்கிருக்கே என்னைக் | 92 |
கூடிக் குலாவியே கொஞ்சிக் கொண்டாலுன் குருக்களுக்கே புண்ணியம் 93. குருக்கள் - குருமார் | 93 |
புண்ணியமும் தவமும் மடந்தனில் போனால் செய்வார்களே 94. மடம் - சத்திரம் | 94 |
ஆரண்யமான வனந்தனிலே புண்ணியம் ஆரிங்கே செய்யப் போறார் 95. ஆரணியமான வனம் - பெருங்காடு | 95 |
ஆரிங்கே என்று சொன்னால் - எனக் காதாரம் எங்கும் உண்டோ | 96 |
சேரும் படிக்குநீ நம்பிக் கொண்டால் - உன் சிநேகம் பிரியேனே | 97 |
ஆற்ற மாட்டாமல் புகல் கெட்டு அலைகிறீர் தொண்ணாந்து - சும்மா 98. ஆற்ற மாட்டாமல் - பொறுக்க மாட்டாமல் தொண்ணாந்து - ஏங்கி (பேச்சு வழக்கு) | 98 |
பீற்றாதே போமிந்த மட்டுக்கு - தர்க்கித்துப் பேசினால் கோபம் வரும் 99. பீற்றாதே - தற்பெருமை பேசாதே தர்க்கித்துப் பேசினால் - வாக்குவாதம் செய்தால் | 99 |
கோபமுள்ள இடத்திலே அதிகக் குணமுண்டு என்பார்களே - மனத் 100. மனத்தாபம் - மனவருத்தம் | 100 |
தாபமில்லாமலே சேரு மந்திரித் தாலுந்தன் தன்னாளாயிருப்பேன் 101. மந்திரித்தல் - மந்திரம் செபித்தல் | 101 |
தன்னாளா யிருக்கநீ எனக்குத் தாய்தகப்பன் கிளையோ | 102 |
எட்டி உன்னாதே மெட்டி மின்னாதே* இனி உன்னால் ஏன்றதைப் பார் 103. எட்டி உன்னுதல் - தாவி உயர்ந்து விரைந்தெழும்புதல் *வெட்டி மின்னாதே என்றும்பாடம்-கண்டித்துப் பேசாதே | 103 |
கோரணி பண்ணாதே இதுவரை கோபம் பொறுத்திருந்தேன் 104. கோரணி - குறும்புச் செய்கை | 104 |
ஆரென்றும் பாராமல் பாங்கியரை விட் டடித்து முடுக்கச் சொல்வேன் 105. அடித்து முடுக்க - அடித்துத் துரத்த | 105 |
அடித்து முடுக்க என்றால் எனக்கு அவ்வளவும் லட்சம் பொன்னே | 106 |
பிடித்த பிட்டுக்கு மண்சுமந்தே அடி பட்டது சொக்க ரல்லோ | 107 |
மனதுக் கேற்ற மாப்பிள்ளை தானே - குகனை மணம் செய்துக்கோ வள்ளி மானே | 108 |
தனதாகு மானால் வள்ளித் தாயே - கந்த சாமி தருவார் வெகு நன்மையே 109. தனது (ஆகுமானால்) - நட்புரிமை | 109 |
அசுரரைப் பொருதுமே வேலன் - அயி லாண்டவள் உதவிய பாலன் சும்மா 110. அயிலாண்டவள் - அகிலாண்டேசுவரி - உலகநாயகி | 110 |
வசியம் பனிரண்டுகை தோளன் - உந்தன் மனதுக்கிசைந்த மணவாளன் 111. வசியம் - பரந்த | 111 |
கழுகுமலையில் முருகேசன் - உந்தன் கருணைக் கிணங்கும் உபகாரன் - அவரை | 112 |
வேறு தழுவிக் கொண்டால் வெகுசெம்மையே - கந்த சாமி தருவேர் வெகு நன்மையே | 113 |
கலியுக வரத குமாரன் - ஆர்க்கும் கருணைக் குகந்த உபகாரன் 114.கலியுக வரதகுமாரன்-கலியுகத்தில் அருள்செய்யும்கடவுள் | 114 |
சலியாமல் சேரச் சம்மதிப்பாயே - வள்ளித் தாயேஉன் மனதில் பதிப்பாயே 115. சலியாமல் - துக்கப் படாமல் | 115 |
ஆரோ எவரோ என்றெண்ணாதே - சும்மா அணைந்துக்கோ வினைகள் வாராதே | 116 |
வேறே பேதகம் நினையாதே - வெற்றி வேலரைச் சேர்ந்துக்கோ மாதே 117. பேதகம் - வேறுபாடு | 117 |
கமலச் சரவணச் சண்முகனே - மேவிக் கலந்துக்கோ நல்ல சேவகனே 118.சரவணச் சண்முகன் - சரவணப் பொய்கையில் வளர்ந்ததால் வந்த பெயர் | 118 |
அசுரர் பணி குழந்தைக் குகனே - நீ அணைந்து கொண்டால் நல்ல முகனே | 119 |
வேலுண்டு வினையில்லை தானே - வெற்றி வேலரைச் சேர்ந்துக்கோ மானே | 120 |
தனித்துநீ இருப்பது வருத்தம் - இந்தச் சாமிக்கும் உனக்கும் நல்ல பொருத்தம் | 121 |
வள்ளியே உன்னைநான் கண்டேன் - இப்பம் மையலைத் தீர்த்துவி டாயோ | 122 |
கண்கொண்டு என்னைநீ பாராய் - சற்று காத்துப் பார்த்துநீ தாராய் | 123 |
வேறு வேள்வி மலைக் கரசே சிற்றூர் குடி வேடுவர் கோமானே (தனன) 124. வேள்வி மலைக் கரசு - வள்ளியின் தந்தைக்குரிய மலை | 124 |
தாழ்விலா வாழ்க்கையுடன் எனைப்பெற்ற தந்தையே அண்ணன் மாரே (தனன) 125. தாழ்விலா வாழ்க்கை - குறையா வாழ்க்கை | 125 |
என் தாய் தேடினளே எனைத்தேடி ஏங்கி இருப்பதுண்டோ | 126 |
மறக்க மனம் கூடுதில்லை - வஞ்சி மாதே உந்தன் மய்யல் கொண்டு | 127 |
வாடுறேன் இப்போதே உறக்கமும் வருகுதில்லை என்ன செய்குவேன் | 128 |
வெயில்தனில் தனித்திருக்க விதிதானோ - உன்னை விட்டிருக்கத் தாய்க்குச் சம்மதி தானோ 129. சம்மதி - சம்மதம் | 129 |
நம்பின பேர்க்கு வஞ்சகம் செய்யலாகுமோ - உன்னை நாடி வந்து வாடி நொந்து நையலாகுமோ | 130 |
வம்பு சேரும் கொங்கைநடு வுற்று நானும் - முத்து மாலையாய்க் குலுங்க வரம் பெற்றிலேனே 131. வம்பு - மார்புக் கச்சு | 131 |
துள்ளுமுன் விழியிலிட்ட மைய தாகவே துலக்கமா யிருந்தேனில்லை மெய்ய தாகவே 132. துலக்கம் - விளக்கம் | 132 |
வள்ளியுடன் முகத்தில் பூசு மஞ்சளாகவே மாதுடன் இருந்தே னில்லை தஞ்ச மாகவே 133. தஞ்சம் - அடைக்கலம் | 133 |
கன்னல் மொழி மாது - வள்ளி மின்னாள் அப்போது | 134 |
அப்பனே குமராண்டி - உன் தகப்பன் பேயாண்டி சொன்னால் | 135 |
தண்ணீர் உண்ணநீர் எண்ணாமலே நின்னீர் யெப்பவே உன்னை வேண்டித் தொழ யிருப்பவே மனம் பூண்டீர் 136. நின்னீர் - நின்றீர் | 136 |
அடியேன் வெண் ணீறணிந்தேன் உந்தன் குடிநான் என்று துணிந்தேன் | 137 |
மிடிதீர எனைப்பாரும் - இந்தப் படியோர் புகழ் காரும் 138.மிடி - வறுமை காரும் - 'காப்பாற்றும்' என்பதன் மரூஉ | 138 |
வானோர் புகழ் வேலர் - நீர் தானா வென்று துதிப்பேன் | 139 |
இறைப் போதிலும் பிரியேன் - மாத் திரைப் போதிலும் மறவேன் 140. இறைப்போது - சிறிது நேரம் மாத்திரைப்போது - கைந்நொடி நேரம் | 140 |
துரையாகிய செந்தூரச் சந்த வரை மேவிய குமரா | 141 |
பவனிச் சிறப்பு பானை வயிற்றோன் கழலினை பண்புடன் போற்றுவோமே - நற்கதலி பழமொடு சர்க்கரை அவலொடு எள் பொரி பலகனி பட்சண வகை சடுதியில் அருந்தியே பாரத மேரு வரைந்தோன் இளையவர் பாதம் பணிந்திடுவோம் (தனன) 142. பானை வயிற்றோன் - பிள்ளையார் கதலி - வாழை; சடுதியில் - விரைவில் | 142 |
வாரணங் கொட்டு முகில் மாதரசி வர வந்து நடனஞ் செய நட்டுவர்கள் மங்கையர் கொங்கைகள் செங்கை குலுங்கிட மத்தள வீணைகள் கைத்தாளம் நேர்செய்ய மாதர்கள் ஆடிடவே சுப்பிரமண்யர் வந்தார் பவனிதனில் (தனன) | 143 |
காரணனாக வந்து அடியாரைக் காப்பது நின்கடன் காண் பொதிகையில் கரக முனிக்கொரு குருவெனப் பத்திரு கரமயில் கொடுவினை அறுபட ஏவிய கழுகு மலைக் குமரா குறவள்ளி காதலனே குகனே (தனன) 144.காரணன் - கடவுள் - "உயிர்கட்கெல்லாம் காரணம் ஆய மேலோன்" (கந்தபுராணம்); கரகமுனி - குடமுனி பத்திரு கரம் அயில் கொடு - பன்னிரு கைகளில் வேலினைக் கொண்டு | 144 |
அந்திமதி சூடும் பரமன் அருளிய பாலகனே - கொடிய அமர்தரு செருவினில் இயல்கொடு சமர்செய அலகை நிணம்உண கழுகு குதிகொள அசுரர்கள் மாய்ந்திடவே - தெய்வ லோகத்து அமரர் சிறை மீட்டாய் (தனன) 145. அமர்தரு செரு-உக்கிரம் மிகுந்தபோர் நிகழுமிடம் இயல் - முறை; அலகை - பிசாசம் குதிகொள - குதித்தல், பெருகுதல் | 145 |
விந்தை பேர்க் காவில் குறத்தியை மேவிடவே நினைந்தாய் - குறவரில் வில்லும் அம்பொடு செல்லும் பேர்துணை வெல்லவே நினை வல்லவோ முன் வேங்கை மர மாகி நின்றதொரு வேலவ னேகுக னே (தனன) | 146 |
வரம் பெற்ற கும்ப கர்ணன் இந்திர சித்து மற்றுள பேரை எல்லாம் அடக்கியே வஞ்சக ரானவர் நெஞ்சில் அறைந்திட வாளிய தேவிய மால் மருகா குகா வாய்த்திடு நற் கழுகு மலைதனில் வாழும் குருபரனே (தனன) 147. வாளி - அம்பு; மால் - திருமால் | 147 |
திறமுற்ற பன்னிருகை அயில்கோடு சிந்தினை வேரறுப்பாய் - கயிலைச் சிவமய ருத்திரன் அருளிய புத்திரனைத்* தினமும் நினைத்திட வினைகள் அறுத்திடும் சேவற் கொடியனே உனை நிதம் சேவடி போற்றுவமே (தனன) 148. சிந்து - கடல் (வேல் கொண்டு வேலைப் பண்டேறிவோனே - திருப்புகழ்) சிவமய ருத்திரன் - மகா சங்கார காரணன் (அழித்தற் கடவுள்) *புத்திரனே என்றும் பாடம் | 148 |
ஆனையை முன்னாளில் சலந்தனில் ஆம் கரா பற்றிட மூலமென்று அழைக்கும் அக் கரி பிழைக்க நேமி தொட்டங்(கு) கராவை முன் சங் கரித்திடும் அரி மருகா குகனே நின்னடி அன்புடன் போற்றுவமே (தனன) 149. கரா - முதலை; நேமி - சக்கரம் | 149 |
செந்தினில் வளர்ந்த குமரன் அடியவர் சிந்தையில் நிறைந்த முருகன் - கனக்குழல் தெய்வத் திருமடந்தை கணவனைச் சேவடி போற்றுவமே - தனன சுந்தர மிலங்கு மயிலன் நலம் பெறுஞ் சுந்தரி தருங் குருபரன் கதிர்சொரி துய்யவடி வேலன் பாதமலர் சூழ்ந்து வணங்குவமே (தனன) 150. சுந்தரம் இலங்கு மயிலன் - அழகியமயிலூர்தி உடையவன் நலம் பெறுஞ் சுந்தரி - உமை; துய்ய - தூய - பரிசுத்த | 150 |
செஞ்சர ணிறைஞ்சும் அடியார்க் கருள்தரும் கஞ்ச மலர் மிஞ்சு சரணம் - தினைப்புனம் சென்று குறமாதைப் புணர்ந்தருள் தேசிகனைப் பணிவோம் (தனன) 151. செஞ்சரண் - சேவடி கஞ்சமலர் மிஞ்சு சரணம் - தாமரையினை வெல்லும் சேவடி | 151 |
தேசிகன் குருபரன் அஞ்சின் இறை அஞ்சிலேன் - மெய்க் கதிபுரை அம்பிகை அலர்ந்த கருணைத் துரைத்திரு ஆறுமுகக் குமரன் பதத்தை அனுதினமும் வாழ்த்துவமே (தனன) 152.அஞ்சின் இறை அஞ்சிலேன் - ஐந்து புலன்களின் அலைக்கழிவுக்கு அஞ்சாத என்னுடைய மெய்க்கதி என்று கொள்ளலாம் | 152 |
தோடவிழ் கடப்ப மலரும் பிரசம் கமழ் ஏடவிழ் நறைத் தொடையலும் புனைந்தருள் சோதிவடி வேலன் பதத்தைத் துதித்து நாம் வாழ்த்துவமே (தனன) 153. தோடு, ஏடு - இதழ்; பிரசம் - தேன் | 153 |
காடுறுமாச் சிறுமியைத் தினந்தினம் நாடி மயலுற்ற தன்னை முன்னின்று காத்த தனிக்குமரன் பதத்தைக் கனிந்து வணங்குவமே (தனன) 154. காடுறுமாச் சிறுமி - தினைப் புனைத்திலிருந்த வள்ளி | 154 |
வண்டுகுடி கொண்ட குழலின் - வணங்குவார் பண்டை வினை துண்டு செயுமின் - பத்திரு வள்ளிக் கிசைந்த குகன் பதத்தை வணங்கிக் கொண்டாடுவமே (தனன) 155. பண்டை வினை - முன்வினை | 155 |
சண்டனுடலங் கிழிபடத் திருக்கழல் தந்த விமலன் தருகுகன் தனைத் தினம் சாமி எனப் பணிவார் அருவினை தானறும் நிச்சயமே (தனன) 156. சண்டன் - காலன் (எமன்) | 156 |
திண்டிறல் மிகுங் குருபரன் திரள் செயும் வண்டுகள் முழங்குமாலை சூழ திருச் செந்தில் மால்வரை மேல் சிறந்த வேலவனை வாழ்த்துவமே (தனன) 157. திண்டிறல் - மிகுவலி திரள் செயும் வண்டுகள் - மிகுந்து முழங்கும் வண்டுகள் | 157 |
பண்டுகட லுண்ட முனிவன் - கழலினை தெண்டனிட வண்டமிழ் உரைதனைப் புகலும் பன்னிரு கைக் குமரன் பதத்தைப் பணிந்து கொண்டாடுவமே (தனன) | 158 |
பள்ளு கொண்டல் இளசைக் குமரன் எட்டேந்திரன் மண்டலீகன் பண்ணை தனிலே - இன்று 159.கொண்டல் இளசை - மேகம் தவழும் இளசை (மழைவளம் பொருந்திய இளசை) மண்டலீகன் - மண்டலாதிபதி | 159 |
கண்டிடும் நெல்லுக்கும் புல்லுக்கும் உள்ள கணக்கு நான் சொல்கிறேன் ஆண்டே 160.ஆண்டே - பண்ணை முதலாளியைப் பணியாள் அழைக்கும் முறை | 160 |
மாலோன் வணங்கும் எட்டீசுபரன் கோவில் வகைக்கேநற் சீரகச் சம்பா நெல்லில் | 161 |
நாலாயிரம் கோட்டை ஓர் தொகையாய் நம்மள் நாதர் பட்டர் வசம் அளந்தேன் 162. நம்மள் - நம் (நம்ம - நம்மள் - பேச்சுவழக்கு) | 162 |
மெய்யான காரணராம் வெங்கிடாசல விட்டுணு கோவிலுக்குந் தன் சம்பா நெல்லில் | 163 |
அய்யாயிரம் கோட்டை நம்பி திருமலை அய்யங்காரர் தன்வசம் அளந்தேன் | 164 |
சாத்தூர்ப் பெருமாள் படித்தரம் பூசை தவறாமல் என்றும் நடக்க உங்கள் 165. படித்தரம் - கோவில் முதலியவற்றுக்குச் செய்யும் கட்டளை | 165 |
வார்த்தைப் படிக்கு ஆயிரம் கோட்டை கஸ்தூரி வாரணனம் பாரத்தில் அளந்தேன் 166. கஸ்தூரி வாரணன் - பெயர் அம்பாரம் - குவியல் | 166 |
விண்ணோர் புகழும் கழுகா சலக்குக வேளுக்குப் பூந்தாளைச் சம்பா நெல்லில் 167. பூந்தாளைச் சம்பா - நெல்வகை | 167 |
அண்ணர் பட்டம் வசம் எண்ணாயிரம் கோட்டை அட்டி பண்ணாமல் அளந்தேன் 168. அட்டி பண்ணாமல் - தடை சொல்லாமல் | 168 |
கந்தன் குமர ரெட்ட பாண்டிய தெய்வேந்திரன் கண்ணன் திருநாமம் துதிக்கும் நாகூர் | 169 |
முத்துப் புலவர் வளவுக்குத் தானுண்ண முன்னூறு கோட்டை நெல்ல ளந்தேன் 170. வளவு - இருப்பிடம் | 170 |
திட்டமதாய்க் குளம் வெட்டுக் கென்றே - சேரில் கட்டுநெல் லாயிரம் கோட்டைக் (குளத்)தைக் 171. சேர் - நெற்கூடு, வைக்கோல்புரி சுற்றி அமைப்பது | 171 |
கெட்டியதாய் நோட்டம் பார்க்கின்ற ராக்கப்பன் செட்டியார் தன்வச மளந்தேன் | 172 |
சட்டமதாகப் படிக்கும் கனக சபாபதியா பிள்ளை கணக்கின் படி 173. சட்டமதாக - செவ்வையாக | 173 |
கொட்டிய முத்துப் பேயன்பால் எண்ணாயிரம் கோட்டை நெல் பாட்டத்தில் அளந்தேன் 174. முத்துப்பேயன் - முத்தப்பய்யன்; பாட்டம் - பகுதி | 174 |
உவணகிரி சுத்தித்தேர் ஓட்டி வைப்பதற்கு ஒன்பதினாயிரம் கோட்டை நெல் 175. உவணகிரி - கழுகுமலை (உவணம் - கழுகு) | 175 |
எவரும் புகழும் குமாரவேல் மணியத்துக்கு ஏற்கவே தீர்க்கமாய் அளந்தேன் 176. தீர்க்கமாய் - திட்டமாய் | 176 |
சம்பாதி வெற்புக் குமர குருபரர் சன்னிதிச் சத்திரம் நடக்க வென்றே 177. சம்பாதி வெற்பு - கழுகு மலை | 177 |
கொம்பு பெறவே தொண்ணூற் றொரு கோட்டைநெல் சுப்பன் பகுதியில் அளந்தேன் 178. கொம்புபெற - மேன்மை பெற பகுதி - வருவாய் | 178 |
இந்தவகை அன்பத்தீராயிரத் தெழுநூற்று ஒரு கோட்டைநெல் நீக்கிச் சேரில் 179. அன்பத்தீராயிரம் -ஐம்பத்தீராயிரம் | 179 |
வந்தநெல் தொண்ணூத்தி ரெண்டுலட்சம் கோட்டை சொந்த இருப்பு காணாண்டே | 180 |
தீர்த்த விசேடம் பெறும் தனுக்கோடி சிவராம லிங்கருக் கென்றேகண் பார்த்தும் | 181 |
ஓராயிரம் கோட்டைநெல் நேர்த்தியாய்ப் பள்ளையச் சம்பா நெல்லளந்தேன் 182. பள்ளையச் சம்பா - நெல்வகை | 182 |
காசினி போற்றிடு மாற்றினிக் கிரிக்கோவில் கட்டளைக் கெண்ணூறு கோட்டை விசு 183. கட்டளை - கோவில்களுக்குச் செய்யும் நிபந்தனை | 183 |
வாசமதாய் நமசிவாயம் பண்டாரம் வசத்தில் மிளகுநெல் அளந்தேன் | 184 |
கூடல்வளர் சொக்கேசர் மீனாட்சிக் கெண்ணூறு கோட்டைநெல் குங்குமச் சம்பாயிந்த | 185 |
நாடறியும்படி கட்டளை மீனாட்சி நாதர்பட்டம் வசமளந்தேன் | 186 |
தாழ்வு வராமலே கேசய்யங் காற்குப்பூந் தாளைச் சம்பா நெல்லளந்தேன் | 187 |
காந்திமதி வடிவாள் நெல்லை நாயகர் கட்டளைக் கெண்ணூறு கோட்டை | 188 |
வராந்தக மாகப்புளுகு சம்பா நெல்லை வாரிக் கையாரவே அளந்தேன் 189. வராந்தகம் - வராத்தம் - கட்டளை | 189 |
புன்னைவனச் சங்கரேசுபரர் கோவிலுள் பூசை தவறாமல் நடக்கத்தானே | 190 |
அன்னதானச் சம்பா ஓர்தொகையாக அளந்தேன் அறுநூறு கோட்டை | 191 |
ஆதிவெயில் உகந்தாள் முப்பிடாரி அலங்காரிக் கஞ்ஞூறு கோட்டை மனு 192. அஞ்ஞூறு - ஐந்நூறு | 192 |
நீதியாகவே பண்டாரம் கையினில் நேர்முத்துச் சம்பா நெல்லளந்தேன் 193.பண்டாரம் - சிவனடியார்; இச்சொல் பண்டாரகன் என்பதன் திரிபு | 193 |
மங்காத சீர்த்திபெறும் எட்டயபுரம் தனில் தங்காளி நாயகிக் கென்றே - கன | 194 |
பொங்கமாய் முன்னூறு கோட்டைநெல் பூசாரி அங்கணன் பாரிசம் அளந்தேன் 195. கனபொங்கம் - பெருமையும் பொலிவும் பாரிசம் - வசம் - இடம் | 195 |
செப்பமுறும் தவசித் தம்பிரானுக்குச் சித்திரக் காலி நெல்லதிலே சைவ | 196 |
சுப்பன் பண்டாரன் வசமளந்தேன் ஓர் தொகையாய் அறுநூறு கோட்டை | 197 |
தாரணி போற்றும் இளசை அன்னதானச் சத்திரத்துக்கே ராசவெள்ளை நெல்லில் | 198 |
ஆருமகிழச் சிதம்பரத் தய்யன் வசத் தாயிரங் கோட்டைநெல் அளந்தேன் | 199 |
குலதெய்வமென்னுஞ் சகதேவிக் கானைக் கொம்பன் சம்பா நெல்லதிலே நான் 200. சகதேவி - குலதெய்வத்தின் பெயர் ஆனைக் கொம்பன் - நெல் வகை | 200 |
நிலவரமாக முன்னூத் தஞ்சு கோட்டைநெல் 201. நிலவரம் - இங்கு வழக்கப்படி என்று கொள்ளலாம் * நேற்று அந்தி எனப் பிரியும் | 201 |
காசி கேதாரத்தினில் வாசமிகு விசுவேசர் படித்தரம் நடக்கப்படி 202.படித்தரம் - கோயில் முதலியவற்றுக்கு உதவும் தினசரிக் கட்டளை | 202 |
பூசை தவறாமல் ஆயிரம் கோட்டைநெல் போசன சம்பா நெல் அளந்தேன் 203. போசன சம்பா - நெல்வகை | 203 |
மங்கையெனும் கோவில்பட்டி தனிலே வாழ்பூவண நாதருக் கென்றே வெகு | 204 |
இங்கிதமாகவே முன்னூறு கோட்டை நெல்லிற்குச் சம்பா நெல்லளந்தேன் 205. இங்கிதமாக - இனிமையுடன் | 205 |
சந்தவரை திருச்செந்தூரில் மேவிய சண்முகனார் கட்டளைக்கே நல்ல | 206 |
வெந்தயச் சம்பா எழுநூறு கோட்டைநெல் வேலன் பகுதியில் அளந்தேன் 207. வெந்தயச் சம்பா - நெல்வகை; பகுதி - வருவாய் | 207 |
சாத்திர தோத்திர வேத பாராயணத் தாத் தய்யங்கார் வகைக்கென்றே | 208 |
ஆத்தி கிணத்தினில் அஞ்ஞூறு கோட்டைநெல் காத்தன் பகுதியில் அளந்தேன் | 209 |
ஆதிக்கற்குப் பராபரி யாகிய ஆன கண்ணப் பருந் தனக்கு | 210 |
மாதிஷ்டமாகவே எண்ணூற் றஞ்சு கோட்டைநெல் மாசற்ற சம்பாவில் அளந்தேன் | 211 |
நற்றமிழ் ஓங்கும் கடிகைப் புலவர் நமச்சிவாயப் புலவருக்கே துரை 212. துரை - தலைவர் | 212 |
சொல் தவறாமல் முன்னூற்றஞ்சு கோட்டைநெல் தூய வெள்ளை தனில் அளந்தேன் | 213 |
வீணைதனில் சுர ஞான மிசைத் திடும் வெள்ளை அண்ணாவி குமாரர் தனக்கும் என்று 214. சுர ஞானம் - இசை அறிவு அண்ணாவி - கூத்து முதலியன பழக்குபவர் | 214 |
வான்புகழ் தொண்ணூற் றஞ்சு கோட்டை நெல் வாழைப் பூச் சம்பாவில் அளந்தேன் 215. வாழைப்பூச் சம்பா - நெல்வகை | 215 |
சம்பிரதிப் பிள்ளை வயித்திய லிங்கர் தயாலெழுதுங் கைக் கணக்கின் படி 216. சம்பிரதி - தலைமைக் கணக்கன் | 216 |
அம்பாரஞ் சேரில் களஞ்சியந் தோறும் அனேக நெல் கட்டினேன் ஆண்டே 217.அம்பாரம் - சேர், களஞ்சியம்; நெல் சேர்த்து வைக்கும் இடம் | 217 |
இத்தனை நெல்லும் உள்ளூர் மணியம் வெங்கடேச ரெட்டு முன்னிலைக் கேயின்று 218. மணியம் - விசாரணைக் காரர் | 218 |
கந்த னனுத்தாரப் படிக் களந்துமே கட்டி வைத்தேன் பண்ணை ஆண்டே | 219 |
நந்தவனச் சிந்து சந்தமிகும் புஷ்பவனமே - முத்து சாமி செய்த நந்தவனமே - என்று | 220 |
சார்ந்தார் களிகூர்ந்தார் - மனந் தேர்ந்தார் கலி தீர்ந்தார் 221. கலி - சிறுமை, வருத்தம் | 221 |
கொந்து கொந்தாய் மலர்தூவும் - மயல் கொண்டிடவே குயில் கூவும் 222. கொந்து - கொத்து | 222 |
பின்னும் கூடும் பெடையோடும் உறவாடும் விளையாடும் | 223 |
பஞ்சவர்ணக் கிள்ளைச் செறிவும் - வெகு பாந்தக் கலவிகள் புரியும் - கனி | 224 |
பழுக்கும் கொத்தி இழுக்கும் - பிரசம் ஒழுக்கும் நிலம் வழுக்கும் 225. பிரசம் - தேன் | 225 |
அஞ்சிறைத் தும்பிகள் ஓங்கும் - குயில் அன்புடன் வயினால் வாங்கும் - மலர் 226.அஞ்சிறைத் தும்பி - 'கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி' - குறுந்தொகை - ஒப்பு | 226 |
அடுக்கும் கீதம் தொடுக்கும் - மார்க்க மெடுக்கும் இன்பம் கொடுக்கும் 227. கீதம் - இசை மார்க்கம் - கூத்து வகை | 227 |
இச்சையுடன் இரண்டு மந்தி - மாவில் ஏறிப் பலாக்கனி அருந்திக் - கனிக் 228. கனிக்கெதிரும் - கனிக்காக எதிர்த்துக் கொள்ளும் | 228 |
கெதிரும் சோலை உதிரும் - சுளை உதிரும் கனி உதிரும் | 229 |
உச்சிதச் செண்பகத் தோப்பும் - பெண்கள் ஊடே மலர் கொய்யும் தாப்பும் - தென்றல் 230. உச்சித - உயர்ந்த தாப்பு - நேரம், சௌகரியம், இடம் | 230 |
ஓட்டமும் மலர் ஆட்டமும் குயில் ஈட்டமும் கன தேட்டமும் 231. ஈட்டம் - கூட்டம்; தேட்டம் - செல்வம் | 231 |
கற்பகக் காவனம் போலே - மயக்கங் காணுதடி ஒருக்காலே - சுத்திக் 232. கற்பகக்கா - கற்பகச் சோலை காவனம் - சோலை - ஒருபொருட் பன்மொழி ஒருக்கால் - ஒருமுறை | 232 |
கன்னலும் வளந் துன்னலும் கன சென்னெலும் சடைப் பின்னலும் 233. கன்னல் - கரும்பு; வளந்துன்னல் - வளம் சேர்த்தல் சென்னெல் - செந்நெல், எதுகைக்காகத் திரிந்தது | 233 |
பொற்ப மிகுங்கன வாளையும் - தன்பூட் டுட வாளெனும் தாளையும் - சாலைப் | 234 |
பொங்கமும் திருவங்கமும் மகன் சங்கமும் பிரசங்கமும் 235. பொங்கம் - பொலிவு அங்கம் - அலங்காரம் சங்கம் - கூட்டம் | 235 |
குங்குமச் சந்தன மரமும் - புன்னை கொண்டு வளர்ந்திடு முரமும் - மலர்க் | 236 |
கொல்லையும் மணமுல்லையும் - பசுங் குல்லையும் திருவில்லையும் 237. குல்லை - இருவாட்சி; வில்லை - வில்வம் | 237 |
புங்கமிகு நந்தவனமும் - தெய்வ பூமியிற் கற்பக வனமும் - கண்டு 238. புங்கம் - உயர்ச்சி | 238 |
புகழ் ராதை இகழ்வார் மனம் மகிழ்வார் கிட்ட யகழ்வார் | 239 |
மாமரம் தோறும் உலாவி - குயில் மாரனை வாவென்று கூவி - அதில் 240. மாரன் - மன்மதன் | 240 |
வசிக்கும் குடல்பசிக்கும் - மெத்த ருசிக்கும் கனி பொசிக்கும் | 241 |
தென்னங் குரும்பையைத் தின்று தெற்கே நிழலிலே உறங்கும் - மனம் | 242 |
செழிக்கும் உடல் நௌிக்கும் முகம் களிக்கும் மதங் கொழிக்கும் | 243 |
பன்னகந் தென்றலைப் புசிக்கும் - கன பண்புயரு மலையினில் வசிக்கும் - பல 244. பன்னகம் - பாம்பு | 244 |
வளமும் பரிமளமும் கடல் வளமும் மலை வளமும் 245. பரிமளம் - நறுமணம் | 245 |
தங்கும் வளம் கண்டு மகிழ்ந்தார் - முத்து சாமி தெய்வேந்திரனைப் புகழ்ந்தா - ருப 246. முத்துசாமி தெய்வேந்திரன் - பாட்டுடைத் தலைவன் | 246 |
சரித்தார் மெள்ளச் சிரித்தார் - மலர் பறித்தார் குழல் தரித்தார் | 247 |
காவடிச் சிந்து தாயே சரசோதி - அருள் தரவேணுநீ தாயே 248. சரசோதி - சரசுவதி என்பதன் இசை வழக்குத் திரிபு | 248 |
வாயீசுபரி அரசே - தமிழ் வாணற் கருள் புரிவாய் 249. வாயீசுபரி - வா ஈச்வரி என வரும் | 249 |
காவடிச் சிந்துபாடி - உந்தன் கருணை மலர் தேடி | 250 |
சேவடி தனைப் போற்ற - அருள் புரிவாய் மனம் மகிழ்வாய் | 251 |
ஆண்டி குமராண்டி - எழில் அழகு மயிலாண்டி | 252 |
மூண்டி ரண சூரர்களைத் தாண்டி மயி லேறி 253. மூண்டி - கூடி ; இரணசூரர் - யுத்தவீரர் | 253 |
முவ்விரண் டாறுமுகம் எவ்வாரென் றறிந்து 254. மூவிரண்டு - முவ்விரண்டு எனக் குறுகியது | 254 |
செவ்வே வழி நடந்தால் சிவன் அவ்வாறே துணை செய்வார் 255. செவ்வே - நேரே நன்றாக | 255 |
மாலிதனை வெல்வேன் - சரவண வாவென்று சொல்வேன் 256. மால் - மயக்கம் | 256 |
பரனே அறுமுகனே உனதிரு நீறிட வினை தீர 257. உன - உன்னுடைய | 257 |
ஞானக் கடல் மூழ்கி - வெகு மானத்துடன் வாழ்க 258. வெகுமானம் - பரிசு, சன்மானம் | 258 |
பாடுவமோ இவ்வனத்தை - வேலர் பண்புனத்தை நாடுவமோ 259. பண்புனம் - பண்படுத்தப்பட்ட புனம் | 259 |
தேடுவமே இவ்வனத்தில் - வேலர் சிறந்திருக்கும் இடந்தேடி | 260 |
ஓடுவமோ கிரியைச் சுற்றி ஒளிந்திருந்தால் பிடிக்க லாமோ | 261 |
ஆடுமன்ன மயிலினங்காள் - செந்தூர் ஆண்டி வேலர் வரக் காணையளோ 262.காணையளோ - கண்டீர்களோ அல்லது காணீர்களோ என்பதன் வட்டார வழக்கு | 262 |
சின்ன அன்ன மயிலினங்காள் செந்தூர் சேவகனைக் காணையளோ | 263 |
அன்னநடைப் பட்சிகளே - எங்கள் ஆண்டி வரக் காணையளோ | 264 |
மாடப்புறாக் கிளிப் பிள்ளை - வடி வேலர் வரக் காணையளோ | 265 |
வாடை கண்டு மயங்கி வரும் - வடி வேலர் வரக் காணையளோ 266. வாடை - வடகாற்று | 266 |
சூரனையும் சூறையாடி வந்த சொகுசன் வரக் காணையளோ 267. சூறையாடுதல் - அலைகழிக்க (வென்ற) சொகுசன் - சுகானுபவமுள்ளவன் - நாகரிகன் | 267 |
ஏறுமயில் ஏறிவரும் - எங்கள் இறையவனைக் காணையளோ | 268 |
கரடி பன்றி யாளிகளே - செந்தூரக் கந்தன் வரக் காணையளோ | 269 |
ஓரடியா லளந்தவர் தன் மருகன் உத்தமனைக் காணையளோ | 270 |
காடைகளே கவுதாரிகளே - செந்தூரக் கந்தன் வரக் காணையளோ 271. காடை, கவுதாரி - பறவையினங்கள் | 271 |
தேடி வரும் புள்ளினமே - செந்தூரச் சேவுகனைக் காணையளோ | 272 |
பஞ்சவர்ணக் கிள்ளைகளே - சிவன் பாலன்வரக் காணையளோ | 273 |
கொக்கினங்காள் குருகிணங்காள் - செந்தூரக் குமரன் வரக் காணையளோ | 274 |
சோலையில் வாழ் குயிலனங்காள் - செந்தூரச் சொகுசன் வரக் காணையளோ | 275 |
காலைமதி சூடிதரும் - கந்த சுவாமி வரக் காணையளோ | 276 |
பாய்ந்து வரும் புலிகரடி - சிவன் பாலன் வரக் காணையளோ | 277 |
மேய்ந்து வரும் தாராவே - எங்கள் வேலர் வரக் காணையளோ 278. தாரா - ஒருவகைப் பறவை | 278 |
கூவுகுயில் மயிலினங்காள் எங்கள் குமரன் வரக் காணையளோ. | 279 |
சுப்பிரமணியர் பேரில் சிந்து முற்றும்
நன்றி :- http://library.senthamil.org/097.htm
0 comments:
Post a Comment