தினமணியில் வலைப்பதிவர்கள் தமது படைப்புக்களைப் பதிவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டபோது, தினமணி வலைப்பதிவர்களுக்குச் சொந்தமாகிறது என்ற செய்தியைப் பதிவு செய்தேன். ஆனால் நேற்றளவும் முயற்சிக்கவில்லை. நேற்று இரு பதிவுகளை கனிச்சாறு வலைப்பதிவிலிருந்து பதிவு செய்தேன்.
1. சேவியர் தனிநாயகம் அடிகள் தமிழ் முதலில் அச்சேறிய வரலாற்றைச் சொல்வது.
2. மூதறிஞர் செங்கைப் பொதுவன், விக்கிப்பீடியாவில் நிறையக் கட்டுரைகள் படைத்தவர். பழந்தமிழ் இலக்கியங்களுக்குத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிவரும் அருஞ்சாதனை பற்றிய தகவல்.
இரண்டுமே இன்றைய தினமணியில் வந்துள்ளது. மகிழ்ச்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல.
தினமணிதரும் வாய்ப்பினை எல்லோரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான். -சங்கர இராமசாமி.
0 comments:
Post a Comment