கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை:
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப :
கறைமிடறு அணியலும் அணிந்தன்று: அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே:
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று: அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே:
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
செம்மொழித்தமிழ்
பதிப்பாசிரியர்
பேராசிரியர் ம.வே. பசுபதி
முதல்வர் (ஓய்வு )
காசிவாசி சுவாமிநாத சுவாமிகள்
கலைக்கல்லூரி
திருப்பனந்தாள்
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்
முதற்பதிப்பு சூன் 2010
பக்கம் 1568 + 20
விலை ரு 300/-
0 comments:
Post a Comment