உட்கார்ந்திருந்து பார்த்துவிட்டு, பிறகு ஒரு வார்த்தை கூட
சொல்வதற்கில்லாமல் ஏன் மவுனம் சாதிக்கிறாய்? ஆபீஸுக்குப் பதில் சொல்ல வேண்டாமா? கலைமகள் ஆபீஸுக்குப் பதில் சொல்லவேண்டாமா?இந்தக் கடிதம் கண்டதும் உடனே பதில் போடுவாய் என்றும் நினைக்கிறேன். இந்தக்கடிதம் இரண்டு பக்கத்துடன் நிற்பது கண்டு எனக்கு கோபம் என்று நினைத்த்துக் கொள்ளாதே !. இதோ பார். இது ராத்தி இரண்டு மணி. படுத்துத் தூங்கிவிட்டு மறுநாள் ஆப்பீஸுக்கு ஓட வேண்டாமா?
இப்படிக்கு
உனtதே உனது
சொ.வி. .
நதிமூலம் ::-
”வாழ்வதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மையில் வாழ்கிறோமா ?.” என்று ந்கேட்ட கலைஞன் வாழமுடியாமல் போன வாழ்வு அவனது வாக்கு மூலமாய் இங்கு ஒலிக்கிறது.
ரெளத்திரம் , மூர்க்கம் என்ற மகா கலைஞனின் இன்னொரு பரிமாணம் கற்பூர ஆரத்தியில் ய்ஹரிசனமாகிறது. அவரின் இன்னொரு முகத்தை அறிய அவரே திரையை விலக்கிக் காட்டுகிறார். சமூகத்தோடு சன்னதம் கொண்டு போராடிய ஒரு கருத்துலகப் போடாளியின் யுத்தம், அந்த யுத்தத்தில் ஏற்ற ரணம், அவர் எழுத்த்குய்க்குப்பின் இருந்ததவம், அதற்குக் கொடுத்தவிலை, சந்தித்த அவமானம், கசப்பு, துயர், சிந்திய கண்ணீர், குருதி , எல்லாம்...பதிலாகி இருக்கின்றன கண்மணி கமலாவுக்கு எழுதிய கடிதங்களில்.- இளையபாரதி.
புதுமைப்பித்தன் பதிப்பகம்
52 / 7 , முதல் தளம்,
நான்காவது தெரு, அஞ்சுகம் நகர்,
அசோக் நகர், சென்னை- 600 083 தமிழ்நாடு
pithan@yahoo.com
0 comments:
Post a Comment