எண்ணங்கள் வலியன !
எண்னிய வற்றுள்
திண்ணமாய்ச் சரியென
நினைத்ததை எழுதுக !
எழுதிய வற்றைப்
பலமுறை. படிப்பாய்
பழுதிலாக் கருத்தையே
பரப்பிட முயல்வாய் !
பரப்பிய கருத்துக்கு
மறுப்புகள் வரும் !
திருப்பி யவற்றைத்
தேர்வுசெய் ! ஒன்றுநேர் !
தேர்ந்த்து தெளிந்த
கருத்துக்குச் செயல்படு
நேந்த செயலுக்கு
எதிர்ப்புகள் வரலாம் !
எதிர்ப்புகள், ஏளனம்,
இழிவுகள் கண்டு,
விதிர்விதிப் புறாமல்
வேகமாய் வினைபடு !
ஊக்கமும் வலிமையும்
உள்ளத்தின் உரமும்
தாக்குறும் எத்தகை
எதிர்ப்பையும் தகர்க்குமே ! 1985
கனிச்சாறு - நான்காம் தொகுதி
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாடல்கள்
செந்தமிழ் அடுக்ககம்
(சி.கே.அடுக்ககம் )
மேடவாக்கம், சென்னை - 600 100
---------------------------------------------------
94444 40449
.
0 comments:
Post a Comment