பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 4, 2014

கனிச்சாறு : 3 :எண்ணமும் செயலும் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்



எண்ணங்கள் வலியன !
     எண்னிய  வற்றுள்
திண்ணமாய்ச் சரியென
     நினைத்ததை எழுதுக !


எழுதிய வற்றைப்
   பலமுறை. படிப்பாய்
பழுதிலாக் கருத்தையே
   பரப்பிட முயல்வாய் !


பரப்பிய கருத்துக்கு
    மறுப்புகள் வரும் !
திருப்பி யவற்றைத்
     தேர்வுசெய் ! ஒன்றுநேர் !


தேர்ந்த்து தெளிந்த
       கருத்துக்குச்  செயல்படு
நேந்த செயலுக்கு
       எதிர்ப்புகள்  வரலாம் !


எதிர்ப்புகள், ஏளனம்,
      இழிவுகள்   கண்டு,
விதிர்விதிப்  புறாமல்
       வேகமாய் வினைபடு !


ஊக்கமும் வலிமையும்
        உள்ளத்தின் உரமும்
தாக்குறும்  எத்தகை
        எதிர்ப்பையும் தகர்க்குமே !  1985

கனிச்சாறு - நான்காம் தொகுதி

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 

பாடல்கள்

செந்தமிழ் அடுக்ககம்

(சி.கே.அடுக்ககம் )

மேடவாக்கம், சென்னை - 600 100
---------------------------------------------------
94444 40449







.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment