தமிழ்த் தலைமை தாங்குவரே, தண்டமிழ்க்குத்
தணிப்பறியாக் கொடுமை செய்தே
அமிழ்பகைவர் தம்பாலே தகுபொருளைத்
தண்டுகின்றார், அவர்க்குச் சொல்வோம்!
தமிழ்க்குலத்தீர் ! தமிழ்குலைத்தீர் ! தமிழ்ப்பண்பு
தனை விட்டீர், உங்கள் வாழ்வும்
தமிழ்த்தாயின் வாழ்வன்றோ ? அந்நன்றி
தனக்கேனும் தமிழ்காப் பீரே !
கனிச்சாறு - 1 - பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்
வெளியீடு
தென்மொழி பதிப்பகம்
செந்தமிழ் அடுக்ககம்
( சி.கே. அடுக்ககம் )
மேடவாக்கம் கூட்டுச் சாலை
மேடவாக்கம்
சென்னை - 600 100.
94444 40449
0 comments:
Post a Comment