பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 14, 2014

இறையனாகரப்பொருள் - களவு

 

இறையனார்  அகப்பொருள்  60  நூற்பாக்களாலானது.  
இந்நூலுக்குக்  “களவியல்”  “இறையனார்  களவியல்”  
என்ற  பெயர்களும்  உள்ளன.  
இந்த  அகப்பொருள்  இலக்கணம்  செய்தவர்  இறையனார்.


01.  அன்பின்  ஐந்திணைக்  களவு  எனப்படுவது
       அந்தணர்  அருமறை  மன்றல்  எட்டினுள்
       கந்தருவ  வழக்கம்  என்மனார்  புலவர்.

02.  அதுவே
       தானே  அவளே  தமியர்  காணக்
       காமப்புணர்ச்சி  இருவயின்  ஒத்தல்.

03.  ஆங்கனம்  புணர்ந்த  கிழவோன்  தன்வயின்
       பாங்கனோரின்  குறி  தலைப்பெய்தலும்
       பாங்கு  இலன்  தமியோள்  இடந்தலைப்படலும்  என்று
       ஆங்க  இரண்டே  தலைப்பெயல்  மரபே.

04.  அவ்வியல்பு  அல்லது  கூட்டக்  கூடல்
       எவ்விடத்தானும்  களவிற்கு  இல்லை.

05.  புணர்ந்த  பின்றை  ஆங்கனம்  ஒழுகாது
       பணிந்த  மொழியன்  தோழி  தேஎத்து
       இரந்து  குறையுறுதலும்  கிழவன்  மேற்றே.

06.  இரந்து  குறையுறாது  கிழவியும்  தோழியும்
       ஒருங்கு  தலைப்பெய்த  செவ்வி  நோக்கிப்
       பதியும்  பெயரும்  பிறவும்  வினாஅய்ப்
       புதுவோன்போலப்  பொருந்துபு  கிளந்து
       மதியுடம்படுத்தற்கும்  உரியன்  என்ப.

07.  முன்னுறவுணர்தல்  குறையுறவுணர்தல்
       இருவரும்  உள்வழி  அவன்  வரவு  உணர்தல்  என்று
       அம்மூன்று  என்ப  தோழிக்கு  உணர்ச்சி.

08.  ஆங்கு  உணர்ந்து  அல்லது  கிழவோள்  தேஎத்துத்
      தான்  குறையுறுதல்  தோழிக்கு  இல்லை.

09.  முன்னுறவுணரினும்  அவன்  குறையுற்ற
        பின்னர்  அல்லது  கிளவி  தோன்றாது.

10.  உள்ளத்து  உணர்ச்சி  தெள்ளிதின்  கரந்து
       கிழவோள்தேஎத்துக்  குறையுறூஉம்  உளவே
       குறிப்பு  அறிவுறூஉம்  காலையான்.

11.  தன்  உள  குறிப்பினை  அருகும்  தோழிக்கு
       முன்னுறுபுணர்ச்சியின்  அருகனும்  உண்டே.

12.  குறையுறும்  கிழவனை  உணர்ந்த  தோழி
       சிறை  உறக்  கிளந்து  சேட்பட  நிறுத்தலும்
       என்னை  மறைத்தல்  எவன்  ஆகியர்  என
       முன்னுறுபுணர்ச்சி  முறைமுறை  செப்பலும்
        மாயப்  புணர்ச்சி  அவனொடு  நகாஅ
        நீயே  சென்று  கூறு  என  விடுத்தலும்
        அறியாள்  போறலும்  குறியாள்  கூறலும்
        படைத்துமொழிகிளவியும்  குறிப்பு  வேறு  கொளலும்
        அன்ன  பிறவும்  தலைப்பெயல்  வேட்கை
        முன்னுறுபுணர்ச்சிக்கு  உரிய  என்ப.

13.  குறையுறுபுணர்ச்சி  தோழிதேஎத்துக்
       கிழவிக்கு  இல்லை  தலைபெயலான.

14.  தோழிக்கு  உரியவை  கோடாய்தேஎத்து
       மாறுகோள்  இல்லா  மொழியுமோர்  உளவே.

15.  முற்படப்  புணராத  சொல்  இன்மையின்
       கற்பு  எனப்படுவது  களவின்  வழித்தே.

16.  களவினுள்  தளர்ச்சி  காப்பு  மிகின்  உரித்தே
       வரைவு  இடை  வைத்த  காலையான.

17.  அல்லகுறிப்படுதலும்  அவ்வயின்  உரித்தே
        அவன்  வரவு  அறியும்  குறிப்பினான்.

18.  குறி  எனப்படுவது  இரவினும்  பகலினும்
       அறியக்  கிளந்த  இடம்  என  மொழிய.

19.  இரவுக்குறியே  இல்வரை  இகவாது.

20  பகற்குறிதானே  இகப்பினும்  வரையார்.

21.  இரவு  மனை  இகந்த  குறியிடத்து  அல்லது
       கிழவோன்  சேர்வது  கிழத்திக்கு  இல்லை.

22.  அம்பலும்  அலரும்  களவு.

23.  வெளிப்பட்ட  பின்றையும்  உரிய  கிளவி.

24.  களவு  வெளிப்படா  முன்னுற  வரைதல்
       களவு  வெளிப்பட்ட  பின்றை  வரைதல்  என்று
      ஆயிரண்டு  என்ப  வரைதல்  ஆறே.

25.  பட்ட  பின்றை  வரையாக்  கிழவன்
       நெட்டிடை  கழிந்து  பொருள்வயின்  பிரிதலும்
       பொருள்வயின்  பிரியாது  ஒருவழித்தணத்தலும்
       புரைவது  என்ப  கற்பாலான.

26.  வெளிப்படைதானே  விரிக்கும்  காலைத்
       தந்தை  தாயே  தன்  ஐயர்  என்றாங்கு
       அன்னவர்  அறியப்  பண்பு  ஆகும்மே.

27.  அவருள்
       தாய்  அறிவுறுதலின்  ஏனோரும்  அறிப.

28.  தந்தை  தன்  ஐயர்  ஆயிரு  வீற்றும்
       முன்னம்  அல்லது  கூற்று  அவண்  இல்லை.

29.  காப்புக்  கைமிக்குக்  காமம்  பெருகினும்
       நொதுமலர்  வரையும்  பருவம்  ஆயினும்
       வரைவு  எதிர்கொள்ளாது  தமர்  அவண்  மறுப்பினும்
       அவன்  ஊறு  அஞ்சும்  காலம்  ஆயினும்
       அந்நால்  இடத்தும்  மெய்  நாண்  ஒரீஇ
      அறத்தோடுநிற்றல்  தோழிக்கும்  உரித்தே.

30.  காமம்  மிக்க  கழிபடர்கிளவியும்
       காப்புச்  சிறை  மிக்க  கையறுகிளவியும்
       ஆறு  பார்த்து  உற்ற  அச்சக்கிளவியும்
       இரவினும்  பகலினும்  நீ  வருக  என்றலும்
       தன்னுள்  கையாறுஎய்திடுகிளவியும்
       அன்ன  மரபின்  பிறவும்  தொகைஇ
       தன்னை  அழிந்த  கிளவி  எல்லாம்
       வரைதல்  வேட்கைப்  பொருள்  என்ப.

31.  ஆறு  இன்னாமையும்  ஊறும்  அச்சமும்
       தன்னை  அழிதலும்  கிழவோற்கு  இல்லை.

32.  களவினுள்  தவிர்ச்சி  வரைவின்  நீட்டம்
       திங்கள்  இரண்டினகம்  என  மொழிப.

33.  களவினுள்  தவிர்ச்சி  கிழவோற்கு  இல்லை.

கற்பு

34.  கற்பினுள்  துறவே  கடிவரைவு  இன்றே.

35.  ஓதல்  காவல்  பகைதணிவினையே
       வேந்தர்க்கு  உற்றுழி  பொருட்பிணி  பரத்தை  என்று
       ஆங்க  ஆறே  அவ்வயின்  பிரிவே.

36.  அவற்றுள்
       ஓதலும்  காவலும்  உயர்ந்தோக்கு  உரிய.

37. வேந்துவினை  இயற்கை  பார்ப்பார்க்கும்  உரித்தே.

38.  அரசர்  அல்லா  ஏனையோர்க்கும்
       புரைவது  என்ப  ஓர்  இடத்தான்.

39. வேந்தற்கு  உற்றுழிப்  பொருட்பிணிப்பிரிவு  என்று
      ஆங்க  இரண்டும்  இழிந்தோர்க்கு  உரிய.

40.  காதற்பரத்தை  எல்லார்க்கும்  உரித்தே.

41.  பிரிவின்  நீட்டம்  நிலம்  பெயர்ந்து  உறைவோர்க்கு
      உரியது  அன்றே  யாண்டு  வரையறுத்தல்.

42.  பரத்தையின்  பிரிவே  நிலத்திரிவு  இன்றே.

43.  பரத்தையின்  பிரிவே  நிலத்திரிவு  இன்றே.

44.  கற்பினுள்  பிரிந்தோன்  பரத்தையின்  மறுத்தந்து
       அறப்பொருள்  படுப்பினும்  வரைநிலை  இன்றே.

45.  புகழும்  கொடுமையும்  கிழவோன்  மேன.

46.  கொடுமை  இல்லைக்  கிழவி  மேன.

47.  கிழவோன்  முன்னர்க்  கிழத்தி  தற்புகழ்தல்
       புலவிக்  காலத்துப்  புரைவது  அன்றே.

48.  நாடும்  ஊரும்  இல்லும்  சுட்டித்
       தன்வயின்  கிளப்பின்  புலவிப்  பொருட்டே.

49.  அவன்வயின்  கிளப்பின்  வரைவின்  பொருட்டே.

50.  உணர்ப்புவயின்  வாரா  ஊடல்  தோன்றின்
       புலத்தல்தானே  கிழவற்கும்  வரையார்.

51.  நிலம்  பெயர்ந்து  உறையும்  நிலையியல்  மருங்கின்
      களவுறை  கிளவி  தோன்றுவது  ஆயின்
       திணைநிலைப்  பெயர்க்கோள்  கிழ்வற்கும்  வரையார்.

52.  நிலம்  பெயர்ந்து  உறையும்  எல்லாப்  பிரிவும்
       ஒழிந்தோர்  அறியவும்  அறியாமையும்
       கழிந்து  சேட்படூஉம்  இயற்கைய  என்ப.

53.  எல்லா  வாயிலும்  கிழவோன்  பிரிவயின்
       பல்  ஆற்றானும்  வன்புறை  குறித்தன்று.

54.  வன்புறை  குறித்த  வாயில்  எல்லாம்
       அன்பு  தலைப்பிரிந்த  கிளவி  தோன்றின்
       சிறைப்புறம்  குறித்தன்று  என்மனார்  புலவர்.

55.  சிறைப்புறம்  குறியா  தோன்றலும்  உளவே
       அவர்ப்  புணர்வு  அறியும்  குறிப்பினான.

56.  திணையே  கைகோள்  கூற்றே  கேட்போர்
       இடனே  காலம்  எச்சம்  மெய்ப்பாடு
       பயனே  கோல்  என்று  ஆங்கப்  பத்தே
       அகன்  ஐந்திணையும்  உரைத்தல்  ஆறே.

57.  அவற்றுள்
       எச்சமும்  கோளும்  இன்மையும்  உரிய.

58.  சொல்லே  குறிப்பே  ஆயிரண்டு  எச்சம்.

59.  முற்படக்  கிளந்த  பொருள்  படைக்கு  எல்லாம்
       எச்சம்  ஆகி  வரும்  வழி  அறிந்து  
       கிளந்த  அல்ல  வேறு  பிற  தோன்றின்னும்
       கிளந்தவற்று  இயலான்  உணர்ந்தனர்  கொளலே.

60.  களவு  கற்பு  எனக்  கண்ணிய  ஈண்டையோர்
       உளம்  நிகழ்  அன்பின்  உயர்ச்சிமேன.  


       .
    http://kanichaaru.blogspot.in/2014/10/blog-post_9.html

செம்மொழித்தமிழ்

பதிப்பாசிரியர்

பேராசிரியர்  ம.வே. பசுபதி

முதல்வர் (ஓய்வு)

காசிவாசி  சுவாமிநாத  சுவாமிகள்

கலைக்கல்லூரி

திருப்பனந்தாள்




 தமிழ்ப்பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

1528+20 ஜி.எஸ்.எம். வெள்ளைத்தாள்

ரூ.300/-

கிடைத்தற்கரிய இந்நூல் ஒவ்வொரு தமிழினக் குடும்பத்திலும்  இருத்தல் வேண்டும்.

தமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் ! - See more at: http://kanichaaru.blogspot.in/2014/10/blog-post_9.html#sthash.Ql29285g.dpuf
தமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் ! - See more at: http://kanichaaru.blogspot.in/2014/10/blog-post_9.html#sthash.Ql29285g.dpuf


.        



       

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

2 comments: