பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 1, 2014

அரசியல் கட்சிகளின் நிதி : தேர்தல் கமிஷன் ஆணை


புதுடில்லி: 'அரசியல் கட்சிகள், தங்களின் நிதி அனைத்தையும் வங்கிகளில் டிபாசிட் செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. 

இதுகுறித்து, தேர்தல் கமிஷன் தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படையான அணுகுமுறைகளை ஏற்படுத்தும் வகையில், சில புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 

இதன்படி, அரசியல் கட்சிகள், தங்கள் நிதி அனைத்தையும் வங்கிகளில் டிபாசிட் செய்ய வேண்டும். சம்பந்தபட்ட கட்சிகளின் பொருளாளர்கள், இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும், கட்சி யின் நிதி தொடர்பான விவகாரங்கள், சான்றிதழ் பெற்ற கணக்கு தணிக்கையாளரால், வருமான வரிச் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு, தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக யாருக்காவது கொடுக்க வேண்டியிருந்தால், ரொக்கமாக கொடுக்கக் கூடாது. இவ்வாறு, தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment