லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டின் எதிர்க்கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்டோனியா கோஸ்டா பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கோவாவை பூர்வீகமாகக் கொண்ட ஆண்டோனியா கோஸ்டா, போர்ச்சுகல் நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக 2015ல் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான சோஷலிஸ்ட் கட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டோனியா கோஸ்டாவின் தாத்தா கோவாவில் பிறந்து வளர்ந்தவர். கோஸ்டாவின் தந்தையார் இந்தியாவில் வாழ்நாட்களைக் கழித்தவர். லிஸ்பன் மேயரான ஆண்டோனியோ கோஸ்டா, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆண்டோனியோ ஜோஸை தோற்கடித்து பிரதமர் வேட்பாளராகத் தேர்வாகியுள்ளார்.
0 comments:
Post a Comment