பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 2, 2014

நொண்டிச் சிந்து - ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

கவிஞன் இவ்வா றுரைத்தான்-புவி
காப்பவன் இடியெனக் கனன்றுரைப்பான்:
'குவிந்த உன் உடற்சதையைப்-பல
கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன்.
தவந்தனில் ஈன்ற என்பெண்-மனம்
தாங்குவ தில்லையெனிற் கவலை யில்லை!
நவிலுமுன் பெரும்பிழைக்கெ-தக்க
ராசதண்டனையுண்டு! மாற்ற முண்டோ?

அரசனின் புதல்வி அவள்-எனில்
அயலவ னிடம்மனம் அடைதலுண்டோ?
சரச நிலையி லிருந்தீர்-அந்தத்
தையலும் நீயும்அத் தருணமதில்
இருவிழி யாற்பார்த்தேன்!-அறி
விலி, உனதொரு குடி அடியோடே
விரைவில்என் ஆட்சியிலே-ஒரு
வேர்இன்றிப் பெயர்த்திட விதித்துவிட்டேன்!'

'கொலைஞர்கள் வருக' என்றான்-அவன்
கூப்பிடு முன் வந்து கூடிவிட்டார்
'சிலையிடை இவனை வைத்தே-சிரச்
சேதம் புரிக' எனச் செப்பிடுமுனம்
மலையினைப் பிளந்திடும் ஓர்-சத்தம்
வந்தது! வந்தனள் அமுதவல்லி!
'இலை உனக் கதிகாரம்-அந்த
எழிலுடையான் பிழை இழைக்கவில்லை.

ஒருவனும் ஒருத்தியுமாய்-மனம்
உவந்திடில் பிழையென உரைப்பதுண்டோ?
அரசென ஒருசாதி-அதற்
கயலென வேறொரு சாதியுண்டோ?
கரிசன நால்வருணம்-தனைக்
காத்திடும் கருத்தெனில், இலக்கணந் தான்
தரும்படி அவனை இங்கே-நீ
தருவித்த வகையது சரிதா னோ?

என்மனம் காதலனைச்-சென்
றிழுத்தபின் னேஅவன் இணங்கின தால்
அன்னவன் பிழையிலனாம்! அதற்
கணங்கெனைத் தண்டித்தல் முறையெனினும்,
மன்னநின் ஒருமகள் நான்-எனை
வருத்திட உனக்கதிகாரமில்லை!
உன்குடிக் கூறிழைத்தான்-எனில்
ஊர்மக்கள் இடம்அதை உரைத்தல் கடன்!'

என்றபற் பலவார்த்தை-வான்
இடியென உரைத்துமின் னெனநகைத்தே
முன்னின்ற கொலைஞர் வசம்-நின்ற
முழுதுணர் கவிஞனைத்-தனதுயிரை
மென்மலர்க் கரத்தாலே-சென்று
மீட்டனள் வெடுக்கெனத் தாட்டிகத்தால்.
மன்னவன் இருவிழியும்-பொறி
வழங்கிட எழுந்தனன்; மொழிந்திடுவான்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment