பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, October 11, 2014

ஊரைத் திருத்துமுன், உலகைத் திருத்துமுன் உன்னைத் திருத்தடா தமிழா - பாவலரேறு பெருஞ்சித்திரனார்


ஊரைத்  திருத்துமுன்,  உ;லகைத்  திருத்துமுன்
உன்னைத்  திருத்தடா  தமிழா  -  நீ
உன்னைத்  திருத்தடா  தமிழா !

பாரைத்  திருத்திடல்  நல்ல  முயற்சியே !
பாட்டனும்  பூட்டனும்  செய்த  முயற்சியே !
யாரைத்  திருத்தினர்;  யாது  வளர்ச்சியே ?
யாங்கணும்  யாங்கணும்  வாழ்க்கை  தளர்ச்சியே !

வேரைத்  திருத்துதல்  பயனளித்திடலாம் !
வினையைத்  திருத்திடும்  முயற்சியோ  சுடலாம் !
கூரை  திருத்தினால்  நிற்குமோ  சுவரே ?
குழியைத்  திருத்தாமல்  இருப்பது  தவறே !

உலகைத்  திருத்திட  வலம்  வருகின்றாய் !
உன்னைத்  திருத்தெனில்  உள்ளம்நோ  கின்றாய் !
அலகிலா  முயற்சிகள்  அறங்கள்.  சட்டங்கள்
ஆரைத்  திருத்தின?  பணயம்கட் டுங்கள் !

ஆயிரம்  ஆண்டுக்கு  முன்னும்  இருந்தனர்:
அம்மண  மாகவே  உண்டு  திரிந்தனர்;
ஏயின  திருத்தங்கள்  என்னென்ன  கண்டாய்?
எழிலுடை !  தலைமயிர் !  மற்றென்ன  விண்டாய்?

வெள்ளுடை  மேனியில்  புரள்வதோ  நேர்மை ?
விஒரிமயிர்  வாளி  முடித்தலோ  சீர்மை ?
உள்ளத்துள்  கள்ளமும்  கரவும்  கிடப்பதா ?
ஊரினை  ஏமாற்றி,  மறைந்தே  நடப்பதா ?

பொத்குமையைக்  காணாத  உளம்என்ன  உளமோ ?
பூசலை  விலைத்திடும்  வளமென்ன  வளமோ?
புதுமைஎன்  றுரைப்பது  செல்வர்க்குச்  செழிப்பு
போக்கற்ற  ஏழையர்க்  கேதுஅதால்  விழிப்பு ?

மன்றங்கள்  எத்தனை ?  எத்தனைக்  கோயில் ?
மடிபவர்  எத்தனைப்  பேர்  தீமை  நோயில் ?
இன்றைக்கும்  நேற்றைக்கும்  வேற்றுமை  யாது ?
இழிவினை,  அழகினால்  மூடலன்  றேது ?

கல்வியும்  செல்வமும்  ஓங்குதல்  மேலோ ?
கணக்கிலா  இழிவுகள்  குவிதலெப்  பாலோ ?
சொல்,வினை  உளத்தோடு  பொருந்துதல்  வாழ்வே !
சொக்கட்டான்  காய்போல்  உருளுதல்  தாழ்வே ! 


கனிச்சாறு  -  தொகுதி -4   


தென்மொழி  பதிப்பகம்

மேடவாக்கம்  கூட்டுச்சாலை

மேடவாக்கம்,  சென்னை  - 600  100
--------------------------------------------------
94444  40449

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment