பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, October 3, 2014

யாழ்ப்பாணத்திலிருந்து 12 - கடவுளர் + அடைக்கலச் சிந்து + குருவிச் சிந்துப் பாடல்கள்

SINDHU (GOD GREETING SONG), சிந்து

The songs mention as “Sindhu” mostly greets the gods. People’s life & religious believes are depends on one to another. The peoples start their all activities with the religious prayers. The sindhu songs greet the god, describe about them and in between them it says about the agriculture & the animals, which are helpful to their activities.

Not only the sindhu sings on God pillayar, God shiva & God murugan, but also it sings on Amman, Naaga thambiran, Iyanaar, Viruman, Veera paththiran, Krishna, Vathanamaar & Annamaar. More than these Pancha paadavar sindhu, the historical very important Kuzhakoaddan sindhu, Kuruvi sindhu & Pandaara vanniyan sindhu also come in this category, and they are used as harvesting song.

“Murugaiyan sindhu” links the harvesting activity with the God kandhaswamy, who is in Nallainagar. In these songs, it has some songs notes about Vallipura maayon & Nallainagar velon.

Amman sindhu describes about amman, who is in Vattapazhai temple. It says the history about her, her miracles & how she comes to that place after the very big displacements.

“Silambukooral / Kovalanaar kadhai” are now also in written form. It is different from “Silappathikaaram”. In “Silappathikaaram” the human lady respect as god. But in “Silambukooral”, the god Umathaeviyaar describes as “Kannagi”. In Hindu tradition, there is a restriction to worship a human lady as a god. So, to compromise this problem “Silambukooral & Amman sindhu” has been risen.

Naachimaar prayer is famous in Mullaitivu. In Naachimaar sindhu, it mentions the history of Naachimaar temple in “Vaddu vaahal”.

“Naagathambiran sindhu” is also famous in Mullaitivu.

The god, who is protecting the soul, is called as Annamaar. The song sings on this god is called as “Annamaar sindhu”.

“Vadhanamaar sindhu” says the birth of Vadhanamaar. A lady prays to god Thirumaal to give a child. Due to that she gets 100 Vadhanamaar. The Vadhanamaar sindhu says them as young soldiers. The last song of the Vadhanamaar sindhu greets & thanks to Maayavan, The kandy king Thambalakaamanaathar & the head of Vathanamaar. Some records have mentioned, that these songs may be sung by a person belongs to east Sri Lanka.

Now, we can be noticed the main lyrics of “Sindhu” songs. These songs were taken from a written copy, which is written by Velupillai kanapathipillai, he is belongs to Puthukudiyiruppu, on 1959 by using a ancient written copies.




01.பிள்ளையார் சிந்து (PILLAYAR SINDHU)


வீசுகரமேக நிற வேதநுதலான் கருணே

மேவுமதவாரண வினாயக வினோத

கூறு தமிழ்சேர் முதலி கோமளவள்ளிக்கிளைய

குஞ்சு மதனைக் கிளைய குஞ்சரமுகத்தோன்

பேசுதிசை மேருவிடை பாரதமார் கெடு

சேமமறவே யெழுது சேர்கருணையாலே

பேசுதிகளுன் கதைகளிசை பாடுதற்குமொரு

பிழைகள் வாராமலே கார் பேளை வயிறானே




02.பரமசிவன் சிந்து (PARAMAN SINDHU)


நாவியும் கீரியும் துளையாத குருமண்ணில்

நாங்கள் நுளைந்து குறும்பொல்லு வெட்டி

பொல்லு நல்ல பொல்லு இது வௌ;ளிகட்டிய பொல்லு

மதியாமல் வாறவரை மட்டடக்கும் பொல்லு

எண்ணமுள்ள பொல்லு இது எதிர் ஏறு பொல்லு

ஏழையடியார்களை ஈடேற்றும் பொல்லு

வண்ணமுள்ள பொல்லு இது வரிசையுள்ள பொல்லு

மதியாமல் வாறவரை மட்டடக்கும் பொல்லு

காச்சி நிமிர்த் கதிர் கோடணல்வாங்கி

காவலுக் கென்று கருதி நடந்து

கூள வெடியாம் குளிர்ந்த இணலாம்

குளக்கட்டு நீளம் புளியம் இணலாம்

ஆரடா எந்தன் புளியடி தன்னில்





03.முருகையன் சிந்து (MURUGAIYAN SINDHU)


கரியதொரு விறுமனும் வைகாளி அப்பரும்

கஞ்ச வீரபத்திரரும் யாப்பை வன்னியரும்

குருபரன் ஆறுமுகக் குமாரவேலாயுதன்

குன்றுதைக் குறமகள் வள்ளிபங்காளன்

முருகர் முள்ளியவளைக் கலியான வேலரை

முதல்வனைச் சேவிக்க முழுதும் வந்தனரே

பொன்னினாலே பூனைநுhல் பின் குடுமியும்

பொழுது விளையாட நல்ல வேலுஞ் சிலம்பும்

என்னாயனோ யெனதன் நாவுக்கு அரசே

எந்த வினை தீர்க்க வந்த வள்ளி மணவாளா

உன்னாமமே சொல்லி ஓதுமடியாற்கு

ஒரு நொடியில் மயில் ஏறி வரவேணும் முருகா


04.நாகதம்பிரான் சிந்து (NAAGATHAMBIRAN SINDHU)


வாசுவுடனே சேடன் வாதாடிநின்றான்

மகா மேடு தன்னைப் படத்தால் மறைத்தாய்

கூசுபுனல் வாயுவின் கோபம் பெறாமலே

கொடு முடிகள் சிதற நின்றலை பொருத நேரம்

வீசு புகழ் ஈசனரும் சந்தோஷமாகி

நீராவினார் படந்தாழ்தனை ஒதுக்கி

நீடு புகழ் சேடன் என நின்ற நாயகமே

நீர் தங்கு வேணாவில் நாக நயினாரே

ஆயனார்க் கன்று நீ பாஷமும் ஆனாய்

அன்று நீர் பாதாளமூடு வளி சென்றாய்

ஈசனார் உறைகின்ற தில்லையின் மீதே

இயல்வாகவே நடந்து கொண்டு வந்தாயே நயினாரே





05.ஐயனார் சிந்து (IYANAAR SINDHU)



வண்ணமிகு பொன்னின் வரத்தியைச் சூடி

வாகான நெற்றியிற் பொட்டுகளுமிட்டு

பொன்னின் நுhல் மார்பில் சங்கிலி பதக்கம்

பொருந்து நல்ல வாகுபுரி முன்கை வளை கொச்சை

இன்னமும் பல பல மாலைகள் அணிந்து

இடையிலே யருகு மணி கெச்சை சிலம்பு

அன்னமுஞ் சொர்னமும் என்னுமுள்ளபெருகு

ஆதி சடவக்கங்குளம் வாழுமையனாரே





06.அண்ணமார் சிந்து (ANNAMAAR SINDHU)


அய்யனார் தன்னுடைய திருவருளினாலும்

அலங்கார வைகாளி அப்பனருளாலும்

மெய்யாக வெற்றிதரு மெய்க்கிட்டினராலும்

மிக்கதோர் நல்ல நயினார் பணிக்கனாலும்

அய்யா எனப் பெரிய வாளல கொடுத்து

அகல நின்றுயிர் காக்கும் அண்ணமாற்கபயம்

கோர்த்த மணிமாலையாங்குங்குமப் பொட்டாம்

கோலமுடனே நல்ல பொல்லுடன் கயிறும்

பார்த்த பொழுதெல்லாம் படிநடை நடத்தி

பதினாயிரம் பொலி பறித்தவனும் நீயே

மாத்தலன் தன்நகர் வாள வந்தண்ணமார்

மலரடிகள் பொற்பதம் மனதிலயரலாமே



07.கிருட்டிணன் சிந்து (KIRUDDINAN SINDHU)



சுருதி மொழிதவறாத மனுநீதி மன்னன்

சோளனுதவுஞ் சோள கங்காள கண்டன்

பருதிகுல மன்னன் குளக்கோட்டு ராசன்

பண்டு பூதப் படைகள் கொண்டு சென்றனரே

கருதரிய கல்லு மண்ணும் சுமப்பித்து

கடலும்மலையும் போலவே குளங்கட்டி

வருஷமிரு சென்னல் விளையாப் பன்னிரண்டு

மாதமும் புனல்பாய் மாதவு செய்தனரே



 08.விறுமன் சிந்து (VIRUMAN SINDHU)



பாரினில் மளுப்படை வெளுக்கயிறு சூலம்

பட்டைய மிருப்ப வளை தடி கொண்டு சாட

பிரியமுடனே கரு மீசையை முறுக்கி

வெறி கொண்டமதகரியை வெண்டு காடேறி

ஏறுமலர் மேவு சடவக்கங்குளம் வாளவரு

இயல்வான விறுமனுடை திருநாமமயரோமே





09.வயிரவன் சிந்து (VAYIRAVAN SINDHU)



கைதனிற் பொக்கணங்கஞ் சுளிகமண்டலம்

காவி துயிலாடை கைத் தண்டையுடனே

மெங்கனி திறந்து சிவமணித் தாவடம்

வீமக்க பால மொருகர மீதி லேந்தி

பைந்தலை முர்ந்தலை சூலம் தரித்தாகும்

வயிரவரை மறவாத மதுரை நாயகனே

வயிரமது கொண்டாட முகடா விழுந்து

மாறாத நிழல்மருப் பெங்கும் பரந்து

தயிருடன் கரையொடு கட்டுனற் நாதனார்

தாமென்ன வழர் பூதர் தாத்தினிழல் மேவும்

சேலுண்டு பரிவினுடன் தேவதைகள் நின்று

திந்தோமெனவே நடம் புரிந்திடச் சென்னல்

பயிர்கொண்டு விளையுமுறிப்பில் குளத்திலுறைகின்ற

பகவானே திரிசூலிபாணி தன் மகனே



10.வதனமார் சிந்து (VATHANAMAAR SINDHU)



கங்கை அணியுஞ் சடில மீதினிலிங்க

கருணை பெறவே வந்த கஞ்ச மலர் கண்ணன்

செங்கை நெடுமால் திருமங்கவர் பதத்தை

தெண்டனிட்ட நல்ல சிந்து கவிபாட

பங்கயமென்னும் புரவி நாவில் விளையாட

பவளவாய் செல்வியும் பண்ணுதமிழ் மாதுவும்

வெங்கரிமுகன் பிள்ளை வெம்பிறைக் கோடுடைய

விக்னேஸ்பரன் பாதம் நித்தமயரோமே





11.வீரபத்திரன் சிந்து (VEERAPATHTHIRAN SINDHU)



பார் நடுங்கப் பரமாரதிபர் நடுங்கப்

பங்கயத்தனுமாலு மும்மது நடுங்க

பார் நடுங்கப் பெரிய கரி முகன் நடுங்க

பிந்தி வரு கந்த வேள்மும்மதன் நடுங்க

பார் நடுங்கப் பெரியதக்கனார் வேள்வியில்

பொருதளித்தே யாதி உருவாகி நின்றாய்

சீர் நடுங்கப் புவியில் வந்தவதரித்தாய்

செல்வனே கல்யாண வீரபத்திரனே





12.அம்மன் சிந்து (AMMAN SINDHU)



திரு மருவு கயிலாய மலைதனில் நிலவு புனை

சிவனுமுமையவளு மொரு சிங்காசனத்தில்

மருவும் பொளுது உமையவள் எழுந்தடிபணிந்து

வள்ளலே மதுரை நகர் வந்ததமிழ் மாறன்

வெருவுதலில்லாமலே யவர் மனதில் விளிகண்டு

வெட்கினேனென்று துயர் விடையகலுமென்றார்

தருமருவு மீதளித்தண்டிங்கே தானும்

தையலுன் மனநினைவுதவ முயலுமென்றார்

என்ற பணிவிடை கொண்டு கயிலையங்கிரி நின்று

துண்டு மிண்டின கொடிய கணிதி நிதமும் வளுதி

சூது மாவின் கனியிலே யுறைந்ததனால்

அண்டுமா போதனற்க் கெண்டருளிதன்வளுதி

இனிய மறை நுதலின் விளிதனை மறைத்ததுவே

தவமனைய துதலின் விளிமதிய மறலை வளுதி

தன் கையில் நற்கணிதனைக் கொடுநடந்து

நவ மணிகளுமொரு பேளையில் அடைத்து

நடு விலும் மூடிவைத்தந்த நாளுறைந்தாயே





13.அடைக்கலச் சிந்து (ADAIKALACH SINDHU)



பொன்னே மணிவிளக்கே புருடராகமே

பொதுவர் குல நாயகியே பொற்கொடியே

அன்னே தவமே அறத்தின் பயனே

அடைந்தவர் தமக்குதவும் ஆருயிற்துணையே

மின்னேர் பசும் பொற் சிலம்புதனையான் கொண்டு

வெற்றி மதுராபுரியில் விற்று வருமளவும்

தென்னேரிதளதங்கு வார்குழல் கண்ணகை

தேனாகி அமுதாகியினியதொரு பாலாகி

செல்வப் பெருஞ் செல்வமாய் உங்களுக்கு

ஊனாகி உயிராகி உயர்வாகி ஆயர் குலம்

ஓளியாகி வெளியாகி நின்ற ஓவியமே

மானார் சமைப்பித்த கனகச்சிலம்பை

வளுதி மதுராபுரியில் வித்து வருமளவும்

கானாருமாலைக் கனங்குழல் என்கின்ற

கண்ணகை உந்தனடைக்கலம் தானே





14.குருவிச் சிந்து (KURUVICH SINDHU)



பூதலம் புகழ் பெருகு தனிக்கல் வயல்தன்னில்

புனைக்குருவி வாராமலே காவல் செய்வாய்

ஆதலம் புகழும் பாவினிசை பாட

ஐங்கரனும் ஆறுமுகனும் அம்மனுந்துணையே

நாதமொடுகீதமும் ஓது நான்மறைகளும்

நாலுலகுமொன்றாக நின்ற உமையவளே

மாதவன் தந்திருவின் மாமகளின் நாமகளும்

வந்துதவ அனுதினமும் சிந்தனை செய்வோமே


About us


SIYAPATHA is a group ,which is mainly focused on to find out the various folk songs in the Sri Lanka among all races.From that we keen to find out more details of folk songs which are distributed in Wayamba province.This is a part of our work which is done under the course unit of  LFN  1 X 10 ,Social Harmony & Conflict Resolution of the faculty of Livestock Fisheries & Nutrition of Wayamba university of Sri Lanka.


OBJECTIVES

.         To identify different types of folk songs and how they have related to the religion, cultural festivals, and occupations of the folk.

·         To identify folk songs available in different races, and how they have interconnected to the day to day life of the population in different regions.

·         To aware the relationship and similarities available in folk songs of different races.

·         To make familiarize the university students about different kinds of folk songs.






Faculty of Livestock Fisheries & Nutrition:-

Wayamba University of Sri Lanka

Makandura

Tel: 031-2299429 / 3399870

Fax: 031-2299870

e mail: flfn@mkd.wyb.ac.lk

Web: http://www.wyb.ac.lk/mkdr/flfn/index.html

SIYAPATHA Group leader:-

Tel: 075-7967716

e mail: gayanwindana@gmail.com

Follow us in Facebook:  http://www.facebook.com/pages/Siyapatha/247044525415909

நன்றி :-http://siyapatha.weebly.com/297030072984302129803009.html


சிந்துப் பாடல்களை எல்லாம் தொகுக்க வேண்டும் என்று
முயன்றபோது, கொக்குச் சிந்து, குருவிச் சிந்து, அம்மன் சிந்து ஆகியவை யாழ்ப்பாணத்தில் புகழ்வாய்ந்தவையாகத் திகழ்ந்து வருவதாக இணையத்தில் தகவல் கிடைத்தது.,  


தேடியபோது  SIYAPATHA குழுவினர்  இணையம் உதவிக்கு  வந்தது.  
ஆறுமுகமே  அறுவராக வந்து உதவியதாகக் கொண்டு அவர்களது  
பதிவினை அப்படியே  மீள்பதிவிடப்பட்டது.  ஓர்  யூகத்தின்
அடிப்படையில்  படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன..சரிப்படுத்துவோம்.


சிந்து இலக்கியங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து நூலாக்குவது
நமது கடமை.  ஏனெனில், பண்டிதருக்கே  சொந்தமாக  இருந்த தமிழை 
தெருக்கூத்து  மற்றும்  நாடோடிப் பாடல்களுக்குப்பின்  பாமரர்களுக்குச்  
சொந்தமாக்கியதில்  சிந்துப் பாடல்களுக்குப்  பெரும்  பங்குண்டு. 

சங்கர இராமசாமி, rssairam99@gmail.com
  




Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment