பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, September 27, 2014

வ.உ.சிதம்பரனார் குறித்து மு.வரதராசனார் & நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்வை.




 
"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"
1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.


வ.உ.சிதம்பரனார் குறித்து மு.வரதராசனார் எழுதிய பாடல்

ஒழுக்கத்தின் உரவோய் நாட்டின்
உரிமைப்போர் நடந்த காலை
எழுச்சியின் தலைமை ஏற்றே
இணையிலாத் தியாகம் செய்தோய்
மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும்
முற்றிலும் ஒன்றி நிற்க
விழிப் பொறி இரண்டும் போல
விழுப்பமாய்க் கொண்டாய் அய்யா
பாரதி பெற்ற நண்ப
பழியிலா வீர வாழ்க்கை
பாரெல்லாம் ஏத்தும் வண்ணம்
பண்புடன் நடத்தி நின்றோய்
வேருடன் நைந்து வாடி
வெள்ளையர் ஆட்சி வீழ
நேரிலாப் போர்கள் செய் தாய்
நித்தமும் நின் பேர் வாழி"

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment