சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சில சக்தி வாய்ந்த மக்கள் என்னை தீண்டத்தகாதவராகத்தான் நடத்துகின்றனர் என்று பீகார் முதல் மந்திரி ஜிதன் ராம் மஞ்ஜி தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் பீகார் முதல் மந்தி ஜித்தன் ராம் மன் ஜி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நான் முதல் மந்திரியாக இருந்தாலும் கூட இப்போதும் கூட சில சக்தி வாய்ந்த மக்கள் என்னை தீண்டத்தாகாதவாராகத்தான் நடத்துகின்றனர். ஏனெனில் நான் மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தான் இவ்வாறு செய்கின்றனர்.
மாதுபானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்ய வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று நான் கோவிலுக்கு சென்றேன்.ஆனால் கோவில் சென்று திரும்பிய பிறகு கோவிலையும் அங்குள்ள சிலையும் கழுவப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.
சில வேலைகளை முடித்து கொள்வதாகவும் அல்லது சில சலுகைக்களுக்காவும் எனது காலை மக்கள் தொடுகின்றனர். ஆனால் சமுக அளவில் வருகையில் அவர்கள் என்னை இன்னும் தீண்ட தகாதவராகத்தான் நடத்துகின்றனர். இது மகாதலித் வகுப்பை சேர்ந்தவர்களை அவமானப்படுத்துவது செயல் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி :- தினத்தந்தி
0 comments:
Post a Comment