பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, September 19, 2014

சூரியனும் ஒரு தொழிலாளி - கம்பதாசனின் திரைப் படப்பாடல் - 1956



சூரியனையும், சுற்றும் பூமியையும், ஆர்ப்பரிக்கும் கடலலைகளையும், வீசுங் காற்றையும், மழை நதியையும், விண்மீன்களையும் பாட்டாளி வர்க்கத்திற்குள் கொண்டுவந்துவிட்ட மக்கள் கவி கம்பதாசன், தொழிலாளியைக் கடவுளுக்கு நிகராகக் காண்கிறார்.

எந்தத் தமிழ்க் கவிஞனுமே பார்க்காத புதிய கோணத்தில் தொழிலாளியைக் கடவுளுக்கு நிகராகக்  காண்கிறார்.

1956-இல் வெளிவந்தது : நன்னம்பிக்கை” என்னும் திரைப்படம். கம்பதாசன் எழுதியுள்ள “சூரியனும் ஒரு தொழிலாளி’ பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலைத் தாமே இசையமைத்துப் பாடியுள்ளவர், இசைமேதை, எஸ்.வி. வெங்கட்ராமன்.

1. சூரியனும் ஒரு தொழிலாளி


சூரியனும் ஒரு தொழிலாளி - தினம்
சுற்றும் உலகும் தொழிஉலாளி
வாரி அலையும் தொழிலாளி - எதிர்
வந்திடும் காற்றும் தொழிலாளி
மாரி நதியும் தொழிலாளி
மலரும் உடுவும் தொழிலாளி
பாரை நடத்தும் தொழிலாளி - இனி
பரமனடா கலை பிரமனடா.

இவ்விதமாகக் கலைத்துறையைப் பிரமனாக்கிய ஒரே திரைத்துறைக் கலைஞன் கம்பதாசன் ஒருவரே!

கம்பதாசன் திரைப்படப் பாடல்கள்,



சிலோன் விஜயேந்திரன் எம்.ஏ..டி.லிட்.

மருதா

10, ரயில்வே ஸ்டேஷன் ரோடு,

எடமலைப்பட்டி புதூர்

திருச்சி - 620 012

132 பக்கங்கள் 40/- ரூபாய்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment