பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, August 26, 2014

குமரிக் கண்டம், பூம்புகார் – ஆழ்கடல் ஆராய்ச்சிதனை மாநில/மத்திய அரசுகள் மேற்கொள்ள வேண்டும் !

kumarikandam1

குமரிக் கண்டம் கடலுக்கடியில்.
kumari_kandam
http://tamilvaralaru.wordpress.com/2011/12/05/17000years/
poo1
பூம்புகாரில் புதையுண்ட நகரம்
கடலுக்கடியில் பூம்புகார் செவ்வாய்க்கிழமை, 03 சித்திரை 2012 20:54 பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற
9500 ஆண்டுகளுக்கு  முன்னர்கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள்பற்றிய வீடியோ படம்
காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தைஎடுத்த கிரகாம் குக் கூறியதாவது:-
கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம்இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களைவிடப் பழமையானவை ஆகும்.
கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பேநகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள்  காண்பிக்கப்பட்டன.  கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்டமுக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது.
டலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளன. ஏறக்குறைய பூம்புகார்,காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில்தான் கடலில் மூழ்கி இருக்கவேண்டும்என்று கிரகாம் குக் கருதுகிறார்.
வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள்,ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
பூம்புகார் அருகே மூழ்கிய நகரம்பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரைவடிவப் பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப்
பற்றிஅறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப்பற்றி மேலும் ஆராய்ச்சிசெய்தால் கூடுதல் விவரங்கள்
கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”
இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக்பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள்பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. என்றுமெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம்
ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமைபற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத்
துவங்கினீர்களா? உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்குமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் ஏற்றப்பட்டிருக்க வேண்டாமா?
காம்பேநகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும்
ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ளதொலைக்காட்சிகளுமில்லை
.
தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வுதேவை என்று தமிழறிஞர்கள் குரல்
எழுப்பியதுண்டா?
சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல்ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கியதமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்தஅரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை?
நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசைவற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க
வேண்டாமா?
அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார்முன் மறுக்கவொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும்.
குமரிக்கண்டம்‘சோழர்களின்புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொருகாலத்தில்
கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ.துரத்தில் உள்ளது. இவை தமிழகக்  கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்றுஆதாரங்களாகும்.
தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல்பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளன”
1) சென்னையிலிருந்து சத்தியவேடுவரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்
2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர்வளைவு
3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணைய் நல்லூர் அருகில் புதையுறும் மலட்டாறு
4) வேதாரணியம் பகுதியில் திருத்துறைப்பூண்டிவரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல்திட்டுகள்
5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள்.
இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புகடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. தவிர தமிழகக்கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன்வருடங்கள்),
கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary)பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்)
மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்குமுன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும்
இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும்  தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில்
திருச்சிபாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல்பேரவை 3-வது
கூட்டம் 1994 மலர் )
1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.
2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.
3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல்மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ளபனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக்
கொண்டிருக்கும்தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றிய ஆய்வுகளும்தேவை.
தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன்  வருடங்கள் பழைமைவாய்ந்தன. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம்.
கல்தோன்றிமண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி எனப்புறப்பொருள்  வெண்பாப் பாடலை இலக்கியச்சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும்.
அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள்முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும்
ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும்.கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில்
உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம்இல்லை. ஆயின் என்சைக்ளோ பீடியா அப்ராக்சு அண்டு மினரல்சு என
ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம்உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா?
அன்றி ஆங்கிலக்கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப்பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா?
தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார்ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே
ஏன்? # பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறைஉருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு
எழுந்துபேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.
சப்பானியதீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ஏற்படுத்தப்பட்டு
கடல் கண்காணிப்படுகிறது. இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக்
கடற்கரைகள்ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை.
பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச்சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை
வேண்டாமா?
வரலாற்றுணர்வில்லாததமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன்வராதது ஏன்?
தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?
# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில்மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும்
ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெறவேண்டாமா?
# புதுவை கடலால்  சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்தவேண்டியது புதுவை அரசின் கடமையாகும்.
தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலைமதிக்காத,நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க
வேண்டியது நம்அனைவரின்கடமையாகும
Registered User
Prabhaharan's Avatar
Join Date: Jul 2012
Location: Thanjavur
Posts: 496
Likes (Received): 53

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment