பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, August 28, 2014

நான் ஒரு தமிழ் மாணாக்கன் - ஜி.யூ.போப்

ஜி.யூ.போப் (1820 – 1907) இங்கிலாந்தில் பிறந்து கிறித்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து தமிழுக்காக சேவை செய்தவர்.
தமிழ் மீது பெரும் பற்று கொண்ட அவர் திருக்குறள், நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, மணிமேகலை, சிவஞான போதம் ஆகிய நூல்களை ஆங்கில மொழியாக்கம் செய்தார். செப்டம்பர் 1, 1886 அன்று திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1893 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1900 ஆண்டு திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ELEMENTARY TAMIL GRAMMAR என்னும் தலைப்பில் மூன்று பாகங்களாகத் தமிழ் இலக்கணத்தை மொழி பெயர்த்து எழுதினார். யான் முதன் முதலில் பயின்ற இலக்கணம் டாக்டருடையதே என்று திரு,வி.க புகழ்ந்து கூறினார்.


ஜி.யூ.போப் அவர்கள் தனது கல்லறைக்கென்று ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியாவது தமிழ் மக்களுடையதாக இருக்க வேண்டும். எனது கல்லறையின் மேல் ‘இவன் ஒரு தமிழ் மாணாக்கன்’ எனப் பொறித்து வைக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment