பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Showing posts with label இலக்கணம். Show all posts
Showing posts with label இலக்கணம். Show all posts

Thursday, September 11, 2014

தமிழில் சந்திப்பிழையின்றி எழுதுவோம் ! - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் -


முன்னுரை : -

தமிழின் இயல்பான ஒலிநயத்திற்கும், தெளிவான பொருள் விளக்கத்திற்கும் சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையை நன்கு அறிந்து கடைப்பிடிப்பது இன்றியமையாதது.

சொற்புணர்ச்சியுள் வல்லொற்று மிகுதலும், மிகாமையும் பற்றிய பகுதி சிறப்பாகக் குறிக்கத் தக்கது.

விரிவான இலக்கண நூல்களில் இவற்றைக் கற்றுத் தெளிவது, பொதுநிலைக் கல்வியாளர்க்கும் இலக்கியம் மொழியியல் அல்லாத பிறதுறை மாணாக்கர்களுக்கும் இயலாததாக இருக்கின்றது.

இலக்கணச் சுருக்கமாகவும் மொழிச் செம்மை குறித்தும் இந்நாளில் வெளிவந்துள்ள சிற்சில நூல்கள் இலக்கணக் குறியீடுகளால் கூறி மிகப் பழைய எடுத்துக்காட்டுக்களையும் தந்திருக்கக் காண்கிறோம்.

இலக்கணக் குறியீடுகள் தெரிந்தார்க்கின்றி அவை விளங்குவதில்லை. பழைய எடுத்துக்காட்டுகள் சலிப்பையும் உண்டாக்குகின்றன. ஆகவே, கற்போர் முகஞ் சுளிக்கின்றனர். 

இந்நிலைக்கு மாறாகப் புதிய முறையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் நடைமுறையில் பெருவழக்காக உளள எடுத்துக்காட்டுகள் பற்பல தரப்பட்டுள்ளன.

இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்தவுடன் அதனைக் கண்ணுற்ற பாவலறேறு ஐயா அவர்கள் அது முழுவதையும் சிறுவர் கலை இதழான தமிழ்ச் சிட்டில் சிறுமாற்றத்துடன் தொடராக வெளியிட்டார்கள். அதற்கு அவர்கள் எழுதிய முன்னுரை மறுபதிப்பில் சேர்க்கப்பட்டுத் தொடர்கிறது.

இந்நூலின் முதற்பதிப்பைப் பைந்தமிழ்ப் பாசறையும் மறுபதிப்பைநூழில் பதிப்பகமும் வெளியிட்டன. இம் மூன்றாம் பதிப்பு இறையக வெளியீடு.

தமிழைத் திருத்தமாகக் கையாள வேண்டும். ஒற்றுப் பிழியின்றி எழுத வேண்டும் என விறும்புகிறவர்களுக்கு இக் கைநூல் கைகொடுக்கும்.

                                                                                                                                                    -இறை



Ads by SmartSaver+ 15Ad Options

பெருஞ்சித்திரனார்


அணிந்துரை

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் ‘வல்லினம் மிகுதலும் மிகாமையும்’ என்னும் சிறிய , கையடக்கமான ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.

அதில் வல்லினம் மிகும் இடங்களையும் எல்லோர்க்கும் விளங்குமாறும் மனத்தில் இறுத்திக்கொள்ளுமாறும் எளிய நடையில், ஆசிரியர் பல இலக்கணக் கூறுகளையும் நல்ல எடுத்துக்காட்டுகளுடன் கூறியிருக்கின்றார்.

இந்த நூலைத் தமிழ் மாணாக்கர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பாவலர்கள் முதலியோர் அனைவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டும். மற்றவர்களையும் படிக்கச் செய்ய வேண்டும்.

                                                                                                                      - பெருஞ்சித்திரனார்

வல்லினம் : மிகுதலும் மிகாமையும்

தமிழில் இரு சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் சேர்க்கை புணர்ச்சி என்று குறிக்கப்படுகின்றது.

புணர்ச்சி இலக்கணத்தைச் செம்மையாகத் தெரிந்து கடைப்பிடித்தல் வேண்டும். அல்லாக்கால் ஒலிநயமுங் கெடும்; பொருள் மயக்கமும் உண்டாகும்.

வாழைப் பழத்தை ‘வாளப்பளம்’ என்பது போலவே ‘வாழை பழம்’ என்பதும் பிழையானது; நகைப்புக்கு உரியது. 

‘கலைக் கழகம்’ என்று வல்லெழுத்து மிகுந்திருத்தால்தான் கலை வளர்க்கும் கழகமாக அதி தலைநிற்கும். ‘கலைக் கழகம்’ என்றால் அது கலந்து போகும் கழகமாக நிலை குலையும்.

‘வேலை கொடு’ என்றால் செய்வதற்கு ஏதேனும் வேலை ( பணி ) கொடு என்றும், ‘வேலக் கொடு’ என்றால் போர்க் கருவியாகிய வேலைக் கொடு என்றும் பொருள்.

இவ்வேறுபாடுகளை எண்ணிப் பாருங்கள் ! 

இனிப் புணர்ச்சிக்குரிய இரு சொற்களுள் முதலில் நிற்பது நிலைமொழி என்றும், அடுத்து வருவது வருமொழி என்றும் வழங்கப்படும்.

நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில், நிலைமொழியை யொட்டி, க், ச், த், ப்  என்னும் வல்லின ஒற்றெழுத்துக்களைச் சேர்த்து எழுதுதலே வலிமிகுதல் - வல்லெழுத்து மிகுதல் என்று குறிப்பிடப்படுகின்றது.

நிலைமொழியைப் பொறுத்தவரை உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களில் ‘, ர், வ், ழ் என்பனவற்றையும் இறுதியாகக் கொண்ட சொற்கள் இங்கு நமக்குப் போதுமானவை.

வருமொழிகளில் ‘க, கா, கி, கீ ‘ முதலான அவ்வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் அனைத்தையும் குறிக்கும் ‘ச், த், ப்’ ஆகிய எழுத்துக்களுக்கும் அப்படியே கொள்க. 



வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் -பகுதி II 




வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி III 




வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி IV 




வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி V 




வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி V I - 




வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி VII 


நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-


Wednesday, September 10, 2014

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி VII


41. குற்றியலுகரம்

’உ’ என்னும் எழுத்தே உகரம்.

இயல்பாக உகரம் ஒலிக்கும் கால அளவு ஒரு மாத்திரையாகும், அவ்வாறன்றி உகரம் அரை மாத்திரையளவாக ஒலிப்பதும் உண்டு. அதுவே குற்ரியலுகரம். எனப்படும்..

மாத்திரை = கண்ணிமைக்கும் நேரம்.

தனிக் குற்றெழுத்து அல்லாது  ஏனைய எழுத்துக்களால் ( நெட்டெழுத்தாலோ, பல எழுத்துக்களாலோ  தொடரப்பட்டுச் சொல்லின்  இறுதியில் வல்லினமெய்கள் ஆறின் மேலும் ஏறி ) கு, சு, டு, து, பு, று என ) வருகின்ற உகரம் அரை மாத்திரை அளவே ஒலிக்கும். அதுவே  குற்றியலுகரம் ஆகும்.

இறுதி எழுத்துன் முன்னர் இடம் பெற்றுள்ள  எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

01. சாறு       : நெடிற்றொடர்க் குற்றியலுகரச்ம்.

02. பட்டு        : வன்றொடர்க் குற்றியலுகரம்

03. மஞ்சு       :மென்றொடர்க் குற்றியலுகரம்

04. சார்பு        : இடைத்தொடர்க் குற்றியலுகரம் 

05. வலிது     : உயிர்த் தொடர்க்குற்றியலுகரம்

07. எஃகு         : ஆய்தத்ப் தொடர்க் குற்றியலுகரம்

குறிப்பு : உகரத்தில் முடியினும் குற்றியலுகரம் அல்லாதனவெல்லாம் முற்றியலுகரம் எனப்படும்..

எடுத்துக்காட்டு :- கடு , கதவு


42. பாட்டுப் பாடு !


பாட்டு’ என்பது வன்றொடர்க் குற்றியலுகரம்.

பாடு என்னும் வருமொழியை  நோக்கிப் பாட்டு என்பதன் பி வல்லெழுத்து வந்துள்ளது,

வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லெழுத்து மிகும்.. 

எடுத்துக்காட்டு :

பற்றுப் போடு

தீட்டுப் படுமா ?

மட்டுப் படுத்து.

சாக்குச் சொன்னான்

நாக்குஇப் புண்

கட்டுக் கட்டு

பாக்குக் கொடு

சீட்டுப் பிடி

போக்குக் காட்டினான்

தேக்குக் கட்டில்



..43. கூட்டுப் புழு

நெடிற்றொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் வருமொழிநோக்கி  இரட்டித்து வன்ரொடர்க் குற்ரியலுகரம் ஆதலும் உண்டு. அவையும் ம்மேற்கண்டவாறே புணரும்.

எடுத்துக்காட்டு :-

ஆறு      + பாசனம்       = ஆற்றுப்பாசனம்

அசடு     + பையல்        = அசட்டுப் பையல்

நாடு        + பாடல்           = நாட்டுப் பாடல்

காடு         + பூனை          = காட்டுப் பூனை

ஏடு            + படிப்பு            = ஏட்டுப்படிப்பு 

ஆறு          + படுகை         = ஆற்றுப்படுகை

44. மருந்துக் கடை 

மருந்து  என்பது மென்றொடர்க் குற்றியலுகரம். 

கடை என்னும் வருமொழி  நோக்கி மருந்து என்பதன்பின் வல்லெழுத்து . மிகுந்துள்ளது.

மென்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னும் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :

நண்டுக் கால்

பஞ்சுப் பொதி

குண்டுக் கல்

அன்புத் தளை

குரங்குக் கை

கன்றுக் குட்டி

குறிப்பு :- 

வன்றொடர்க் குற்ரியலுகரத்தின் பின்னும் சிறுபான்மை மென்றோடர்க் குற்றியலுகரத்தின் பின்னும் தவிடப் பிற குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது.

45. எழுத்துகள் 

எழுத்து என்பது வன்றொடர்க் குற்றியலுகரம். ’கள்’ என்பது பன்மை குறித்த இறுதிநிலை, தனிச் சொல்லன்று.

ஆகவே, எழுத்துகள் என்று வல்லெழுத்து மிகுக்காமல் இயல்பாகச் சொல்வதே நன்று,.

மேல் கூறியாங்கு எழுத்து என்பது வன்றொடர்க் குற்றியலுகரம். ஆதலால் அதன் பின் வ்பல்லெழுத்தை ‘மிகுத்து ’எழுத்துக்கள்’ என்று எழுதுகின்றனர் பலர்.

அவ்வாறு கொண்டால் பாக்குகள், தோப்புக்கள், என்றெல்லாம் வழங்குவது  இயற்கைக்கு மாறாக உள்ளது.. பேச்சு வழக்கிலும் இல்லை,

ஆகவே, வன்றோடர்க் குற்றியலுகரமேயாயினும், ‘கள்’ என்னும் இறுதி நிலைக்கு முன் வல்லெழுத்து மிகாமையையே கடைப்பிடித்தல் வேண்டும்.

எடுத்துக்காட்டு :- 

தேக்குகள்

மூச்சுகள்

பூட்டுகள்

சீப்புகள்

போத்துகள்

குத்துகள்

குத்துகள்

பற்றுகள்

மெட்டுகள்.

கோப்புகள் 

கீற்றுகள்

46. திருக்குறள்

’திருஎன்பது  குறள் நூலுக்கு சிறப்புப் பற்றிய அடைமொழியாக முன்னிற்கிறது. 

வருமொழிக் கேற்பத் ‘திரு’வின் பின் வல்லெழுத்து மிகுந்து திருக்குறலாக விளங்குகின்றது.

திரு என்னும் அடைமொழிகள் பின் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

திருக்குமரன்

திருப்பாணாழ்வார்

திருத்தக்கதேவர்

திருக்கண்ணப்பர்

குறிப்பு :-  இக்காலத்தில் மக்கட் பெயருக்கு முன் மதிப்பு  அடைமொழியாக வழங்கப்படும் திரு, உயர்திரு, தவத்திரு, தமிழ்த் திரு முதலான அடைமொழிகளின் பின் புள்ளி வைத்தும், வல்லெழுத்து மிகுக்காமலும் எழுதுவது பெருவழக்காகிவிட்டது. 

எடுத்துக்காட்டு :- 

திரு தமிழ்வாணன், உயர்திரு தமிழ்ச் செம்மல்,தமிழ்த்திரு தேவநேயர்,

தவத்திரு. குன்றக்குடி அடிகளார் 

திருவாளான், திருவாட்டி,  திருவாளார் , திருச் செல்வன் , திருச் செல்வி , என்பனவற்ருள் ஒன்றன் சுருக்கம் என்னும் பொருளிலேயே திரு என்பதன் பின் புள்ளி வைக்கப்படுகின்றது., 


47. நேசமணி பதிப்பகம்

நேசமணி அம்மையார் பெயரைத் தாங்கிய நிறுவனம்’நேசமணி பதிப்பகம்’. இதில் நிலை மொழிக்கும் இடையில் வல்லொற்று மிகவில்லை.

இவ்வாறு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புக்களுக்கும் இடங்க்லளுக்கும் பிறவற்றிற்கும் சூட்டப்படும் சிறப்புப் பெயர்கலை அடுத்து வல்லொற்ரு மிகாது.

எடுத்துக்காட்டு :-

திருவள்ளுவர் கழகம்

வள்ளியம்மை பாடசாலை

கலைவாணர் தெரு

பொதிகை கல்வியகம்

செஞ்சோலை காப்பகம்

மறைமறை கலைக்கூடம்

தையல்நாயகி பற்றவைப்பு நிலையம்

யாழ் கணினியகம்

பொதினி திருமண மண்டம்

தாளமுத்து பாலம்

காவேரி சிறப்பங்காடி

48. மேலுஞ் சில

னி நடு, முன்னர், பின்னர், மற்ரை, மற்று, குறித்து, பொருட்டு, பற்றி, தவிர, விட, கூட என்பனவும் இத்தகைய பிறவுமான பல்வகைச் சொற்களின் பின்னும் வல்லொற்று மிகும் 

எடுத்துக்காட்டு :-, 

இனிப்பார்ப்போம்

முன்னர்க் கூறினோம்

மற்றைப் பொருட்கள்

மற்றுச் சொல்வது என்ன ?

அதுபற்றிப் பேசாதே

மிகுதியே தவிரக் குறைவில்லை

அது குறித்துக் கூறு

அதன்பொருட்டுத் தந்தார்

என்பதுகூடத் தவறு

ற்ற என்னுஞ்சொல் வல்லொற்று மிக்கு வருதலே கடைப்பிடியாக உள்ளது.

எடுத்துக்காட்டு :-  

மற்றக் கருத்துகள்

பிற என்னும் சொல்லின் முன் ந்வல்லினம் மிகாது.

எடுத்துக் காட்டு :- 

பிற சொற்கள், பிற படங்கள்


பல சொற்கள் பிறமொழிச் சொற்கள் என்று கூறப்பட்டமையாலும், பிறமொழிச் சொல் கலந்து வருமிடங்களில் புணர்ச்சி இலக்கணம் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று சிலர் கூறியமையாலும் பல சொற்களில் புணர்ச்சி முறை கை விடப்பட்டுள்ளது.

வடசொல் என்று கூறப்பட்ட உலகம், காலம், தெய்வம், பூதம் போன்ற பல சொற்கள் தூய தமிழ்ச் சொற்கள் என்று நிறுவப்பட்டுள்ளன. அன்றியும் பிறமொழிச் சொற்கள் பெயரளவில் தமிழில் கலந்தாலும் அவை தமிழ் ஒலி வடிவம் பெற்றே வரவேண்டும்,. ஆதலால் புணர்ச்சி முறை கடைப்பிடிக்கப்படுதலே நன்று.

எடுத்துக்காட்டு :- 

ஆண்டு காலம்

குலம் தெய்வம்

காலம் கட்டம்

ஆண்டுக்காலம்

குலத்தெய்வம்

காலக்கட்டம்


படி என்னுஞ்சொல் அப்படி, இப்படி எனச் சுட்டெழுத்துக்களையொட்டியும், எப்படி என வினா எழுத்தையொட்டியும் நிற்கிற இடங்களில் மட்டுமே இவற்றின் பின் வல்லொற்று மிகும்.

  
எடுத்துக்காட்டு :-

அப்படிக் கேள், இப்படித் திரும்பு, அப்படிப் போடு, எப்படிச் சொல்வாய் ? 

அப்படி, இப்படி , எப்படி என்பனவற்றைத் தவிர வேறு எப்படியின் பின்னும் வல்லொற்று மிகாது.

எடுத்துக்காட்டு : 

சொல்கிறபடி செய், நின்றபடி பாடு, அதிரும்படி தட்டு, எட்டாதபடி கட்டு


அடுக்குத் தொடரில் வல்லெழுத்து மிகுதலே பெரு வழக்கு.

எடுத்துக்காட்டு :- 

தனித்தனி, பாடிப்பாடி, பன்னிப்பன்னி, பார்த்துப்பார்த்து

பேசுவோன் குறிப்பைப் பொறுத்து வல்லொற்று மிகாமையும் உண்டு.

எடுத்துக்காட்டு :- 

படி படி - விளையாடாதே

பார்த்து பார்த்து - வழுக்குமிடம்

இரட்டைக் கிளவியில் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

சலசலப்பு, படபடவென, கிலுகிலுப்பை, குளுகுளுவென

நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

முற்றியது.

தாய்த்தமிழில் சந்திப் பிழைகளின்றி எழுதுவோம். 















  

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி V I



33. ஆடிய பாதம்

டிய’ என்பது வினைச் சொல். ஆடியவன்,, ஆடியவள் என்பவற்றைப் போல் இச்சொல் முற்றுப் பெறாமல் குறைபட நிற்றலால் இது எச்ச வினையாகும்.

‘பாதம்’ என்பது பெயர்ச்சொல். ஆடிய என்னும் எச்சவினை பாதம் என்னும் பெயரைத் தழுவுகிறது. ஆகவே, ஆடிய என்பது பெயரெச்ச வினையாகும்.

பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகாது.

( தெரிநிலை குறிப்பு இரண்டும் அடங்கும் )

எடுத்துக்காட்டு :-

ஓடிய குதிரை

படிக்கிற பையன்

நல்ல பாம்பு

இன்றைய செய்தி

உறங்கிய சிறுவன்

எடுப்பான தோற்றம்

கரிய குதிரை

வராத பையன்


அற்றைச் செய்தி, பண்டைப் பெருமை என்பன போல ஐகார ஈற்றுச் சொற்களில் வலி மிகும்.

சில, பல என்னுஞ் சொற்களின் பின் வலி மிகாது.

எடுத்துக்காட்டு :- 

சில சொற்கள்

சில பக்கங்கள்

பல பாக்கள்

பல சட்டங்கள்


34. செல்லாக் காசு


சென்றான்’ என்பது போல ஒரு செயலின் நிகழ் நிலையைக் குறிப்பது உடன்பாட்டு வினை.

‘சென்றிலன்’ என்பது போல நிகழாமையைக் குறிப்பது எதிர்மறை வினை.

‘சென்ற’ என்பது உடன்பாட்டுப் பெயயரெச்சமும், ‘செல்லாத’ என்பது எதிர்மறைப் பெயரெச்சமும் ஆகும்.

எதிமறைப் பெயரெச்சம் பெயரைக் கொள்லும்போது ‘செல்லாத காசு’ செல்லா - காசு என்பது போல அப்பெயரெச்சத்தின் இறுதி எழுத்து மறைந்துவிடுதலும் உண்டு. இதுவே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

‘’ஈறு’ என்பது இறுதி எழுத்தையும், கெட்ட என்பது மறைந்த அல்லது நீங்கிய நிலையையும் குறிக்கும்.

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

விடாக் கண்டன்

உழாக் கலப்பை

கேளாச் செவி

வணங்காத் தலை

எய்தாப் பழி

அழியாப் புகழ்

ஏசாச் சிறப்பு

அணையாத் தீ

35. எண்ணித் துணிக

ண்ணி’ என்பது வினைச் சொல். எண்ணினான், எண்ணினாள் என்பவற்ரைப் போல் நிறைவு பெறாமல் குறைபட நிற்கிறது.

ஆகவே, முற்றுப் பெறாத இவ்வினையை எச்சவினை எனல் வேண்டும்.

எண்ணி என்னும் எச்சம் துணிக என்னும் வினைமுற்ரை ( வியங்கோள் வினைமுற்ரை )த் தழுவுவதால் வினையெச்சம் எனப்படும்.

‘எண்ணித் துணிக !/ என்பது போல வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

அள்ளிக் கொடுத்தான்

போய்ச் சேர்வான்

தேடித் திரிந்தான்

படித்துப் பார்

இனிக்கப் பேசுகிறான்

திரும்பிப் பார்

நயமாய்க் கண்டித்தார்

நயமுறச் சொன்னார்

நயம்படப் பேசினார்.


36. பறந்தன கிளிகள்

றந்தன/’ என்பது வினைச்சொல். இதில் எச்சம் இல்லாமல் வினை முற்றுப் பெற்ரு நிற்க, கிளிகள் என்னும் எழுவாய் பின்னால் வருகிறது. ஆகவே, இது வினைமுற்ருத் தொடராகும்.

கிளிகள் என்னும் வருமொழி நோக்கிப் பறந்தன என்பதன் பின் வல்லெழுத்து மிகவில்லை.

வினைமுற்ரின் பின் வல்லெழுத்து மிகாது.

( தெரிநிலை வினை முற்று, குறிப்பு வினை முற்று இரண்டிற்கும் இது பொருந்தும் )


எடுத்துக்காட்டு :- 

கண்டனர் கற்றோர்

என்மனார் புலவர்

கூறுப சான்றோர்

அழகிது பாவை

காண்மார் கூட்டத்தார்

வந்தது குதிரை

பாய்ந்தன புலிகள்

நல்லன பூக்கள்

எதிறை வினைமுற்றின் பின்னும் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

வாரா குதிரைகள், நில்லாது செல்வம்

37. பார் தெரியும்

பார்’ என்பது ஒருவரைப் பார்த்துச் சொல்லுங் கட்டளைச் சொல். இஃது ஏவல் வினை எனப்படும்.

ஏவல் வினைமுற்று எடு, கொடு, செல், நி, வா, போ என்பன போல வினைப் பகுதிகளாக இருக்கும்.

அன்றியும், ஒருமையில் ஐ, ஆய், இ, ஏ ஆகியவற்றையும், பன்மையில் இர், ஈர் முதலியவற்றையும் ஏவல் வினைமுற்று ஈறுகளாகப் பெற்றும் வரும்.

எவ்வகை ஏவல் வினைமுற்றின் பின்னும் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

எடு பணத்தை !

கூறு செய்தியை !

கட்டு பார்க்கலாம் !

வருவாய் காலையில் !

காணுதிர் காட்சியை !

உண்பீர் சோற்ரை !

சொல்லாதே போ !

வருதி தனியே !


38. வெல்க தமிழினம் !


வாழ்த்துதல், வைதல், வேண்டிக் கொள்ளுதல், கண்ணியமாக ஏவுதல் ஆகிய பொருள்களில் வரும் வினை வியங்கோள் வினைமுற்று எனப்படும்.

‘வெல்க’ என்பதில் ‘வெல்’ என்னும் முதனிலையோடு ‘க’ என்னும் இறுதிநிலை சேர்ந்து வியங்கோட் பொருளைத் தருகின்றது.

க, அ, இ, இய, இயர் ஆகியனவும் பிறவும் வியங்கோள் வினைமுற்ரு ஈறுகள் ஆகும்.

வியங்கோள் வினைமுற்றின் பின் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

செய்க பொருளை !

வாழி பல்லாண்டு !

வாழிய செந்தமிழ் !

வாழியர் பெரிதே !

ஆழ்க தீயவை !

போற்ரி பெரும !

சொல்லுக சொல்லை !

ஓங்க தமிழறம் !

ஒழிக துன்ப்பம் !

எழுக கடிது !


39. ஒன்றே குலம்

ன்று என்னுஞ் சொல்லோடு ‘ஏ’ என்னும் எழுத்துச் சேர்ந்து ஒன்றே என நிற்கிறது.

‘ஏ’ என்பது ஓர் எழுத்தாக இருந்தாலும் ஒன்று என்னும் சொல்லைத் தெளிவுறுத்தி நிற்பதால் அஃது ஓர் இடைச் சொல்லாகும்.

ஒன்றே குலம் என்பதன் இடையில் வல்லெழுத்து மிகவில்லை.

ஏகார இடைச் சொல்லின் பின் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

யானே கள்வன்

பாரியே சிறந்தவன்

இன்றே புறப்படு

கடையரே கல்லாதவர்

வென்றே திரும்புவேன்

ஒருவனே தேவன்

எனக்கே பிடிக்கும்

தாயே பெரியவள்

ஊரே கூடியது

நேற்றே சொன்னேன்


40. நன்றோ சொல்வீர் !

‘நன்று’ என்னும் சொல்லோடு ‘ஓ’ என்னும் எழுத்துச் சேர்ந்து நன்றோ என்று நிற்கிறது.

‘ஓ’ என்பது எதிர்மறைப் பொருளைக் குறிப்பதால் இஃது இடைச்சொல்.

ஓகார இடைச் சொல்லின் பின்னும் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

யானோ காவலன்

மேடோ காடோ

எளிதோ செய்வது

காதோ கேளாது

எதுவோ செய்

ஏதோ தேரியவில்லை

அதுவன்ரோ பிழை

நல்லதோ கெட்டதோ

கண்னோ தெரியாது

வருமானமோ குறைவு

நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

 ( இன்னும் வரும் )
-

Tuesday, September 9, 2014

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி V



25. தமிழா சிலிர்த்தெழு !

தமிழா என்பது போல ஒருவரை நாம் அழைக்கும் நிலையில் அவர் பெயரைக் குறிப்பிடுவது விளித்தல் எனப்படும்.

( விளித்தல் - அழைத்தல் ) இது எட்டாம் வேற்றுமை.


விளியேற்ற பெயர் ‘தமிழன்’ என்பதுபோல இயல்பாகவும் இருக்கலாம். அல்லது தமிழ, தமிழா, தமிழனே, தமிழாவோ என்றவாறு மாற்றங்களைப் பெர்ரும் வரலாம்.

இவ்வாறு விளியேற்ற பெயர்களின் பின் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு.

வளவ கேள் !

தம்பீ போ !

அம்மா சொல் !

குழந்தாய் பார் !

பெரியீர் செல்க !

இளங்கோ படி !

குயிலி பாடு !

தங்காய் கொடு !

வழுதி காட்டு !

இளைஞரீர் காண்மீன் !


26. அக்கரை

‘அ’ என்பது தொலைவில் இருப்பதைக் குறிக்குஞ் சுட்டெழுத்து. அது ‘அந்த’ என்று வளர்ந்தும் நிற்கிறது. அவ்வாறே ‘இ’ என்னும் அண்மைச் சுட்டும் ‘இந்த’ என்று நீண்டுள்ளது.

‘உ’ என்னும் சுட்டெழுத்து நூல் வழக்கிலேயே காணக் கிடக்கிறது. ( ஈழத்தில் பேச்சு வழக்கிலும் உண்டு )

அங்கு, இங்கு, ஆங்கு, ஈங்கு, ஆண்டு, ஈண்டு என்பன சுட்டுப் பெயர்களாகும். அப்படி, இப்படி என்பனவும், அவ்வகை, அத்துணை, இத்துணை என்பனவும் சுட்டுப் பெயர்களாக வழங்கி வருகின்றன.

அக்கரை என்பதில் கரை என்னும் வருமொழியை நோக்கி ‘அ’ என்னும் சுட்டெழுத்தின் முன் வல்லெழுத்து ( க் ) மிகுந்துள்ளது.

சுட்டெழுதுகள், சுட்டுப் பெயர்களின் முன் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

இக்காலம்

உப்பக்கம்

இந்தப் பையன்

அங்குக் கண்டேன்

இங்குச் சென்றார்

ஆங்குத் தெரியும்

இத்துணைச் சிறப்பு

ஈண்டுக் காட்டுதும்

அப்படிக் கூறினார்

இப்படிச் சொல்லலாமா ?

அவ்வகைப் பொருள்கள்

அத்துணைப் பெருமிதம்

27. அது சரி !

து’ என்பது சுட்டுப் பெயர். சேய்மைச் சுட்டு எனப்படும். ‘இது’ அண்மைச் சுட்டு.

‘சரி’ என்னும் வருமொழியை நொக்கி ‘அது’ என்பதன்பின் வல்லெழுத்து மிகவில்லை.

அது, இது, அவை, இவை, அவ்வாறு, இவ்வாறு என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு.:- 

அது தவறு

அவை பிழை

இன்று பேசேன்

இது பழச்சாறு

இவை தூவல்கள்

அன்று சொன்னார்


28. என்ன செய்தி ? 

ன்ன செய்தி ?’ என்பது ஒரு வினாப் பெயர். அது செய்தி என்னும் தொழிற் பெயரால் தொடரப்பட்டுள்ளது.

செய்தி என்னும் வருமொழியை நோக்கி என்ன என்னும் நிலைமொழியை அடுத்து வல்லெழுத்து மிகவில்லை.

எது, எவை, ஏது, யாவை, என்ன, என்று, எத்தனை, எவ்வளவு, என்னும் வினாப் பெயர்களின் முன்னும் ஆ, ஓ, ஏ என்னும் எழுத்துகளை இறுதியாகக் கொண்ட வினாப் பெயர்களின் முன்னும் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

எது கனிந்தது ?

எவ்வளவு கிட்டும் ?

எவ்வாறு தீர்ப்பது ?

என்று சென்றான் ?

காட்சியா பார்த்தான் ?

எவை சிறந்தன ?

ஏது காசு ?

யாது கூறினார் ?

வானொலியா கேட்டான் ?

கதையே கேட்டனை ?

29. யாண்டுச் சென்றாய் ?

யாண்டு என்பது ‘எங்கே’ என்று பொருள்படும் வினாப் பெயர்.

யாண்டு என்னும் வினாப் பெயர் சென்றாய் என்ற சொல்லைச் சேரும்போது இடையில் வல்லெழுத்து ( ச் ) வந்துள்ளது.

‘எ’ என்னும் வினா எழுத்தின் முன்னும், எந்த, எங்கு, யாண்டு, எத்தனை, எப்படி, எற்றை, எவ்வகை, யா என்னும் வினாப் பெயர்களின் முன்னும் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :-

எப்பொருள் ?

எந்தச் சிலம்பு ?

எவ்வகைப் பள்ளி ?

எத்துணைத் துன்பம் ?

யாண்டுக் குடியிருப்பு ?

எப்படி[ பாடினரோ ?

எங்குத் தங்கலாம் ?

யாங்குக் கண்டாய் ?

எத்தனைத் தூவல் ?

யாப் பெரியன ?


30. தீப்பற்றியது 

தீ என்பது ஓர் எழுத்தாக இருந்தாலும் பொருள் தருகின்றமையால் அது சொல்லாகவும் அமைந்துள்ளது.

ஓர் எழுத்தே ஒரு சொல்லாக விளங்குவதால் இஃது ஓரெழுத்தொருமொழி  என்று வழங்கப்படுகிறது.

ஓரெழுத்தொருமொழியின்பின் வல்லெழுத்து மிகும்..

எடுத்துக்காட்டு :- 

ஈக்காடு

ஏச் சென்றது

காப் போல

ஆத் தின்றது

மாப் பூத்தது

சேக்கிழார்

நாப்பழக்கம்

கோச்சேரன்

பாப்புனைந்தார்

நாச்சுவை

31.கனாக் கண்டேன் 


னா’ என்பது ஈரெழுத் தொருமொழி. அதாவது இரண்டே எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல்.

இரண்டே எழுத்துக்களிலும் முன்னெழுத்து குற்றெழுத்துத்தாகவும், ப்ன்னெழுத்து ஆகார நெடிலாகவும் உள்ளன.

கண்டேன் என்னும் வருமொழியை நோக்கிக் கனா என்னும் நிலைமொழியை அடுத்து வல்லெழுத்து மிகுந்துள்ளது.

குறிலைத் தொடர்ந்து ஆகார நெடில் வரும் ஈற்றெழுத்தொருமொழியின் பின் வல்லினம் வரும்.

எடுத்துக்காட்டு :- 

விழாக் கண்டார்

உலாப் போந்தார்

நிலாச் சோறு

பல்;ஆக் காய்த்தது

விலாப் புடைக்க

இராப் பகல்

வினாத் தொடுத்தார்

மிடாக்குடியன்

உசாத்துணை

பொறாப் பேசுமா ?


32. கொசுக் கடித்தது

கொசு என்பதில் இரண்டு எழுத்துக்களும், அவை இரண்டும் குறிலாகவும் இருக்கின்றன. ஆகவே, இது குறிலிணை மொழி எனப்படும்.

இக்குறிலிணை மொழியில் இறுதியெழுத்து ( பின்னெழுத்து _ ‘உகரம்’ ஏறிய மெய் எழுத்தாக உள்ளது.

தனிக்குற்றெழுத்தை அடுத்து உகர உயிர்மெய் எதுவரினும் அது முற்றியலுகரமே.

‘கொசு’ என்பதன்பின் கடித்தது என்னும் வருமொழி நோக்கி வல்லெழுத்து மிகுண்ட்துள்ளது.

குற்றிலிணை மொழிகளில் வரும் முற்றியலுகரத்தின் பின் வலி மிகும்.

எடுத்துக்காட்டு :- 

உடுச் சிதறியது

மடுத் தூர்ந்தது

வடுத் தீர்ந்தது

நடுத் தீர்ப்பு

வலுக் குன்றியது

கணுத் தோன்றியது

அணுப் பிளந்தது

கடுக் கண்டன்

உடுக் குறி

கருக் கொண்டாள்

நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

 ( இன்னும் வரும் )

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி IV



17. நம்பி தம்பி


நம்பிக்குத் தம்பி என்னும் தொடர் நம்பி தம்பி எனத் தொகையாக நிற்கிறது. இது நான்காம் வேற்றுமைத் தொகை.

தம்பி முதலிய முறைப் பெயர்களெல்லாம் நான்காம் வேற்றுமையாகும். ஆறாம் வேற்றுமையாகக் கொள்ளக் கூடாது.

நம்பி என்பது உயர்திணை ஆண்பாற் பெயர்.

உயர்திணை நான்காம் வேற்றுமைத் தொகையில் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

பொன்னி கணவன்

வள்ளி கேள்வன்

தம்பி துணைவி

அத்தை பிள்ளை

நங்கை கொழுநன்

அத்தாச்சி கணவர்

முத்துமணி கொழுந்தி


18. முதியோர் கல்வி

முதியோருக்குப் பயிற்றுவிக்கப்படும் கல்வி என்பதே முதியோர் கல்வி எனப்படுகின்றது.

‘முதியோர் கல்வி’ யில் ‘கு’ உருபும் பொருட் பயனும் சேர்ந்து மறைந்துள்ளன.

நான்காம் வேற்றுமை உருபும் ப்யனும் உடன் தொக்க தொகையில் வலி மிகாது.

எடுத்துக்காட்டு :- 

நீத்தார் கடன்

அரசர் பணிவிடை

அடியார் தொண்டு

தென்புலத்தார் கடன்

குருகாணிக்கை

மூத்தோர் சலுகை

காக்கைச் சோறூ


19. மேனின்று சுரக்கும்

இருந்து, நின்று என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் எனப்படும்.

மேனின்று சுரக்கும் என்பது ஐந்தாம் வேற்றுமை விரி.

சுரக்கும் என்னும் வருமொழி நோக்கி மேனின்றூ என்பதன் பின் வல்லெழுத்து மிகவில்லை.

ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபுகளாகிய இருந்து, நின்று என்பனவற்ரின் பின் வலி மிகாது.

எடுத்துக்காட்டு :- 

வில்லிலிருந்து புறப்பட்டது.

மரத்தினின்று குதித்தான்.

நீரிலிருந்து கரையேறினான்.

பாறையினின்று சரிந்தான்.

20. எமது கொள்கை

யாம் என்பது தன்மைப் பெயர்; பன்மைப் பெயரும் ஆகும்.

இப் பெயர்ச்சொல் வேற்றுமையை ஏற்கும் பொருட்டு ‘எம்’ என்று திரிந்துள்ளது.

‘அது’ என்பது உடைமைப் பொருளைக் குறிக்கும் ஆறாம் வேற்றுமை உருபு.. அது எம் என்னும் பெயரோடு சேர்ந்து எமது என்று நிற்கின்றது.

கொள்கை என்னும் வருமொழியை நோக்கி எமது என்பதன்பின் வல்லெழுத்து மிகவில்லை.

ஆறாம் வேற்றுமை விரியில் அது, அ என்னும் உருபுகளின் பின்னும், உடைய என்னும் சொல்லுருபின் பின்னும் வல்லெழுத்துக்கள் மிகா.

எடுத்துக்காட்டு :-

நமது கணிப்பொறி

உனது சட்டை

எனது துமுக்கி ( துப்பாக்கி )

அவனது பார்வை

என கண்கள்

நின சுவடிகள்

எம தூவல்கள்

தம பாடல்கள்

குறிப்பு : ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருள் ஒருமையாயின் ‘அது’ என்றும், பன்மையாயின் ‘அ’ என்றும் வழங்கி வந்தது.

‘அ’ என்னும் பன்மையுருபு இக்காலத்தில் வழக்குக் குன்றியுள்லது. அம்மா


21. புலவர் தொழில்


‘புலவரது தொழில்’ என்று விரித்துச் சொல்லப்பட வேண்டியது ‘புலவர் தொழில்’ எனத் தொகையாகச் சொல்லப்படுகிறது.

‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபு. அது மறைந்து நிற்பதால் ‘புலவர் தொழில்’ என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை.

புலவர் என்பது உயர்திணை.

உயர்திணை ஆறாம் வேற்றுமைத் தொகையின்கண் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

நம்பி புத்தகம்

காளி கோட்டம்

ஆசிரியர் கூற்று

அறவோர் பள்ளி

தலைவி பெருமை

ஐயனார் கோவில்

கண்ணகி சிலம்பு

முதல்வர் பேச்சு

சான்ரோர் செயல் 

முனிவர் சீற்றம்

22. கிளிச் சிறகு

கிளியது சிறகு - கிளியினது சிறகு என்று விரிவாகச் சொல்வதனையே கிளிச்சிறகு என்று சுருக்கிச் சொல்கிறோம்.

‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபு.

கிளிச்சிறகு என்பது போல ‘அது’ மறைந்து நின்று பொருள் கொடுப்பது ஆறாம் வேற்றுமைத் தொகையாகும்.

கிளி என்பது அஃறிணை. 

அஃறிணை ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

நரிப்பல்

தேர்த்தட்டு

யானைக்கொம்பு

வாழைக்கன்று

அத்திக்கிளை

கலைக்கோடு

பாம்புச்சட்டை

புலித்தோல்


23. குடிப்பிறந்தார்

குடிக்கண் அல்லது குடியின்கண் பிறந்தார் என்னும் விரிவான தொடர் குடிப்பிறந்தார் எனத் தொகையாக உள்ளது.

கண் என்பது இடப்பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமை உருபு. ( இன் என்பது சாரியை. அதாவது சொல்லமைப்புக்காக வரும் ஓர் ஒட்டு )

கால், தலை, இடை, கடை, முகம், வாய் முதலியனவும் ஏழன் உருபுக்களே.

ஏழாம் வேற்றுமை உருபு மறைந்து நிற்பதுஏழாம் வேற்ருமைத் தொகை.

ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

மனைப் புகுந்தார்

குடிப் பிறந்தார்

வலைப்பட்டார்

( மடி ) மடிக்கொண்டு

24. கூண்டுக் கிளி

‘கூண்டில் வாழும் கிளி’ என்பதன் தொகை நிலைத் தொடரே கூண்டுக்கிளி என்பது.

இல் என்னும் ஏழாம் வேற்றுமை உருபும் வாழும் என்னும் பொருட்பயனும் சேர்ந்து மறைந்து ‘கூண்டுக் கிளி’ என நிற்பதால் இஃது ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகும்.

கூண்டு என்பதன்பின் கிளி என்னும் வருமொழி நோக்கி வல்லெழுத்து மிகுந்துள்ளது.

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையிலும் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

மனைக் கிணறு

நீர்க் கோழி

வேர்க்கடலை 

தரைப்படை

சந்தைக் ம்கூச்சல்

மலைப் பாம்பு

அரைக் கச்சு

நிலக்கடலை

வழிச் செலவு

வழிப்பறி


நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

 ( இன்னும் வரும் )







Monday, September 8, 2014

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி III



09. நூலைப் படி 

‘நூல்’ என்னும் சொல்லோடு ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து நூலை என நிற்கிறது.

‘படி’ என்னும் வருமொழிக்கு ஏற்ப நூலை என்னும் நிலைமொழியின் பின் வல்லெழுத்து மிகுந்துள்ளது.

இவ்வாறு ‘ஐ’ உருபு வெளிப்பட நிற்பது இண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடராகும்.

இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :-

மூட்டையைக் கட்டு !

உண்மையைச் சொல் !

யாரைப் பிடித்தாய் ?

பாட்டைக் கேள் !

மலையைச் சுற்றி வா !

பாலைக் குடி !

ஊரைச் சுற்றாதே !

கையைத் தட்டு !

பாடத்தைப் படி !

விரலைத் தொடு !


10. தமிழ் படித்தேன்


தமிழைப் படித்தேன் என்னுந் தொடரே தமிழ் படித்தேன் என்று தொகையாக நிற்கிறது.

‘ஐ’ உருபு மறந்திருப்பதால் இது இரண்டாம் வேற்றுமைத் தொகை.

தமிழ் என்பது அஃறிணை.

அஃறிணை  இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :-

வெற்றி கொண்டான், விடை பெற்றார், முடி புனைந்தான், தலைகொண்டான், பூச்சிகொல்லி,

ஆத்திசூடி, கல்வி கற்றார், எறும்பு தின்னி, தலை கொடுத்தான், சுமைதாங்கி.

11.பெரியார்ப் போற்று

‘பெரியாரைப்போற்று’ என்னுந்தொடரே பெரியார்ப் போற்று எனத் தொகையாக நிற்கின்றது.

‘ஐ’ என்னும் உருபு மறந்திருக்கிறது. ஆகவே இஃது இரண்டாம்வேற்றுமைத்தொகை.

பெரியார் என்பது உயர்திணை.

உயர்திணை இரண்டாம் வேற்றுமைத் தொகையானால் இடையில் வல்லெழுத்து மிகும். அல்லது வேறு மாற்றங்களைப் பெற்று வரும்.

எடுத்துக்காட்டு :-

ஒண்ணலர்ச் செகுத்தார்

தெளிந்தார்ப் பேணுமின் !

ஒம்ன்னார்த் தெறலும்

பெரியார்ப் பிழையேல்

நம்பினார்க் கைவிடேல்


12. யானைப் பாகன் 

‘யானைப்பாகன்’ என்பதில் ‘ஐ’ உருபு மறைந்திருக்கிறது. ஆனால் உருபு மட்டும் மறந்திருக்கவில்லை. பொருட் பயன் தரும் மற்றொரு சொல்லும் சேர்ந்து மறைந்திருக்கிறது.

யானைப் பாகன் என்பதை விரித்தால் ‘யானையை உடைய பாகன்’ என்று அமையும். அதுவே, இஃது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடந்தொக்க தொகையாகும்.

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :-

கொடித் தேர், முடித் தலை, பொடிக் குடுக்கை, செருப்புக் கால், வளைக் கை, திரைக் கடல், தொடித் தண்டு, தாமரைக் குளம்.


13. கணவனொடு சென்றாள்

‘ஒடு’ என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. கணவன் என்னும் பெயரால் ஏற்கப்பட்டுள்ளது. சென்றாள் என்னும் வருமொழி நோக்கி வல்லெழுத்து மிகவில்லை.

ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வல்லெழுத்து மிகாது.

( ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் என்பன மூன்றாம் வேற்றுமை உருபுகள் )

எடுத்துக்காட்டு :-

கண்ணொடு கண், 

வண்டொடு புகுந்தது

நீரொடு தந்தான்

பொய்யொடு பிறந்தவன்

எட்டொடு பத்து

வேலோடு சாய்ந்தான்

மார்போடு தழுவினார்

கையோடு கூட்டிவா

பணிவோடு செய்தான்

முத்தோடு பவளம்

14. வெள்ளிக் காசு !

வெள்ளியால் ஆன காசு என்பதனையே வெள்லிக்காசு  என சுருங்கக் கூறுகிறோம்.

ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. ஆன என்பது பொருட்ப்யன் தரும் சொல். வெள்ளிக் காசு என்பதில் உருபும்பயனும் சேர்ந்து மறைந்திருக்கின்றன.

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :-

பருத்தித் துணி

பட்டுப் புடவை

இருப்புப் பாதை

பிளாச்சுத் தட்டி

செப்புக் குடம்

இருப்புச் சட்டி

நெகிழிக் கூடை

கம்பிக் கூண்டு

மலர்ப் பந்து

துணிக் கட்டு 


15. குழந்தைக்குக் கொடு !


‘கு’ என்பது நான்காம் வேற்றுமை உருபு. ‘கு’ உருபு வெளிப்பட நிற்பது நான்காம் வேற்றுமை விரி.

குழந்தை என்னும் பெயரொடு சேர்ந்து நிற்கும் ‘கு’ உருபின் பின் கொடு என்னும் வருமொழி நோக்கி வல்லெழுத்து மிகுந்துள்ளது.

நான்காம் வேற்றுமை விரியில் வலி மிகும்.

எடுத்துக்காட்டு:- 

பாம்புக்குப் பகை

மாட்டுக்குத் தீனி

நூலுக்குத் தடை

கூலிக்குச் செய்

பாலுக்குச் சர்க்கரை

காலுக்குச் செருப்பு

கடைக்குப் போ

எடைக்குப் போடு

வெளுப்புக்குக் கொடு

பாம்புக்குப் பாலா ?

16. சூர்ப்பகை !

சூர்க்குப் பகை என்பதைச் சூர்ப்பகை என்று தொகையாகக் கூறுகிறோம்.

அஃறிணை நான்காம் வேற்றுமைத் தொகையிலும் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

கடிப்பகை

தலைவலிச் சூரணம்

பூச்சிக் குண்டு

மாட்டுத் தீனீ

வயிற்றுப் பாடு

எறும்புப் பொடி

நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

 ( இன்னும் வரும் )